search icon
என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
    • பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இது தவிர அமாவாசை தினங்களிலும், புயல் சின்னங்கள் ஏற்படும் போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்பட்டினம், பிள்ளைத்தோப்பு, பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் எழும்பிய ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது. சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்பொழுது 235 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை சூழ்ந்த தண்ணீர் நேற்று மாலை முதலே வடிய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்துள்ளது.

    பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் மூலமாக தண்ணீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    இதுமட்டுமின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரோடுகள் சீரமைப்பு மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்தாலும் அழிக்காமல், பிள்ளைத்தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மணல் அதிகளவு காணப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து வீடுகளுக்குள் கிடக்கும் மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. பிள்ளை தோப்பு பகுதியில் 34 வீடுகளும் அழிக்கால் பகுதியில் 41 வீடுகளிலும் மணல் குவியல்கள் உள்ளன. அந்த மணல் குவியல்களை பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அழிக்கால் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்க வில்லை. இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின.
    • வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

    அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கடல் நீர் புகுந்ததுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தனர்.

    மேலும் சிலர் கடல் நீர் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கும் வகையில் வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

    கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலையிலும் அழிக்கால் பிள்ளை தோப்பு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. லெமூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தற்காலிக கடைகள் வரை வந்து சென்றன. இதனால் அங்குள்ள கடைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருந்ததுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

    தேங்காய் பட்டினம், இரவிபுத்தன் துறை, வள்ளவிளை, பூத்துறை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள வீடுகள் வரை வந்து சென்றன. அந்த பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீதும் வேகமாக மோதியது. இதனால் கடற்கரையில் உள்ள மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

    கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் சொத்தவிளை, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • செக்காரவிளையில் ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்துவைத்தார்.
    • கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

    குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

    நெய்யூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கண்ணோடு 1-வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி 11.80 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

    இதேபோல், கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம் அருகே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தேன் என பதிவிட்டுள்ளார்.


    இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • அனைத்து பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கலெக்டர் அழகு மீனாவும் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    அனைத்து துறை அதிகாரிகளும் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர நீர் நிலைகள் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீர் நிலைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே குமரி மாவட் டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 551 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 43.75 அடியாக உள்ளது. அணைக்கு 566 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.12 அடியாக உள்ளது. அணைக்கு 285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1-அணையின் நீர்மட்டம் 14.24 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.58 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 50.11 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 17.10 அடியாகமும், பொய்கை நீர்மட்டம் 14.80 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களின் நீர்மட் டத்தையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சில குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை எச்சரிக்கை காரணமாக காளிகேசத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
    • இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதற்கிடையே பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1077, 04652 231077 மற்றும் 93840 56205 ஆகிய அவரச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை விடுமுறை நாளான கடந்த 11-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 642 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையையொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 5 ஆயிரத்து 885 பேரும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுமார் 10 ஆயிரம் பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    அதேபோல வட்டக்கோட்டைக்கு இயக்கப்படாமல் முடங்கி கிடந்த சொகுசு படகுகள் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 345 பேர் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். நேற்று 75 பேரும், நேற்று முன்தினம் 136 பேரும், 10-ந்தேதி 134 பேரும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்துள்ளனர்.

    ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி வட்டக்கோட்டைக்கு கடந்த 3 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரம் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கான உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்தார். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த தகவல் கட்சியின் தலைமைக்கு சென்றுள்ளது.

    அது மட்டுமின்றி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் வருகையின் போதும் அவரை சந்தித்து பேசி இருக்கிறார். இவையே அவர் நீக்கப்பட்டற்கான காரணமாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக குமரி கிழக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. இந்தநிலையில் தான் அவர் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

    தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், "எது நடந்தாலும் ஓகே. ரைட் என சொல்ல வேண்டியத தான். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வின் பலம் குறையும் என்று நினைத்திருக்கலாம் நடப்பதை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் புதிய மாவட்ட செயலாளராக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார்.

    இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சை மால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சிலர் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக யாரும் நியமிக்கப்படுவார்களா? அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவாரா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.

    ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."

    "இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலாp பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

    வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை கடற்கரை, கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
    • பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருடன் கலந்து கொண்டேன். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாற்று நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினேன்.

    கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

     அதுவரை பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் சார்பில் நாகர்கோவில், வேற்கிளம்பி மற்றும் குளச்சல் பகுதிகளில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்து கொண்டேன்.

    • பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
    • வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இதுஒரு உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு மட்டும் தான் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

    ஆனால் இந்த அபூர்வ நிகழ்வை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இந்தநிலையில் மாலை கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு இருந்தனர். மாலை சரியாக 6.20 மணிக்கு சூரியன் மறைந்தது. சூரியன் மறையும்போது வானத்தில் அபூர்வ நிகழ்வு தோன்றியது.

    வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது. அதற்கிடையே சூரியன் மறையும்போது அதனுடைய பிரதிபலிப்பு வானத்தில் அபூர்வமாக காட்சியளித்தது.

    செம்பழுப்பு நிறத்தில் தீப்பிழம்பு போல் வானத்தில் அந்த அபூர்வ நிகழ்வு தோன்றியது. இந்த அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    ×