search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர்.
    • கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரையில் நேற்று இரவு பில்லாலி தொட்டியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் விழா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென்று 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சு அரிவாளுடன் மண்டபத்திற்கு வந்தனர்.

    அங்கு நடைபெற்ற ஒலிபரப்பான பாடலுக்கு கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை சேதம் செய்து அனைவருக்கு அச்சமூட்டினர்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள், திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளர் தி.மு.க. நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் தனது வணிக நிறுவனத்தை மூடிவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சன் பிரைட் பிரகாஷ் மீது கத்தியால் தாக்கியதில் வாய், மூக்கு பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில தனியார் மருத்துவமனையில் சன் பிரைட் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி தி.மு.க.வி னரிடையே பரவியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீசார் விசாரணை செய்ததில் இந்த 3 பேரும் பில்லாலி தொட்டி எய்தனூரை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தகவல் அறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்த சன் பிரைட் பிரகாஷை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் பொதுமக்க ளை மோட்டார் சைக்கிளில் சென்று அச்சுறுத்திய நிலையில் எம்.எல்.ஏ ஆதரவாளரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதும க்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் அதற்கான உபகரணங்கள் சர்வே உட்பிரிவு ஒன்றுக்கு ரூ.10 வழங்கும் பட்சத்தில் இப்பணியை செய்ய இயலும் என தீர்மானம் வழங்கிய நிலையில், இப்பணியை செய்யாத தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமமூர்த்தியை எந்த ஒரு விளக்கமும் இல்லாமல், பணியிடை நீக்கம் செய்த கடலூர் கோட்டாட்சியரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட செயலாளர் ஜெயராமன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தி என்பவரை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவருக்கு உடனடியாக ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்வதால் வருவாய் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புவனகிரி:

    புவனகிரி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பு. மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார்.
    • தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் கலெக்டர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் இருந்தார்.

    நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமித்தது.

    கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐ.ஏ.எஸ். பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று உள்ள நிலையில் அவரது மனைவி அனு கடலூர் மாநகராட்சியில் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.
    • அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    துபாயில் உள்ள துறைமுகத்தில் இருந்து சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்த விபத்தில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 16 பேர் சிக்கினர்.

    அவர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.

    இந்நிலையில் மாயமான தனஞ்செயனை மீட்டுத்தரக்கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி எழிலரசி (வயது 31) குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மனு அளித்தார். ஆனால் அந்த மனு தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வந்த எழிலரசி, விபத்தில் சிக்கி மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, விபத்து நடந்து 6 நாட்கள் ஆகியும் எனது கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது கணவரை மீட்டுத்தர அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அப்போது அங்கு வந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகர், கடலூர் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதனை ஏற்று எழிலரசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.
    • கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.

    கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

    சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    மங்கலம்பேட்டை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் ஊராட்சியின் புதுக் காலனி மற்றும் பழைய காலனியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனார்.

    இங்கு குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வருவதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

    இதனால் பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கி அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எம். அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் முன் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • 6 தனிப்படையினர் நெல்லிக்குப்பம் பகுதியில் தனி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நெல்லிக்குப்பத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை முடுக்கியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள காரமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் கமலேஷ்வரி (வயது60). இவர் தனது மகன் சுகுந்தகுமார்,பேரன் நிஷாந்துடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் மர்மநபர்கள் இவர்கள் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்து உடல்களை தீ வைத்து எரித்தனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுகுந்தகுமார் ஐதாராபாத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வார். இதற்கிடையே அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டதால் அவர் வேலை பார்த்த ஐதாராபாத்துக்கு சென்று ஒரு தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 6 தனிப்படையினர் நெல்லிக்குப்பம் பகுதியில் தனி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    3 பேர் கொலை தொடர்பாக கமலேஷ்வரியின் வீடு உள்ள பகுதியில் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், சுகுந்தகுமாரின் நண்பர்கள், அப்பகுதி வட்டாரத்தில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் யாரும் சரியான தகவல் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

    சுகுந்தகுமார் குடும்பத்தினர் 4 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒரு செல்போன் உபயோகத்தில் இல்லாமல் உள்ளது. மற்ற 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

    விசாரணையில் சுகுந்தகுமார் பயன்படுத்திய ஒரு செல்போனில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. அந்த செல்போனை சென்னைக்கு கொண்டு சென்று அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அந்த எண்ணுக்கு யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சுகுந்தகுமாருக்கு பெங்களுரை சேர்ந்த அஞ்சு சுல்தானா(38) என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் ஆகாமல் பழகி குழந்தை பெற்றது தெரியவந்தது. இவர்களது குழந்தை தான் கொலை செய்யப்பட்ட நிஷாந்த். எனவே, அஞ்சு சுல்தானை நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். நேற்று இரவு 10 மணிவரை இந்த விசாரணை நடந்தது. பின்னர் அஞ்சு சுல்தானை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நெல்லிக்குப்பத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை முடுக்கியுள்ளார். எனவே,கொலையாளிகள் விரைவில் பிடிப்படுவார்கள் என தெரிகிறது.

    • கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
    • கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் ஒரே குடும்பத்தில் தாய்-மகன்-பேரன் என 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் ராஜாராம் நகரை சேர்ந்த கமலேஸ்வரி என்ற 60 வயது பெண், தனது மகன் சுகுந்தகுமார், பேரனுடன் வசித்து வந்த நிலையில்தான் மர்ம நபர்கள் அவர்களை மிகவும் கொடூரமாக வெட்டிக் கொன்று உடல்களை எரித்துள்ளனர்.

    கமலேஸ்வரியின் கணவர் சுரேஷ்குமார் இறந்து விட்ட நிலையில், சுகந்தகுமாரின் மனைவி விவாகரத்தாகி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகன் நிஷாந்தை தாய் வீட்டில் விட்டு விட்டு சுகந்தகுமார் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடலூருக்கு வந்து சென்றுள்ளார்.

    இதுபோன்ற ஒரு சூழலில்தான் 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கடலூரையே கலங்கடித்துள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொலை சம்பவம் தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது.

    கொலையாளிகள் யார்? எதற்காக 3 பேரையும் கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுகுந்தகுமார் ஐதராபாத்தில் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த பெண்ணுடன் சுகந்தகுமாருக்கு தகராறு ஏற்பட்டு அது தொடர்பான முன்விரோதத்தில் சுகுந்த குமாரை கொலை செய்யவந்தவர்கள் தாய்-மகனையும் கொன்றார்களா? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகள் கடந்த 12-ந்தேதி அன்று 3 பேரையும் கொலை செய்து விட்டு பின்னர் நேற்று அதிகாலையில் வந்து தடயங்களை அழிப்பதற்காக 3 பேரின் உடல்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்பிறகே கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது.

    கொலையாளிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். ஆனால் அதில் பதிவாகி இருந்த காட்சிகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

    கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரி, சுகுந்தகுமார் ஆகியோர் பயன்படுத்திய இந்த செல்போன்களை வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    சுகுந்தகுமாரின் தலைமுடி வாசல் கதவுக்கு வெளியில் சிதறி கிடந்துள்ளது. இதனால் முதலில் வீட்டுக்கு வெளியில் வைத்து கொலையாளிகள் அவரை வெட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிருக்கு பயந்து அவர் வீட்டுக்குள் ஓடியதும் தாய், மகன் ஓடி வந்திருக்கலாம் என்றும் அப்போது கதவை பூட்டிக் கொண்டு 3 பேரையும் கொலையாளிகள் துடிக்க துடிக்க கொன்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சுகுந்தகுமாரின் செல்போனில் பதிவாகி உள்ள எண்கள் மற்றும் அவர் யார்-யாருடன் அதிகமாக பேசியுள்ளார் என்பது பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார் அதன் மூலமாக கொலை வழக்கில் துப்பு ஏதும் கிடைக்குமா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    • கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்பு.

    கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடலூர் அருகே கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக இன்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்த கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

    கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    • வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர்.
    • வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 70). ஓய்வு பெற்ற மருந்தாளுனர். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவர்களுக்கு சுகந்த் (40) என்ற மகனும், இஷான் (8) என்கிற பேரனும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டினர் வெளியில் ரத்த கரைகள் படிந்திருந்தது.

    வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    இறந்து கிடந்த 3 பேரின் உடலை மீட்பதற்கு நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீராணம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
    • ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீனஸ் மதகில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. தூரமும் 5 கி.மீ., பரப்பளவில் 32 பாசன மதகுகளை கொண்டுள்ளது. 1,468 மில்லியன் கனஅடி. (47.50 அடி) கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 1,300 மில்லியன் கனஅடி (46 அடி) தண்ணீர் உள்ளது.

    இந்த ஏரிமூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதுவரை சென்னைக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கடந்த 17-ந் தேதி மேட்டூரில் இருந்து 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதனை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஏரி நீர் நிறம் மாறியிருப்பதால், விவசாயிகள் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், பொதுமக்கள், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தவும் அச்சப்படுகின்றனர். எனவே, ஏரியின் நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணத்தை ஆராய்ந்து பொதுமக்கள், விவசாயிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

    ×