search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளான்.
    • பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.

    பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.

    பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.
    • அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் ஆகஸ்ட் மாதம் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருந்த இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.

    ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) உறுப்பினர்கள், மாலியை தளமாகக் கொண்ட அல்கொய்தாவின் துணை அமைப்பான மற்றும் புர்கினா பாசோவில் செயல்படுகிறார்கள், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பர்சலோகோவின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றபோது கிராம மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஒருவர் கூறுகையில், மூன்று நாட்களாக நாங்கள் உடல்களை சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.

    போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாக்க நகரத்தைச் சுற்றி பரந்த அகழி வலையமைப்பைத் தோண்டுமாறு உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    JNIM கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2015-ம் ஆண்டு இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்துள்ளனர்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 248 ரன்களில் டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து கடைசி நாளில் 251 ரன்கள் எடுத்து வென்றது.

    செஞ்சுரியன்:

    இங்கிலாந்து அணி கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் லான்ஸ் குளூஸ்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேரில் கலினன் 40 ரன்னும், ஷான் பொல்லாக், பீட்டர் ஸ்டிரைடோம் தலா 30 ரன்னும் எடுத்தனர்.

    மழை காரணமாக 2, 3, 4-ம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடைசி நாளில் போட்டி தொடர்ந்தது. டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் 3வது நடுவரின் ஒப்புதலுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடாமலும், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடாமலும் இருந்தனர்.

    5வது நாளில் இங்கிலாந்து வெற்றிபெற 249 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அலெக் ஸ்டூவர்ட், மைக்கேல் வாகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்டூவர்ட் 73 ரன்னும், வாகன் 69 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 75.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் ஒரே இன்னிங்ஸ் மட்டும் ஆடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியா லு ரூக்ஸ்-க்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.
    • சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார்.

    ஜோகன்னஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் (வயது 28) என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்' என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார். ஆனால் பெற்றோர் நைஜீரியா, மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது தாயகம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.

    இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே தற்போது மாற்றுத்திறனாளியான மியா லு ரூக்ஸ் தென் ஆப்பிரிக்க அழகியாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட் லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

     

    பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் முடங்கி உள்ளனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்  இந்திய வீரர்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

     

     

    இதனால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே இன்று மாலை 6 மணிக்கு பார்படாஸிலிருந்து விமானம் மூலம் இந்திய அணி கிளம்ப உள்ளது.

    இன்று [ஜூன் 2] ஒரு இரவு பயணத்தின்பின் நாளை [ஜூன் 3] காலை 7.45 மணியளவில் இந்திய அணி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது. எனவே டெல்லி விமான நிலையத்தில் நாளை கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

    • 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
    • கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

    அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    • மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
    • இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

    கேப்டவுன்:

    தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர்.

    இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.

    அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.

    • ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    புற்றுநோயாளி ஒருவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவருடன் நர்ஸ் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    கொலம்பியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன் என்ற நோயாளிக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக அந்த வார்டு முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த வார்டில் உள்ள படுக்கைகளில் நோயாளிகள் அமர்ந்திருக்கும் நிலையில் ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் இந்த செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • தென் ஆப்பிரிக்காவில் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    பெனோஸ்:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை பெனோனி நகரில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது. முகமது கைப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையில் கோப்பை கிடைத்தது.

    இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை.

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
    • இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

    புளோம்பாண்டீன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.

    நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×