search icon
என் மலர்tooltip icon

    பீகார்

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டின் சொத்துக்களை அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே காங்கிரஸ் பகிர்ந்து கொடுக்கும் - மோடி
    • அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் "அதிக குழந்தைகள் பெற்றவர்கள், மக்களின் சொத்துகளை அள்ளிக்கொண்டு போவார்கள் என விமர்சித்த மோடி மற்றும் அவரது கூட்டணியின் நிலை குறித்து பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    1. சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸுக்கு 13 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    2. அரசியலமைப்பை உருவாக்கியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு 13 உடன்பிறந்தவர்கள் இருந்தனர்.

    3. பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரிக்கு 13 குழந்தைகள் உள்ளனர்

    4. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    5. முதல்வர் நிதிஷ்குமாருக்கு 4 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    6. பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    7 பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    8 பிரதமர் மோடியின் மாமா நரசிங் தாஸ்க்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    9. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு 6 சகோதரிகள் உள்ளனர்.

    10. முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு 6 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    11: தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்க்கு 9 சகோதர சகோதரிகள் உள்ளனர்

    12. தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    13. முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

    14. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை. விவாதிக்கப்படவும் இல்லை.
    • 70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பீடு திட்டம் வழங்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

    கயா:

    பீகார் மாநிலம் கயாவில் இன்று நடந்த பாரதிய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என அரசியலமைப்பை உருவாக்கியவர் கனவு கண்டார். ஆனால் நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அந்த வாய்ப்பை இழந்தது. நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்து விட்டது.

    அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனம் இல்லாவிட்டால் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த ஏழை பிரதமராகி இருக்க முடியாது. பொதுமக்களின் ஆசி, சேவை, நாட்டின் அரசியல் சாசனம் எனக்கு இந்த பதவியை வழங்கி உள்ளது. அரசியலமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.

    கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை. விவாதிக்கப்படவும் இல்லை. நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் வழங்கப்படும்.

    70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பீடு திட்டம் வழங்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

    பீகாரில் பல ஆண்டுகளாக ஆட்சி நடத்திய ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஏழைகளை கொள்ளையடிக்கும் கட்சியாக இருந்தது. அந்த ஆட்சியில் ஊழல் செய்வதே ஒரு தொழில் போல எங்கும் பரவி இருந்தது. அந்த ஆட்சி பீகாருக்கு கொடுத்தது இரண்டு தான். ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல். காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றன. சிம்னி விளக்கு மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முடியுமா? இந்த தேர்தல் பரந்த பாரதம், பரந்த பீகாருக்காக நடத்தப்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்
    • அரசியல் சாசனத்தை இயற்றியது பாபாசாகேப் அம்பேத்கர் என்பதுதான் அவர்களின் பிரச்சினை - லாலு பிரசாத் யாதவ்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக எம்.பிக்களின் இத்தகைய கருத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நமது அரசியல் சாசனம் சாதாரண பாபாவால் எழுதப்பட்டது அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை மாற்ற நீங்கள் யார்? ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து சமூக மக்களும் இதனை உங்களுக்கு புரிய வைப்பார்கள்.

    அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக மோடியும், பாஜக உயர்மட்டத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வெகுமதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டவர்களுடன் பாஜகவுக்கு என்ன பிரச்னை?

    அரசியல் சாசனம் பக்கம் அவர்களின் பார்வை போனாலும் கூட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தலித்களும் ஏழைகளும் அவர்களின் கண்களை பிடுங்கியெறிந்து விடுவார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற இவர்கள் யார்?

    அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க நினைக்கிறது பாஜக. மக்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் முதலாளித்துவ அடிமைகளாக்க நினைக்கிறார்கள்.

    பிரதமர் உண்மையில் பயப்படுகிறார். அவர் நாட்டு மக்களின் முன்பு அம்பலப்படுத்தப்பட்டதால் தேர்தல் தோல்விக்கு பயப்படுகிறார். அவரது தோல்வி பயத்தை மறைக்கவே அவர் பாஜக 370 க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பெருமை பேசுகிறார்.

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது, அதனால்தான் அவர்கள் அரசியலமைப்பை மாற்ற துடிக்கிறார்கள்" என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். 

    • லாலு பிரசாத்தின் மூத்த மகள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
    • இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி. இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்லிபுத்ரா தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளார்.

    பா.ஜனதா அதிகாரத்தை இழந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என மிசா பாரதி கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வெளியிடப்பட்டடு தேர்தல் பத்திரம் தொடர்பாக விசாரணை தேவை என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தேன். ஆனால் மீடியாக்கள் நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளன.

    இது தொடர்பாக மிசா பாரதி கூறுகையில் "நான் பிரதமர் பற்றி ஏதும் கூறவில்லை. என்னுடைய முழுக் கருத்தையும் வெளியிடுவதற்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட பகுதியை மீடியா வெளியிட்டுள்ளது. இது பா.ஜனதாவின் எஜெண்டா.

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா?. எந்த பிரச்சனை குறித்தும் பா.ஜனதா பேசுவதில்லை." என்றார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இதுபோன்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் பதவி மிகவும் மரியாதைக்குரியது. நாட்டில் இருந்து ஏதும் மறைக்கப்படவில்லை. மாட்டுத்தீவனம் ஊழலில் அவரது தந்தை தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் ஊழலில் மூழ்கியுள்ளது. அவள் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    • பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    • வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வருகிறார்

    பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.

    அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வரும் நிலையில், 4000 எம்.பிக்கள் என்று நிதிஷ்குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

    • பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் செல்கிறார்.
    • ஜல்பைகுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பாட்னா:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பீகார் மாநிலம் நவ்டாவில் அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர் மத்தியபிரதேச மாநி லம் ஜபல்பூர் செல்கிறார். அங்கு ரோடு ஷோ செல்கிறார்.

    அங்கிருந்து மேற்கு வங்காளத்துக்கு மோடி பயணமாகிறார். ஜல்பைகுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    பாட்னா:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    பீகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

    பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும். இந்த தேர்தல் இந்தியா மற்றும் பீகார் வளர்ச்சிக்கானது. பீகாரை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகியவை பலவீனப்படுத்தி வந்தன.

    காங்கிரஸ ஆட்சியில் இந்தியா ஏழ்மையாக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

    பா.ஜ.க.வின் 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரைலர்தான். வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக வளர்ச்சியை காணப் போகிறீர்கள். இது என்னுடைய வாக்குறுதி.

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிராக காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதா தளம் செயல்பட்டன. ராமர் கோவில் கட்டுமானத்தை காங்கிரஸ் தடுத்தது. ஆனால் நாங்கள் கோவிலை கட்டினோம்.

    இப்போது உணவுக்காக பிச்சை எடுக்கும் சிறிய நாடுகள் (பாகிஸ்தான்) ஒரு காலத்தில் நம் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு வெளியேறின.

    காங்கிரஸ் மற்ற நாடுகளுக்கு உதவி கேட்டுச் செல்வது வழக்கம், ஆனால் அது பலிக்காது என தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
    • இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.

    பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.

    • பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
    • காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

    பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்டினாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரங்களில் எப்போதுமே வாரிசு அரசியல் குறித்து பேசுவார். ஆனால், பீகாரில் அவரது முதல் தேர்தல் பிரசாரம், அவரது பேரணி வாரிசு அரசியல்வாதிக்காகவே அமைந்தது. இது மோடி சொல்வது என்ன? அதை எப்படி செயல்படுத்துகிறார் என்ற வேறுபாட்டை காட்டுகிறது" என்றார்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி ஆகியவற்றை குடும்ப அரசியல் என கடுமையாக விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

    கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40 இடங்களில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் கடந்த முறை பா.ஜனதா 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முனைப்பில் கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பா.ஜனதா, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதனால் அதிருப்தி அடைந்த அஜய் குமார் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    பீகாரில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதும், ஒருவரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதும்தான் முக்கிய வேலை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட இறுதி ஆசை என்ன என்பதை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முன் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பண அதிகார தேர்தலாக இருக்காது. மக்கள் வலிமையின் தேர்தலாக இருக்கும்" என்றார். 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா பீகாரில் 40 தொகுதிகளில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×