search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான்.
    • திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

    உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மு.க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்போது எனது குடும்பத்தில் யாரும் அதாவது மகனோ, மருமகனோ வேறுயாரும் திமுகவிற்கு எந்த பதவியிலும் வரமாட்டார்கள் என்று கூறினார். நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்றும் கூறினார்.

    இப்போது உதயநிதிக்கு முதலில் இளைஞர் அணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இனி துணை முதலமைச்சர் என்று பதவிகள் வழங்கப்படுகிறது.

    அ.தி.மு.க. மட்டும் தான் ஜனநாயக இயக்கம். அடுத்து தொண்டர்களும் மேலே தலைவர்களாகளாம், பொது செயளாளராகளாம், முதலமைச்சராகளாம்.

    திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

    பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி.

    முதலில் கருணாநிதி. அதன் பிறகு மு.க.ஸ்டாலின். பின்னர் உதயநிதி. இன்று மூத்த தலைவர் துரைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோலில் துக்கிட்டுப் போவோம் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய சேலம் அணி 171 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை 175 ரன்களை எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 19 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கடைசி 11 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேலம் அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் கோவை அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கோவை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும்.

    சேலம் சார்பில் பொய்யாமொழி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    • நமது நாட்டில் தலைப்பு செய்தியில் இடம்பிடிப்பது மிகவும் எளிதானதாகும்- சந்தோஷ்
    • கேமராக்களுக்காக திட்டமிட்டே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்- அமித் மால்வியா

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே பங்கேற்றார்.

    கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாதியிலேயே வெளியேறினார். அப்போது தனக்கு பேசுவதற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்த சம்பவத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மம்தா பானர்ஜி வெளியேறியது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என பாஜக பதில் கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக பொது செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் கூறியதாவது:-

    நமது நாட்டில் தலைப்பு செய்தியில் இடம்பிடிப்பது மிகவும் எளிதானதாகும். முதலில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர் நான் மட்டும்தான் எனச் சொல்ல வேண்டும். பின்னர் வெளியே வந்து, மைக் ஆஃப் செய்யப்பட்டதால் வெளிநடப்பு செய்தேன் எனச் சொல்ல வேண்டும். தற்போது ஒருநாள் முழுவதும் டிவியில் இதுதான் ஒளிபரப்பாகும். வேலை இல்லை. ஆலோசனை இல்லை. இதான் திதி (மம்தா) உங்களுக்கு" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக-வின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா "கேமராக்களுக்காக திட்டமிட்டே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். ஒரு முதல்வர் தீவிரமான ஆட்சிப் பிரச்சனைகளை நாடக நடத்தையாக குறைப்பது வருத்தமளிக்கிறது. அவரது மோதல் அரசியலின் விளைவாக மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.

    • பெண் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரத்தம் சொட்ட அந்த பெண் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்லி அனன் விஹார் பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பாக மோனு சக்சேனா என்ற டீலருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும், கட்டிடத்தின் முதல் மாடியின் கூரையில் நின்றுக் கொண்டு கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

    அப்போது வாக்குவாதம் முற்றியதில், சக்சேனா திடீரென இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.

    இதில், அந்த பெண் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தலையில் இருந்து ரத்தம் சொட்ட அந்த பெண் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவத்தில், "முழு விசாரணை அவசியம் எனவும், பிரச்சினை எதுவாக இருந்தாலும், கூரையில் இருந்து தள்ளிவிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தயக்கிமின்றி துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அதனால், டெல்லி போலீஸ், டெல்லி கவர்னர், ஆம் ஆத்மி அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள்
    • மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியது தி.மு.க.-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.

    தி.மு.க. எப்போதுமே சந்திக்காத ஏச்சுக்களும், பேச்சுக்களும் இல்லை. 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள். இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கி பார்த்தால், தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகவும், வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாகவும் இருப்பார்கள்.

    முதல்வர் நெஞ்சிறத்துடனும், நேர்மையுடனும் இந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதால், வஞ்சனை எண்ணத்தோடு ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பற்றி முதல்வர் கவலைப்படுவது இல்லை. மக்களுடைய நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவர்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
    • சுப்மன் கில் கடின உழைப்பாளி, அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் போகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்தநாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.

    இதற்கிடையே, ஆர்.சி.பி. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுப்மன் கில் சில காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுற்றி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் ஒரு துணை கேப்டன். அவருக்கு திறமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

    அவர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பணியாற்றினால், பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் இன்னும் நிறைய மேம்படுத்த முடியும். கேப்டனாகவும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது.

    இந்த ஆண்டு அவர் குஜராத்துக்காக (டைட்டன்ஸ்) தொடங்கினார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வைப்பது கொஞ்சம் வேலை என அவருக்குத் தெரியும். அதை நோக்கி அவர் செயல்படுவார். சுப்மன் கில் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் கடின உழைப்பாளி. அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப் போகிறது என தெரிவித்துள்ளார்.

    • அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும்.
    • தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் 'சமஸ்கிருதம்' தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?

    அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் 'தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது' என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

    ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
    • ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக தனி மெஜாரிட்டி பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை. மக்களவை தேர்தலில் அவர் தார்மீக தோல்வியை அடைந்துள்ளார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவை தலைவரான ஜெக்தீப் தன்கர், கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என வேதனை அடைந்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெக்தீப் தன்கர் கூறியதாவது:-

    மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உங்களுக்கு (மாநிலங்களவை உறுப்பினர்கள்) சுதந்திரம் உள்ளது. ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.

    சில உறுப்பினர்கள் செய்தித்தாள்களில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவையைவிட்டு வெளியேறிய உடனே மீடியா அறிக்கைகளை வெளியிடுகின்றனர். பிரபலம் அடைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றன.

    உறுப்பினர்கள் அவர்களுடைய பேச்சுக்கு சற்று முன் அவைக்குள் வருகிறார்கள். பின்னர் உடனடியாக வெளியேறுகின்றனர். அவைக்குள் இருக்காமல் வந்தோம் சென்றோம் யுக்தியை கடைபிடிக்கிறார்கள்.

    அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் சுதந்திரங்களின் கோட்டையாக பாராளுமன்றம் உள்ளது. சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டபோது, அவைத் தலைவர்கள் தங்களது சமயோஜித செயலால் அதை சிறப்பாக கையாண்டுள்ளனர்.

    ஆனால் நிலைலை தற்போது மிகவும் மோசடைந்துள்ளது. கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயக ஆன்மாவுக்கான அடியாகும்.

    இவ்வாறு ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நிர்பயா நிதி மூலம் தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெண்கள் ஆதரவு பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையில் புதிதாக 13 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதே போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தகவல்.
    • உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறை கூறுகையில், " ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த டாடா சுமோ டக்சம் அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது".

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

    இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 1,18,296 கன அடியாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகாரிப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

    • கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.
    • கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது.

    மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.

    இதனால், காலியாக உள்ள கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில், கோவை மேயர் பதவியை பிடிக்க 6 பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

    அதன்படி, கோவை திமுகவில் பரீட்சயமான முகமான 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 34வது வார்டு கவுன்சிலர் மாலதி, எம்.பி கனிமொழி மூலம் மேயர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதேபோல், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 36வது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரும் கோவை மேயர் போட்டியில் உள்ளனர்.

    ×