என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடலூர்
கடலூர்:
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புயல் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம் நகராட்சி, மற்றும் பெருமாள் ஏரி, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது கடலூர் கார்த்திகேயன் நகர் மற்றும் முதுநகர் நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும், ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் பருவ மழையையொட்டி முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினையும், குடிகாடு ஊராட்சியில் மழைநீர் வடிய ஏதுவாக புலிக்குத்தி கிளை வாய்க்கா ல் தூர்வாரும் பணிகள், பெருமாள் ஏரியை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து ஆய்வு செய்ததோடு, ஏரியை தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு, உழவர் சந்தை எதிரே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் மற்றும் பஸ் நிலையம், மணிக்கூண்டு அருகே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியை பார்வை யிட்டு, ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்க ளுக்கு உத்தரவி ட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-மேலும் பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகள் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள துணை கலெக்டர்நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து அனைத்துறைகளும் இணைந்து பருவமழை தொடர்பாக பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தற்போது 255 ஹெக்டர் விலை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிவதற்கேற்ப போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஷ்ரா, கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர்ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார் , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, சப்-கலெக்டர் சுவேத்தா சுமன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நீர்வளத்துறை செயற் பொறியாளர் காந்த ருபன் , மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் , சிதம்பரம் நகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்செயன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், ஆராமுது, பாலசுந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொது மக்களை தங்கவைப்பதற்கான தற்காலிக தங்குமிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் ஆகிய மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.
- பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.
கடலூர்:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இந்த புயலானது வருகிற 5-ந் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்ப ட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக மீனவ ர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் . கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலூர் தாழ ங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உட்பட மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்க ளில் கரையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகள் கட்டு மரங்கள் உள்ளி ட்டவைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்துகடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் படகுகளை டிராக்டர் மூலம் கட்டி மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினார்கள். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
- இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டை சேர்ந்தவர் ஜெகன்(30).பெயிண்டர். இவரது மனைவி அபிராமி. இவர் தனது கணவர் ஜெகனிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30 -ந் தேதி ஜெகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அபிராமி வரமறுத்தார். இதன் காரணமாக அசிங்கமாக திட்டி வீட்டை கொளுத்திவிடுவதாக கூறி கூரை வீட்டிற்கு தீவைத்து கொளுத்தினர். இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மனைவி அபிராமி கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
- இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பின்ன லூர், மதுபானைமேடு, நெல்லி கொல்லை. துரிஞ்சி கொல்லை உள்ளிட்ட கிராம விவசாயிகளின் நெல் பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் அழுகி உள்ளது. இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் வடிகால் அமைக்கப்படாத தால் நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை எனவும் லேடன்மூ லம் கணக்கெடுப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என காப்பீடு திட்ட அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்க ளும் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. எனவே கனமழை தொடர்பாக பொதும க்களுக்கு கீழ்க்க ண்ட முன்னெச்சரிக்கை அறிவு ரைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்துவரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இட ங்களுக்கு செல்லவேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், பேரிட ர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077மற்றும் 04142 - 220700, 04142 - 233933மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிட ர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மே ற்படி பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேர டியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
- 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.
கடலூர்:
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.
இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
- இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதியியல் மற்றும் கணிதவியல் துறை மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டு இருந்தனர். அவர்கள் வராண்டாவில் தங்களது பையில் 8 செல்போன்களை வைத்து சென்றனர். தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதாகர் தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.
- இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் சுதாகர் (44) தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பாபு (42), அமுதா (50) , சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3-ந்தேதி புயலாக வலுவெடுத்த பிறகு அது வட தமிழ்நாடு தென் ஆந்திர பகுதியை நோக்கி நகரும்.
- 4-ந்தேதி மாலை அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
நாகை:
வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் அதன் சீற்றம் அதிகமாக இருக்கும்.
3-ந்தேதி புயலாக வலுவெடுத்த பிறகு அது வட தமிழ்நாடு தென் ஆந்திர பகுதியை நோக்கி நகரும். 4-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அதன் நகரும் திசை மற்றும் வேகத்தை பொறுத்து அது சென்னைக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், செருதூர், வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.