என் மலர்
கன்னியாகுமரி
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- நாகர்கோவிலில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நாகர்கோவில்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் பரவ லாக மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளின் மழை அளவு வருமாறு- கன்னிமார்- 9.4, இரணியல் -8.4,பாலமோர் -7.2,பூதப்பாண்டி- 7.2, மாம்பழத் துறையாறு - 6.8,குருந்தன்கோடு-6.4, முள்ளங்கினாவிளை- 6.4,ஆனைகிடங்கு -5.2, குளச்சல் - 3.6, மைலாடி -3.6, கோழிப்போர்விளை -3.4,அடையாமடை -3, கொட்டாரம் - 1.8, பேச்சிப்பாறை - 1, பெருஞ்சாணி - 1
இந்த மழையின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.95 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 472 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 153 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.
பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.
- விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்
- சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சபரிமலை சீசனான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.
இந்த சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்குறைந்த வண்ணமாக உள்ளன. இருப்பினும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணி கள் படகுத்து றையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அனு மதிக் கப்பட வில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்தவரே பார்வையிட்டு சென்றனர்.
மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக் கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் விடுமுறை இல்லாத இன்றும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். சபரிமலை சீசனையொட்டி கடந்த 3 மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர்.
இதில் 7 லட்சம் 17ஆயிரத்து 591 சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சபரிமலை சீசனை யொட்டி கடந்த நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 891 பேரும் டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
- சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார்
- 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராஜாக்க மங்கலம் ரோட்டில் உள்ள ராமன்புதூரில் கார்மல் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இது 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.
1932-ம் ஆண்டு கோட்டார் ஆயராக இருந்த லாரன்ஸ் பெரேராவால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அதைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியானது. இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டு நிறைவு விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இன்று பகல் 2 மணிக்கு முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு குருகுல முன் னாள் முதல்வர் பால்லியோன் தலைமை தாங்கி பேசுகிறார். வளாக பொருளாளர் குமார் சடேனிஸ், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசு நேசம், முன்னாள் மாணவர் இயக்க துணைத்தலைவர் பால்டுவின் புரூஸ், ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மாணவர் இயக்க இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மரிய பாஸ்டின் துரை வரவேற்கிறார். செயலாளர் ஜான் உபால்டு அறிக்கை சமர்ப்பிக்கிறார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் ஆசியுரை வழங்குகிறார்.
முன்னாள் மாணவரும் தபால் துறையின் முன்னாள் இயக்குனருமான மெர்வின் அலெக்சாண்டர், பொருளா தார நிபுணரும், சபையின் முன்னாள் தூதருமான ஜெப மாலை வினான்சி ஆராய்ச்சி ஆகியோர் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர் மற்றும் அலுவலர்களை சிறப்பிக்கிறார்கள். இதில் தாம்பரம் போலீஸ் கமிஷ னர் அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை யாளர் களை கவுரவிக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் குழுமங் களின் தலைவர் சார்லஸ், இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா கார் மல் பள்ளியின் நலம் விரும்பிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டாக்டர் டங்ஸ்டன் ரமேஷ் நன்றி கூறுகிறார்.
மாலையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 'இன்றைய இளைஞர் போக்கு வாழத் தக்கதா? வருந்தத்தக் கதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெ றுகிறது. முன்னாள் மாணவர் இயக்க பொருளாளர் அமல் ராஜ் நன்றி கூறுகிறார். மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரியர் அருள் ராஜன், ஐ.எம்.வி. ஜெரோம், சந்தான இருதயராஜ், பீட்டர் ஷா ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கு கிறார்கள்.
நாளை மாலை 5 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு உரை யாற்றுகிறார். சிறப்பு விருந்தி னர்களாக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தொழில் அதிபர் மைக் கேல் ஆண்டனி, இயேசுசபை மன்ற மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா ஆகியோர் பரிசு வழங்கி, வாழ்த்தி பேசுகிறார்கள்.
கார்மல் இல்ல அதிபர் ஜெரோம், அருட்பணியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் வரவேற்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின்துரை ஆண்ட றிக்கையை சமர்ப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முடிவில் ஆசிரியர் அலுவலர் செய லாளர் பபிலன் நன்றி கூறுகிறார்.
- பங்குமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
- திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி:
குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை திருப்பலி மற்றும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7-ம் நாள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருச்சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு திருத்தலம் சென்றடைந்தது.பவனியின்போது பங்கு மக்கள் உள்பட திரளானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையின் புகழ்பாடி சென்றனர்.
பவனியில் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், பங்குப்பணியாளர்கள் டைனிசியஸ்,ஜாண் வினோ, விஜின் பிரைட்,அருள் சகோதரிகள் மற்றும் பங்குநிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கோடிமுனை பங்குப்பணி யாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்குப்பணியாளர் ஜோசப் அருளுரை ஆற்றினார்.
8 ம் நாள் (இன்று) காலை நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, 9-ம் நாள் காலை திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை, 10-ம் நாள் காலை திருவிழா முதல் திருப்பலி,8 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமையில் குழித்துறை மறை மாவட்ட தலைமை செய லர் பேரருள்பணி ரசல் ராஜ் அருளுரை ஆற்று கிறார். 10 மணிக்கு திருக் கொடியிறக்கம்,மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
- மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
- ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.
பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.
இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.
எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
- தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
நாகர்கோவில்:
திற்பரப்பு பேரூராட்சிக் குட்பட்ட தும்பக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்து திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தொடரும் மர்மச் சாவுகளால் பரபரப்பு
- பல கோணங்களில் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் இன்று காலை பொது மக்கள் சாலையில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் கிடந்த முதியவர் இறந்திருப்பது தெரிய வந்தது.
அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அந்த முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? அல்லது வேறு காரணங்களால் அவர் இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டிரைவர் மணிகண்டன் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று முதியவர் பிணமாக கிடந்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
- மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.