என் மலர்

    பெரம்பலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்
    • முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் (வயது 42) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தை சேர்ந்த முகவர் தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சிவா, குமார், பிரபாகரன் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 11 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தி கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை கடந்த 23ம்தேதி அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த முகவர் தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
    • பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன், உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை நேற்று தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன், உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள், 4, 5-ம் வகுப்பில் உள்ள 96 தொடக்க நிலை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பனை-காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது
    • அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஒட்டு மொத்தமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்களை அவமா னப்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையே தேவையில்லாத ஒன்று என பேசியதை வன்னையாக கண்டி க்கின்றோம்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவத்தார். இதில் ஜெயராமனை கண்டித்து கோஷ மிட்டனர். ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய பணிமேற்பா ர்வையாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கபட்டது
    • இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தேர் செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் புதிதாக தேர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்று புதிதாக தேர் செய்ய ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேர் செய்ய முதற்கட்டமாக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு தேர் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.

    தற்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் 2-ம் கட்டமாக ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை கோயில் தர்மகர்த்தா ராஜாங்கம், ஸ்தபதி மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் கலியபெருமாள் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் தரமான கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது கோவில் செயல் அலுவலர் (பொ) ஹேமாவதி உடனிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 65), விவசாயி. இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் கோவில்களுக்கும் சென்ற வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை செய்து வந்தனர். அதே வேளையில் அசோக்ராஜ் உரிய சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார்.

    இதற்கிடையே அசோக் ராஜ் கடந்த மூன்று மாதங்களாக சரியான முறையில் மருந்து, மாத்திரை சாப்பிட மறுத்து வந்துள்ளார். அவரது பெற்றோர் எடுத்துக்கூறியும் அசோக்ராஜ் கண்டுகொள்ளவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தனது தாய் மணிமொழியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அவரது வயதான தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    அவரையும் அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் வந்து மணிமொழி பார்த்தபோதுதான் கணவர் செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் தப்பினார்.

    பின்னர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையுண்ட செல்வராஜ் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மனநலம் பாதித்த மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூரை சேர்ந்தவா் விவசாயி சந்திரசேகர் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள ஏறத்தாழ 49 சென்ட் நிலத்தில் தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலம் அளப்பதற்குரிய கட்டணமும் செலுத்தியிருந்தார்.

    இதுதொடர்பாக சந்திரசேகர் நில அளவைத்துறையினரை பலமுறை நேரில் அணுகினார். ஆனால் அவரது மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராம மக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி வட்ட துணை ஆய்வாளர், மனுதாரர் சந்திரசேகரின் நிலத்தை அளந்துகாட்டி, எல்லைக்கற்கள் நடாமல், அவரை அலையவிட்டுள்ளார். நில அளவைத்துறையினரின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வட்ட துணை ஆய்வாளர், பெரம்பலூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். பெரம்பலூரில் சந்திரசேகரின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியமைக்காக வட்ட துணை ஆய்வாளர் ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து நான்கு புறத்திலும் எல்லைக்கல் நட்டுத்தரவேண்டும் என்றும், அதனை அறிக்கையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், மேலும் மற்ற எதிர்மனுதாரர்களான தாசில்தார் முதல் கலெக்டர் வரை அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திறந்திருக்கும். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகம் மே 22-ந்தேதி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 தற்காலிக கோவில் உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர்கள் தீபாதேவி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக 3 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எடுக்கப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆன்மிக மெய்யன்பர்கள் 47 பேரும், கோவில் பணியாளர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.25 லட்சம் பணமும், 192 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனராஜ் தலைமை வகித்தார், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அர்ஜூன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் டாகட் பாப்புபெஞ்சமின்இளங்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்வது, வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமாக்க ஆக்க சபதம் ஏற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைதலைவர் தங்கவேல், நிர்வாகிகள் ராஜா, சின்ராஜ், தாமரைமணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
    • 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo