என் மலர்

    வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9-ந்தேதி வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அம்மனாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.

    விழாவையொட்டி நாடியம்மனுக்கு கடந்த மார்ச் 28-ந்தேதி காப்பு கட்டி வருகிற 4-ந் தேதி வரை மூலஸ்தானத்தில் இருந்து அன்று இரவு சீவிகாரோகண காட்சியுடன் அம்பாள் கடைத்தெருவில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. 5-ந்தேதியில் இருந்து தினமும் காலை, இரவு இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் அம்பாள் வீதி வலம் நடைபெறுகிறது.

    9-ந்தேதி இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா நடைபெற உள்ளது. 10-ந்தேதி காலை பல்லக்கு, இரவு ஓலைச்சப்பரம், 11-ந்தேதி காலை புஷ்ப பல்லக்கில் நவநீத சேவை (வெண்ணெய் தாழி) இரவு குதிரை வாகனக்காட்சி நடைபெறுகிறது.

    12-ந்தேதி காலை நாடியம்மன் மூலஸ்தானம் (கோவில்) சென்று மாவிளக்கு மற்றும் காவடி திருவிழாவும் நடைபெறும். 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். 15-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கில் நாடியம்மன் கோட்டைக்கு செல்லுதல் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு இன்னிசை கச்சேரி, நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்ஜித சேவைகள் நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தினமும் மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    2-வது நாளான 4-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு ெசல்கிறார்கள். அங்கு வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    3-வது நாளான 5-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, கிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை கோவிலுக்கு திரும்புவார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் காணிக்கையாளர்களின் உதவியோடு பல்வேறு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேக பழங்கள், உலர் பழங்கள், மலர்கள் தருவிக்கப்பட உள்ளன.

    வசந்தோற்சவத்தையொட்டி கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவினாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர். ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
    • 9-ந்தேதி \ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஏசுகிறிஸ்து சிலுவை பாடுகளையும், உயிர்தெழுததையும் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள்.

    தவக்காலத்தில் இறுதி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனிதவாரத்தின் முதல் நாளான இன்று குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

    பாளை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர். இதே போல் கதீட்ரல் பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

    மேலும் பணகுடி, திசையன்விளை, அம்பை, வி.கே.புரம், சேரன்மகாதேவி, ராதாபுரம், கூடங்குளம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

    தூத்துக்குடியில் இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் முன்னிலையில் குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.

    பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் சேகரம் சார்பில் குருத்தோலை கீதபவனி ஆலயம் முன்பு இருந்து புறப்பட்டது. ஓசன்னா என்ற பாடலுடன் புறப்பட்ட ஊர்வலத்தில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஊர் முழுவதும் சுற்றி வந்த பவனி பின்பு வடக்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார், சந்தையடிதெரு வழியாக ஆலயத்தை வந்து அடைந்தது.

    இதேபோல பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்தில் சார்பாக சிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பவனி ஊர் முழுவதும் மற்றும் புதுமனை வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயம் அடைந்தது. உடன்குடி அருகே உள்ள வேதகோட்டை விளை, சந்தையடியூர், தங்கையூர், கொட்டங்காடு போன்ற கிராமப்புற பகுதியி லும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து ஆலயங்க ளிலிருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய குருவானவர் டேனியல் தனசன், புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ஆலங்குளம், அண்ணாநகர், நல்லூர், அடைக்கலப்பட்டணம் , ரட்சணியபுரம், ஊத்துமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சி. எஸ். ஐ. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலை களை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.

    கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரி திருத்துவ ஆலயத்தில் மேட்டூர் சேகர உதவி குரு ஜோயல் சாம் மெர்வின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    பல்வேறு வீதி வழியாக சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 6-ந்தேதி பெரிய வியாழன் கடைப்பிடிக்கப்படு கிறது. இதையொட்டி பாதம் கழுவுதல் நடைபெறுகிறது. 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடை பெறும்.

    9-ந்தேதி ஏசுகிறிஸ்து உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
    • இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது மழை பெய்ததால் பலர் குடை பிடித்தபடி சென்றனர்.

    இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை காலையிலேயே அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஏராளமானோர் திரண்டனர். நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் காலை 6.30 மணிக்கு குருத்தோலை பவனி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. நாகர்கோவில் அசிசி ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம்உள்பட மாவட்டடத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடை பெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர்.

    குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற 3,4 மற்றும் 5-ந் தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
    • மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பங்குனி திருவிழா 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    திருச்சியை அடுத்த வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தென் தமிழகத்தில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாடல் அருளிய தலமாகும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இந்த கோவிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளதால் சுவாமி திருவீதி உலா கோவிலின் உள்ளே நடைபெறும். அபிஷேகம் மற்றும் இதர அபிஷேகங்களும் நடைபெற உள்ளது.

    வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் பங்குனி உத்திரப் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணிகளை சோமரசன்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர் செய்துவருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடக்கிறது.
    • 4-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முன்னதாக அன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வர தொடங்கியுள்ளனர். மயில் காவடி எடுத்து பக்தர்கள் ஆடி வருகின்றனர்.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கிரிவீதிகளில் மேள, தாளத்துடன் ஆடிப்பாடி உலா வருகிறார்கள். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் மதிய நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் மொத்தம் 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
    • ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கொரோனா தொற்று பரவலால் 3 ஆண்டுகளாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் சோதனை முறையில் நேற்று காலையில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளது.

    அலிபிரி நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு காளிகோபுரத்தில் 10 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 1,250-வது படியில் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

    ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திவ்ய தரிசன டோக்கன்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்படுகின்றன. இதைப் பக்தர்கள் கவனித்து திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில், சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. தினசரி காலை 8 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு நேர பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி இரவு பெரியவர்கள், இளைஞர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சேவூரில் உள்ள ராஜவீதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி, ஐஸ்கடைவீதி, தெற்கு சேவூர் மற்றும் ராக்கம்பாளையம் பொதுமக்கள் என சுமார் 750-க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபடுகிறார்கள்.

    அதையடுத்து காலை 9 மணிக்கு, பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள், (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில், நாளை பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்படும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print