search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படும்
    • விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (விதை உற்பத்தி) என்ற தலைப்பில் வருகிற 11.12.2023 முதல் 16.12.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

    வேளாண் அறிவியல் நிலைய பேராசியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று பயிற்சியை நடத்தவுள்ளனர்.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் 18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

    பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்களே போக்குவரத்து செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இப்பயிற்சியில் 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு அழைத்துச் சென்று விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் முதல் நாள் பங்கு பெறும் விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து 6 நாட்கள் பங்கேற்க வேண்டும்.

    தொடர்ந்து விடுப்பின்றி கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டும் பயிற்சியின் இறுதிநாள் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

    பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில்

    நடைபெறுகிறது.

    விதை உற்பத்தியில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் தங்களது பெயரை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 30.11.2023க்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
    • முகாமில் 30 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் 300 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    77 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறிப்பட்டு மேல் சிகிச்சசைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.

    கண் சிகிச்சை முகாமினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜகுமார் முகாமை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்க தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் பரமசிவம், மருத்துவர் சந்தீப் தலைமையிலான மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தனர்.

    இதில் சென்ட்ரல் லயன் சங்க செயலர். மோகன்ராஜ் மற்றும் பொருளாளர் லயன்ஸ் மகாவீன் சந்த் ஜெயின், குரு.ராகவேந்திரன், கலியமூர்த்தி, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் தலைவர் வேல்விழி, செயலாளர் மகாலட்சுமி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கார், வேண், ஆட்டோ, ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் கண்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திடவும், ஆண்லைன் அபராதத்தைதை கைவிடக் வேண்டும். ஆர்.டி.ஓ. காவல்துறை மாமுலை கட்டுபடுத்தி, இனைய வழி சேவையை தொடங்கிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பஜனைமட சந்து ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் விஸ்வநாதன், உரிமைக்குரல் ஓட்டுனர்கள் சங்க மண்டல தலைவர் பாலமுருகன், காளியாகுடி ஓட்டுனர் சங்க சி ஐ டி யு உறுப்பினர் ஜோதிக்கண்ணன் மற்றும். குத்தாலம் மணல்மேடு திருக்கடையூர் தேரிழந்தூர் ஆக்கூர் சீர்காழி திருமலைவாசல் வைத்தீஸ்வரன் கோயில் நீடூர் மயிலாடுதுறை ரயிலடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான, கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவிகளை போலீசார் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
    • நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    இளம் வயதில் தவறான, தீய வழிகளில் கவனம் செலுத்தாமல், படிப்பு மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி அதில் ஈடுபாடுடன் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கில் சீர்காழி சட்டநாதபுரத்தில் காவல்துறை சார்பில் சிறுவர், சிறுமிகள் மன்றம் தொடங்கப்பட்டு அதில் கேரம்போர்டு, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள், சாரணர் ஆசிரியரை கொண்டு கற்றுதரப்படுகிறது. சுமார் 48 மாணவ-மாணவியர் பயின்று வரும் நிலையில் இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மாணவ-மாண விகளுடன் கலந்துரையாடி லட்சியத்துடன் கல்வி பயின்று அதனை நோக்கி நாம் தினந்தோறும் முன்னேறி செல்லவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.

    பின்னர் மாணவ -மா ணவிகளை காவல்துறையின் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிபிரிவு காவலர் மூர்த்தி உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொள்ளிடத்தில் 107 மி. மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
    • பூம்புகார் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை மூன்றாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில், கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி மயிலாடு துறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெ ண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான வெயிலும் விட்டு,விட்டு சாரல் மழையும் பெய்து வந்த நிலையில், இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சீர்காழி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. மழை விட்டு பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைத்து ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது நள்ளிரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்தது. இன்று காலை வரை சீர்காழியில் 67 மில்லி மீட்டரும், கொள்ளிடத்தில் 107 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 312 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

    காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கனமழை காரணமாக நேற்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர். ராஜேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதனால் பழையாறு திருமுலைவாசல் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் ஏற்றி தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி மேம்பாலத்தில் இருந்து குத்தாலம் செல்லும் இறக்கத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி முகவர் வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் உள்பட 3 பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி உடனே விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியின் காரில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றி கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
    • ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.

    இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.

    இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்.
    • கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    நவ கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோவிலுக்கு நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் தரிசனம் செய்தார். கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • விவசாயிகளின் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர்.

    அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.

    தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் அனைவரும் கோவிலில் உள்ள பிற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை என்றார்.

    அப்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14-அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலைவர் இளம்வழுதி தலைமையில் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கி வந்ததை ரத்து செய்ய ப்பட்டுள்ளது, எரிபொருள் படி மாதம் ரூ.2500 வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print