search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வர். இந்த சூழலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவில் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நாளை முதல் முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அனைத்து ரக பட்டாசுகளும் crackersindia மூலம் 85 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

    தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.

    குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவுக்கு பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம்.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன. சிவகாசியில் பட்டாசுகள் வாங்க மக்கள் அலைமோதுகின்றன.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன.

    கைகளில் சுத்தி விளையாடும் கம்பி மத்தாப்பு, தரையில் வேடிக்கை காட்டும் சங்கு சக்கரம், கண்களுக்கு விருந்து அளிக்கும் வாண வேடிக்கைகள் பொதுமக்கள் ஆர்வமாக வாங்குவதால் இந்த தீபாவளி பட்டாசுகளும் மத்தாப்புகளும் நிறைந்த கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும் என்பதே உண்மை.

    பட்டாசுகள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள்ளே, டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக் அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. crackersindia

    85% சிறப்பு தள்ளுபடில சும்மா சூப்பரான crackersindia Rs. 2500/- ரூபாயிலே பட்டாசு கிடைக்குது Rs. 6000/-க்கு மேல் வாங்கினீங்கனா இலவச டோர் டெலிவரி கிடைக்கும்.

    முந்துங்கள்.

    ஆர்டர் செய்ய :

    Whats app மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

    தொடர்புக்கு. WhatsApp no.99949 17010

    தீபாவளிக்கு வாண வேடிக்கை காண

    புக் செய்ய கடைசி தேதி 26.10.2024

    • வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒத்தபுலி கிராமத்தில் பழனியப்பா நகர் பகுதியில், சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகா கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியில் பட்டாசுகள் இருப்பு வைப்பதற்காக குடோன் ஒன்றும் வைத்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையிலான பட்டாசு ரகங்களை ராஜேந்திரன் தன்னுடைய குடோனில் இருப்பு வைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒத்தபுலி கிராமத்தில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டாசு குடோன் மீது இடி, மின்னல் தாக்கியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் மழையிலும் நனைந்தவாறு பல மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.

    இருந்தபோதிலும், தொழிலாளர்கள் யாரும் அப்போது பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் 3-வது மகன் சுப்பிரமணிக்கு (34) மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தந்தை ராமசாமியை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன் வழக்கம்போல் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    ஆனால் ராமசாமி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்பிரமணி தந்தையை தாக்கினார். இதையடுத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமசாமி மகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராமசாமிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதற்காக அவர் மருந்துகளை உட்கொண்டு வந்தார். மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    • பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    விருதுநகர்:

    காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசு கள்ளச்சாராயத்தையும், போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசுடன் காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தை வஞ்சிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து என்றைக்கு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை.

    பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகின்றது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்துகின்றது என மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அறிவார்ந்த மக்கள் உள்ளதால் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் அது யூடர்ன் எடுக்கின்றது. அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. 2024 தேர்தலுக்கு பின்பு அந்த வீரவசனம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவில் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பதி உண்டியலில் கை வைத்து விட்டார்கள் என பவன்கல்யாண் புகார் கூறியுள்ளார். பவன்கல்யாண் பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இருக்கின்றார். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ.2,000 நிதி, படிக்கின்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.6,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதனை மறக்கடிக்க மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, நாகேந்திரன். நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    விருதுநகர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.

    இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

    பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

    தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் விளையாட்டு வீரர் சாதனையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உலகளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

    ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

    கடந்த 3 வருடங்களில் 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிதந்துள்ளார். இன்றைக்கு இந்திய ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.

    விளையாட்டு துறையில் சாதிக்கத்துடிக்கும் மகளிருக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்

    இவ்வாறு அவர் பேசினார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
    • ரூ.3.85 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்

    விருதுநகர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார்.

    துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக வருகை தந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.

    இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலி னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

    பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,386 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழா நிறைவடைந்ததும் மீண்டும் மதுரை வருகை தந்த அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
    • சோதனை செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதோடு மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

    காலையில் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் வேகமாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் சரிவர மழை பெய்யாததால் தாணிப்பாறையில் உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது.

    புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். காலாண்டு விடுமுறை தினமாக இருந்தும் மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

    நாளை மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 3-ந் தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது.

    • அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
    • 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.

    இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் கூறுகையில், 'தங்க நாணயத்தின் ஒரு பகுதி இதழ்கள் வடிவிலும், மறுபகுதியில் புள்ளி கோடுகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் தங்க ஆபரணம் போன்று தங்க நாணயத்தையும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் செய்துள்ளனர். 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.

    இந்த தங்க நாணயத்தை பார்க்கும்போது முன்னோர்கள் அதிகமாக ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    குறிப்பாக ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை 2-ந்தேதி வருகிறது. இதையொட்டி பக்தர்கள் வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மகாளய அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை மற்றும் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருமங்கலம், மதுரை, விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை கோவிலுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. பாலித்தீன் கேரிப்பை மற்றும் மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு வரக்கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந்தேதி பிரதோஷத்தை முன்னிட்டும், 2-ந்தேதி அமாவாசை அன்றும் சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    • ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
    • வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள் தேவையான மருந்தை அதகளவில் வாங்கி இருப்பு வைப்பது வழக்கம்.

    சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சாத்தூர் அருகே உள்ள முத்தல் நாயக்கன்பட்டியில் திருமுருகன் என்ற பெயரில் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்று இந்த ஆலை வளாகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது.

    சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனால் எழுந்த வெண்ணிற புகைமூட்டம் விண்ணை தொடுமளவுக்கு இருந்தது. அடுத்தடுத்த எழுந்த பயங்கர சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அவர்களால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது உராய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பட்டாசு ஆலையே அடையாளம் தெரியாத வகையில் தரைமட்ட மாகியது.

    சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர், வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். முழுமையாக வெடிகள் வெடித்து பின்பு தான் விபத்து பகுதிக்கு செல்ல முடியும் என்பதால் உயிர்பலி குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவு.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 4 பேர் உயிரழிந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (27.9.2024) காலை 8.00 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், திருவில்லிப்புத்தூர் காந்திநகரைச் சேர்ந்த திரு.மாடசாமி (வயது 29) த/பெ. குருசாமி: செல்வன்.வாசுராஜ் (வயது-16) த/பெ.செல்வராஜ்: செல்வன் நிதிஷ்குமார் (வயது 17); ஆகிய இரண்டு மாணவர்கள் மற்றும் செல்வன்.சதிஸ்குமார் (வயது 20) த/பெ.கோவிந்தன் என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் க்றிப்பிட்டுள்ளார்.

    ×