search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. அதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று பிற்பகலில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளிக்க உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது.

    மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
    • கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.

    ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.

    இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
    • பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முதல் போதிய அளவு மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

    கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் மூலம் சிற்றாற்று பாசன வசதி பெரும் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் தென்காசி, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் அந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அதேநேரம் பாவூர்சத்திரத்திற்கு தென் பகுதியில் நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், பண்டாரகுளம் உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் அமைந்துள்ள குளங்கள் நிரம்பாமல் புற்கள் மட்டுமே வளர்ந்து காணப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜம்பு நதியின் மேல்மட்ட கால்வாய் பணிகள் தொடங்கப்பட்ட பொழுதிலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் போதிய மழை இருந்தும் தங்கள் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பாமல் தாங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    எனவே ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு நிரம்பாத குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகளை வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடிவந்தனர்.
    • சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

    இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார். அவரிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? அவர் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனார்(57) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. லட்சுமணனுக்கு தி.மு.க.வில் பெரிய அளவில் பொறுப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி தன்னை இளைஞரணி நிர்வாகி என்று கூறி கொண்டுள்ளார்.

    பின்னர் தனக்கு பழக்கமான அய்யனார் மூலமாக அவரது உறவினர் பெண்ணான சித்ராவிடம் நைசாக பேசி நம்ப வைத்து முதலில் ரூ.25 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் அவரிடம் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு ரூ.1 லட்சம் வேண்டும் என்று கூறி பல்வேறு தவனைகளாக மொத்தம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் மற்ற 2 பேர்களிடமும் இதேபோல் தலா 8 லட்சம் பெற்றுள்ளார் என்பதும், இவர்களை அய்யனார் தான் லட்சுமணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும்.
    • கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்திருப்பதால் உற்சாகம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறினர்.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும். தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ண மியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்த னர். கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்தி ருப்பதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் உற்சாகம் ஏற்படுவதாக கூறினர்.

    மேலும் கிரிவலம் முடிந்த பின்பு உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
    • மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல இலந்தை குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.

    இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராஜா எம்.எல்.ஏ. அரசின் மூலம் வழங்கப் படும் உதவிகள் அனைத்தும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய படும் என தெரிவித்தார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், பெரியதுரை, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், அச்சம்பட்டி ஊராட்சி தலைவர் அல்லி துரை சண்முகதாய், மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ள பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீமராஜ், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மூவிருந்தாளி கிளை செயலாளர் ஜோசப், மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் பாலின வன்முறை தவிர்த்தலுக் கான உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம். பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். பேரணியில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்னபால் சாந்தி, பெண்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒன் ஸ்டாப் சென்டர் பணியா ளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.