என் மலர்

    தூத்துக்குடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார்.
    • ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முத்துமுகம்மது தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் குமார் சிங், துணைத்தலைவர் சுல்தான் லெப்பை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கட்டாய கல்வி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு மாவட்ட பாதுகாப்பு குழுவை அணுகி அரசு வழிகாட்டுதலுடன் தத்தெடுப்பது, ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காயல்பட்டினம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆரோக்கிய மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.43-ம் இணைந்து மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆரோக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, காயாமொழி புற மருந்தக கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரூபன் கிங்க்ஸ்லி மற்றும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் பிந்துஜா தரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்வுரையில் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த பழங்கள், மெக்னீசியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினர். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவிதா, தீபாராணி மற்றும் அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் கலைக்கல்லூரி, பிஷப் கால்டுவெல் கலைக்கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் பல கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு தலைவர் ஜெயசுதா பெர்சியா தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி கணித துறை விரிவுரையாளர் பெலிஸ்டா சுகிர்த லிசி, வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிதி சமீலா, தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கபட்டனர். சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை சகாய ஹென்ஸி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.
    • இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ராசா சேவியர் மகன் மில்டன். இவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து தனது லோடு வேனில் மீன் ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    டேங்கர் லாரி மோதி விபத்து

    இரவு 11 மணிக்கு வல்ல நாடு துப்பாக்கி சுடுதளம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கியாஸ் டேங்கர் லாரியை முந்தி இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.

    இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதி கள் முகாமை சேர்ந்த செல்வராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் நெல்லை மாவட்டம் சிங்கம் பாறை சேர்ந்த ஆரோக்கிய ரூபன், இலந்தைகுளத்தை சேர்ந்த வர்கீஸ், திருவேங்கட நாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சந்திரன், திருவேங்கட நாதபுரத்தை சேர்ந்த பெரியதுரை ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்த னர்.

    தீவிர சிகிச்சை

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த சண்முகம் என்ப வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • இதபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் சி.பா. ஆதித்தினார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் உருவசிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஷ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ்,

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைகுருச்செல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி, மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் சி.பா. ஆதித்தினார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆனந்த பெருமாள் 4 நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.
    • காற்றின் காரணமாக காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பெருமாள். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அந்த காரில் அவர் சமத்துவபுரத்தில் இருந்து நாசரேத் நோக்கி தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அந்த காரில் முன்பக்கத்தில் இருந்து புகை வெளிவந்துள்ளது. உடனே அவர் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது காரில் தீ எரிய தொடங்கியுள்ளது. காற்றின் காரணமாக காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
    • பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

    பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.
    • மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளை பெருமாளுக்கு உகந்த நாளாக கொண்டு திருவோணத்திருவிழா நடைபெறுகிறது.

    ஆழ்வார்திருநகரியில் திருவேங்கடமுடையான் 4 திசை பார்த்தும் சேவை சாதிக்கிறார். ஆதிநாதர் கோவிலில் திருவேங்கடமுடையான் மேற்குப் பார்த்தும், தெற்கு மாடவீதியில் தெற்கு திருவேங்கடமுடையான் வடக்கு பார்த்தும், வடக்கு ரத வீதியில் வடக்கு திருவேங்கடமுடையான் தெற்கு பார்த்தும், ஊரின் மேற்கே சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் திருவேங்கடமுடையான் கிழக்கு பார்த்தும் சேவை சாதிக்கிறார்.

    திருவோண திருவிழா

    நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நேற்று காலை விஸ்வரூபம், ஏகாந்த சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11 மணிக்கு ஆச்சாரியர் வேதாந்த தேசிகர் ராமானுசர் கோவிலில் எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றுக் கொண்டார். மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சீனிவாசன், கோகுல் வரதராஜன், எம்பெருமானார் ஜீயர், திருவாய்மொழி பிள்ளை சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவராக மாணவர் திவி கார்த்திக் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.
    • மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் மற்றும் சூழலியல் நிபுணர் கோவை சதாசிவம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி செண்பகராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவராக மாணவர் திவி கார்த்திக், துணைத்தலை வராக மனோசங்கர், செயலாளராக மாணவி சுந்தரி, துணைச்செய லாளராக அட்சயா ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் அரசி அறிமுகம் செய்தார். தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் விருந்தினர்கள் முன்னிலை யில் மரக்கன்று கள் நடப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவ-மாணவிகள் சிறப்பு விருந்தினரிடம் கலந்துரையாடல் நடத்தினர். முடிவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் செயலாளர் சுந்தரி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print