என் மலர்

    கடலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார்.
    • அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

    கடலூர்:

    இறைவன் தன் பக்தர் களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப் போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாள மாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழும் திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹார ஐதீக திருவிழா நேற்று இரவு நடந்தது. சிவனின் அட்ட வீரட்டத் தலங்களில் சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்ட அதிகை வீரட்டானம் பிரம்மாவை வேண்டி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்ற தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி இவர்கள் மூவரும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மாவிடம் பெற்றனர்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நகரங்க ளும் அருகேவரும்போது, அழியகூடியது இந்த நகரம் வரங்களைப் பெற்ற மூவ ரும், தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள் சிவ பெருமானை வேண்டினர். மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார். பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும்வித மாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்கு மாறும் ஒரு தேரை உருவாக்க சொன்னார் சிவபெருமான். 

    பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கர ங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால் களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப் பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டை யாகவும் அமைந்தன.பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம்வீச, விந்தியமலை குடையானது. வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்பு நிறுத்தப்பட்ட தேரில் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார். அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    மூன்று அசுரர்களும் சிவ பெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்ப தால்தான், சிவபெருமானால் அசுரர் களை அழிக்க முடிகிறது. நமது சக்தியில் பாதி பலம் இல்லை என்றால் சிவபெரு மானால் சம்ஹாரம் செய்ய முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒருநொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது.

    ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லா மலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர் கள் வெட்கிதலை கவிழ்ந்தனர். சிரித்து எரித்த இந்த ஐதீக நிகழ்வு வைகாசி சுவாதி தினமான நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரநாராயண பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருள செய்துமுப்புரம் எரிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐதீக நிகழ்ச்சியை கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் கோவில் நிர்வாகத்தினர், பண்ருட்டி திருவதிகை நகரவாசிகள், விழாக் குழுவினர், சிவனடியார்கள் சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வசந்திரமேஷ் 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது என கூறினார்.
    • குடி நீர், தெருவிளக்கு பிரச்சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும் என கூறினார்.


    பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணைத் தலைவர் சிவா,கமிஷனர்மகேஸ்வரிமுன்னிலைவகித்தனர். என்ஜினீயர் பவுல் செல்வம்,துப்புரவு அலுவலர் முருகேசன், மேலாளர் அசோக்குமார், மற்றும்கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட அஜெண்டாவை உதவியாளர்சோமசுந்தரம் படித்தார்.

    கூட்டத்தில் நடந்தவிவாதம் வருமாறு:- கிருஷ்ணராஜ் (வாழ்வுரிமை கட்சி): வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகள் உடனே வழங்க வேண் டும். பொதுமக்கள் கடு மையாக அவதிப்பட்டு வருகின்றனர். வசந்திரமேஷ் (தி.மு.க): 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. மோகன் (அ.தி.மு.க): எனது வார்டில் உள்ள குறைகளைசரி செய்யக்கோரி கொடுத்த மனு க்கள் என்ன ஆனது.ஆதி திராவிட மக்கள் வசிக்கும் நந்தனார் காலணியில் 3சாலைகள் உள்ளன. அதில் ஒன்று மண்சாலையாக உள்ளது. ஒன்று நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ளது உடனே சரி செய்ய வேண்டும் .

    ராமலிங்கம் (தி.மு.க.): கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றுபண்ருட்டி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றி களைபிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு நன்றி. சோழன் (தி.மு.க): 50 வருடமாகவே ஓடாத தேரை ஓடவைத்ததற்கும் வார்டு பகுதியில்வளர்ச்சி பணிகளை உடனே நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர் மகேஷ்வரி: ஆதிதிராவிட மக்கள் அதிகம்வசிக்கும் பகுதியில் நமக்கு நாமேதிட்டத்தின் மூலம் பணிகள் செய்ய 5-ல் ஒரு பங்குஅதாவது திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம் என்றால் ஒரு லட்சம் செலுத்தினால் போதும் . ராமதாஸ்(சுயே): ரயில்வே காலணியில் சாலை, தெரு விளக்குகால்வாய் அமைத்து தர வேண்டும். 

    ஜரின்னிசா (தி.மு.க) தண்டு பாளையத்தில் கழிவு நீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை எல்லாம் வழிந்து சுகாதாரகேடுஏற்படுகிறது. ஏ.கே.எஸ். மண்டபம் பின் புறம் உள்ள தெருக்களில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தெரு மின் விளக்கு அமைத்து தரவேண்டும்

    தலைவர் ராஜேந்திரன்: ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை .பண்ருட்டி நகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வளர்ச்சி பணிகள் செய்யப்படும். நாய்கள் பிடிக்கப்படும். சமுதாய கூடம் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. குடி நீர், தெருவிளக்கு பிரச் சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும். ெரயில்வே காலணியில் கல்வெட்டு அமைத்து சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் . பண்ருட்டி நகராட்சியில் முதன்மை நகராட்சியாகபாடுபட்டுவருகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன் கண்டித்துள்ளார்.
    • வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது.47). இவரது மகன் தமிழேந்தி (15) இவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில், தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன், தமிழே ந்தியை கண்டித்துவிட்டு, வேலையின் காரணமாக மங்கலம்பே ட்டைக்கு புறப்பட்டு சென்று விட்டார், பின்னர், வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீஸில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
    • 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக் கான தொண்டு நிறு வனங்கள் மற்றும் சேவை புரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற் படுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15-ந் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மாற்றுத்திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறு வனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனா ளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறு வனத்திற்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் விருது களுக்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம், கடலூர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ் களுடன் 26-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு செய்தார்.அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினி வரவேற்று அழைத்துச் சென்றார். ஆய்வின் போது புறநோயாளிகள்பிரிவு, தொற்றா நோய் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, ஆய்வகம், மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து, புறநோயளிகள் பிரிவில் பதிவு மேற்கொள்ளப்படுவது மற்றும் பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெறவந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.நோயாளிகளிடம் காசு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை நன்றாக கவனிக்கிறார்கள் என்று நோயாளிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர் பற்றாக்குறை உள்ளது என்று தலைமை மருத்துவர் எடுத்து கூறினார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை போல் கிரிவலத்தால் புகழ் பெற்று வரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமி, அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது தொடர்ந்து ஸ்தல நாயகர் திரிபுர சம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தரு ளினர்.

    பின்னர் தேரில் சிவாச் சாரியார்கள் வேதமந்தி ரங்கள் ஓத, மகாதீபாராத னை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திர ளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.இந்த தேரோட்டத்தில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், நகரசபை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கள் எம்.சி. சம்பத், எம்.சி.தாமோதரன், வக்சீல் எம்.சி.தண்டபாணி, உதவி ஆணையாளர் சந்திரன், தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர்மகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, செயல் அலுவலர் மகாதேவி, ராமலிங்கம், வேல்விழி, ரமேஷ்பாபு, ஆய்வாளர்கள் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா,துணை தாசில் தார் சிவக்குமார், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 8.45 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 7 மணியளவில் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்து,திரிபுர சம்ஹார மூர்த்தி திருத்தேரில் ஐதீக முறைப்படி முப்புரம் எரித்த காட்சி நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் கோவிந்தராஜ்,(வயது24) . இவருக்கும் மங்கலம் பேட்டை பேரூராட்சியை சேர்ந்த சுபாஷ் மகள் அனுஷாவுக்கும் (19) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓரு வருடம் ஆகாத நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையிலும் மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மாமியாரும் மருமகளும் தனித்தனியே சமைத்து சாப்பிட்டு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டின் அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, மாமியார் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதால் தான் முதலில் தண்ணீர் பிடித்து கொண்டு செல்கிறேன் என கூறிய போது மாமியார்- மருமகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமானஅனுசா தனது வீட்டில் வெளிக்கதவு மற்றும் உன் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார். குளிக்க சென்ற கணவன் கோவிந்தராஜ் தகவல் கேட்டு ஓடி வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று அனுசாவை தூக்கிலிருந்து மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசா உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. காவியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.அனுசாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடியாத நிலை உள்ளதால் கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
    • செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரையின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுஞ்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்யை ஓபன் செய்ய கூடாது, செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறியும், இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணை யவழி குற்றம் தொடர்பாக இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
    • தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வ