search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது.

    தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உயர்ந்துள்ளது.

    390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.

    அதன்மூலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28,856 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரித்த வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், மேட்டூர் அணையை நீர் வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும்.

    இதற்கிடையே இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுவதால் அந்த தண்ணீர் இன்று மாலை முதல் தமிழகத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தண்ணீர் வந்தால்மேட்டூர் அணை நாளை மறுநாள் மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 51.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது காவிரியில் ஓடும் புது வெள்ளத்தில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடுவார்கள். மேலும் ஆடி பட்டம், தேடி பார்த்து விதைக்கனும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் காவிரியில் புனித நீராடி விட்டு விவசாய பணிகளை தொடங்குவார்கள். எனவே அணை வேகமாக நிரம்பி வருவதால் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த 2 அணைகளும் நிரம்பியதை அடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70ஆயிரம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

    கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33ஆயிரத்து 241 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11ஆயிரத்து 852 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 18ஆயிரத்து 147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று 50ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 43ஆயிரத்து 147 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1 வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    இதன் காரணமாக வெளியே தெரிந்த நந்தி, கிறிஸ்துவ சிலைகள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 69ஆயிரத்து 117 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 60ஆயிரத்து 771 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 49.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் 100 அடியை தொட்டுவிடும். தற்போது அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 122.85 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு ௪௦ ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 327 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 83.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 58ஆயிரத்து 779 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டி இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79ஆயிரத்து 682 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 2 வாலிபர்களுக்கும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் உள்ளது மூங்கில் ஏரி. இந்த ஏரியில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் உள்ளது. இதில் மீன்கள் அதிக அளவில் உள்ளன. இந்த ஏரியில் பச்சனம்பட்டி ஊராட்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் இரவு நேரங்களில் வலை விரித்து மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர்கள் இருவரையும் வேல கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சிலர் வீட்டுக்கு சென்று அவர்களை பிடித்து வந்து வேலகவுண்டனூர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் கிளட்ச் வயர் மற்றும் கரும்பு ஆகியவற்றால் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து இரவு முழுவதும் கட்டி வைத்து சிலர் மாறி மாறி தாக்கியதாக கூறப்படுகிறது.

    தகவல் தெரிந்து உறவினர்கள் சென்று கேட்ட போது வாலிபர்கள் இருவரையும் விட மறுத்து மீண்டும் தாக்கியுள்ளனர். இது குறித்து வாலிபர்களின் உறவினர்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமலூர் போலீசார் ஜெயக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 வாலிபர்களுக்கும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    இது பற்றி தகவல் அறிந்து ஓமலூர் அரசு மருத்துவ மனையில் வாலிபர்களின் உறவினர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறும்போது ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 வாலிபர்களை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கியவர்கள் வேல கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சிலர் என தெரிய வருகிறது. ஏரியில் மீன்பிடித்து தவறு செய்திருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்கலாம் அல்லது உறவினர்களிடம் கூறலாம். அதற்காக கட்டி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர்:

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஷ்வரன்மலை கோவிலுக்கும் மற்றும் மேட்டூர் கொளத்தூர் ஆகிய பகுதிக்கும் சென்று வர காவிரி ஆற்றை கடந்து மேட்டூர் அடுத்த கொளத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொளத்தூரில் இருந்து அரசு பஸ் மூலம் சென்று காவிரி ஆற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று மதியம் முதல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 1000 கனஅடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.90 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. உள்ளூர் பாசன தேவை மற்றும் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.76 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கபினி, கிருஷ்ண ராஜ சாகர் ஆகிய 2 அணைகளுக்கும் 97 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 47 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படு வதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 6 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது.

    அணை நிரம்ப இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.

    இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 51.38 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருப்பதும், நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சேலத்தில் மட்டும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடபடுவது தனிச்சிறப்பு.
    • மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ''ஆடி-18'' அன்று முடிவுக்கு வந்தது.

    இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.

    இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

    ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாத பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள்.

    ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும். பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள்.

    பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர்.

    தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடபடுவது தனிச்சிறப்பு.

    இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று தேங்காய் சுடும் விழா நடந்தது. அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அரசமரத்து காட்டூர் பகுதியில் தேங்காய் சுட்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

    • கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி படுகையில் நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தொடர் கனமழையால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது. கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணைக்கு 33,640 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 33,625 கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமித்து கரைபுரண்டு ஓடியவாறு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கே.ஆர்.எஸ் அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,977 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று 36,674 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் 105.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 110.60 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து உள்ளூர் குடிநீர் மற்றும் உள்ளூர் பாசன தேவைக்காக வினாடிக்கு 2,361 கன அடி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவில்லை.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நள்ளிரவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு உபரி நீர் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் நேற்று முதல் பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 577 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 910 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட நீர் திறப்பு அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 46.80 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 15.85 டி.எம்.சி. உள்ளது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள், குடிநீர் பெறும் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.
    • பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் ஏற்காட்டில் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.

    இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனி மூட்டமும் ஏற்காட்டில் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் தொடர் பனி மூட்டத்தால் சற்று தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    மேலும் ஏற்காட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஏற்காடு பஸ் நிலையத்தில் குடைகள் பிடித்த படி காத்து நின்று பஸ்களில் ஏறி சென்றனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஏற்காட்டில் கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல டேனீஸ்பேட்டை, கரியகோவில், ஆத்தூர், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் இன்று காலை மழை தூறிய படியே இருந்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 0.8, ஆனைமடுவு 5, ஆத்தூர் 4.4, கரியகோவில் 7, மேட்டூர் 4.6, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45.4 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    ×