என் மலர்
சேலம்
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26 ). இவர் ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி பகுதியில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது.
புகாரின் பேரில் மணி கண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த மணிகண்டன் இரவு நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுவிட்டு சிறுமியின் அக்கா 19 வயது பெண்ணை கூட்டி சென்றார்.
இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு அடைகலம் கொடுத்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது மணிகண்டன் நெசவு தொழிலில் செய்து வருவ தும், அவருடன் சென்ற சிறுமியின் அக்காள் அதே பகுதியில் தனியார் கம்பெ னிக்கு வேலைக்கு செல்வ தும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது.
இருவரையும் அழைத்து வந்த போலீசார் மணி கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்ப வம் நடைபெற்று 11 மாதங்க ளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
- இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது.
வாழப்பாடி:
வாழப்பாடியில் பழு டைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, கீழ்தளத்தில் பயணி கள் நிழற்குடை, பேருந்து தள மேடை வசதிகளும், மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள் மற்றும் நடை மேடையுடன், ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயி லில், டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகி யோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலை கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள் ளது.
எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது. இது குறித்து வாழப்பாடி தாசில்தார் தலைமையில் கடந்த மார்ச் 10–ந்தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சிலைகளை வேறு இடத்தில் மாற்றுவது குறித்து இது வரை இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.இதனையடுத்து, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலை மையில், நேற்று மீண்டும் அனைத்துக்கட்சி நிர்வாகி கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தேசிய நெடுஞ்சா லைத்துறை, நெடுஞ்சா லைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. வி.எம்.சொக்கலிங்கம், அ.தி.மு.க. என்.சிவக்குமார், தி.மு.க. சேட்டு ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவாணன், காங்கிரஸ் எம்.கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால் திறப்பு விழா நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்று, கடலுார் பிரதான சாலையோரத்தில் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்க கட்டடத்திற்கு அருகில், 3 சிலைகளையும் மாற்றி அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
- சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
- 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.
பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.
அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.
3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.
அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.
பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
- ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர்
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருவில் இருந்து வந்த பஸ்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதானவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஆனந்தராஜ் ஆந்திர மாநிலத்தில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்கு இருப்பது தெரிய வந்தது.
மேலும் இவர் ஆட்களை வைத்து ஆந்திராவில் இருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து ஓமலூர் எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓமலூர் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், தொடர்ந்து தற்போது 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
- தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.
- பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை யான இக்கோவில் தேர், ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது. மிகுந்த ஆர்வத்தோடு வடம் பிடித்த பொதுமக்களும் பக்தர்களும் ராஜ வீதிகளில் வெள்ளோட்டம் நடத்தினர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், வெகு விமரிசையாக தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஊர் பெரியதனக்காரர்கள் தெரிவித்தனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
- தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆங்கி லேயர் ஆட்சி காலத்தில், 1942–ம் ஆண்டு ஆவணி மாதம் 12 –ந் தேதி, ரூ.750 செலவில் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான மரத்தேர் உருவாக்கப்பட்டது.
இந்த பழைய மரத்தேர் வலுவிழந்ததால், ரூ.20 லட்சம் செலவில், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. இதனை யடுத்து, தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.. தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சென்றாயப்பெருமாள், பூதேவி, சீதேவியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை களும், திருக்கல்யாண வைபோவமும், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவமும் நடைபெறு கிறது.
இதனையடுத்து, நாளை (சனிக்கிழமை) காலை திருத்தேர் நிலை பெயர்த்த லும், தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்வுகளும், மாலை 3 மணிக்கு ராஜவீதிகளில் தேரோட்டமும் நடைபெறு கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் சுற்று வட்டார பகுதியில் சூறை காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 867 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1503 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.
- தீ விபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது.
- காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீவிபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. ஒரு பெண் உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ் குமார் (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(வயது 45), மோகனா (வயது 38), மணிமேகலா (வயது 36), மகேஸ்வரி (வயது 32), பிரபாகரன் (வயது 31), பிருந்தா (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.