என் மலர்

    கன்னியாகுமரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போராட்டங்கள் நடத்தியவர் மார்ஷல் நேசமணி
    • மார்ஷல் நேசமணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அஞ்சலி செலுத்தினார்.

    கன்னியாகுமரி:

    இந்தியா விடுதலை பெற்ற பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போராட்டங்கள் நடத்திய மார்ஷல் நேசமணியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவுகளையும் பகிர்ந்தனர்.

    இந்நிலையில், மார்ஷல் நேசமணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

    சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க பல போராட்டங்களை முன்னின்று நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் நினைவு நாளில் அன்னாருக்கு எனது நினைவஞ்சலி என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதகுகள் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளத்தை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னிபூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. கன்னிபூ சாகு படிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று பேச்சிப்பாறை அணை திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தது. இதையடுத்து இன்று காலை பேச்சிப்பாறை அணையின் அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் அணையின் மதகுகளை திறந்து வைத்தார். கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அந்த தண்ணீரில் பூக்கள் தூவப்பட்டது. அணையிலிருந்து இன்று 100 கன அடி தண்ணீர் வெளியிட்டப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை சானல் மற்றும் அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 40.55 அடியாக இருந்தது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு -1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

    இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பேச்சிப்பாறையில் 44 மில்லி மீட்டர் மழை பதிவு

    நாகர்கோவில் :

    தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொ டங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பேச்சிப் பாறை அணைப்பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு மழை நீடித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்துள்ளது.

    பெருஞ்சாணி, புத்தன் அணை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 44, பெருஞ்சாணி 19.8, சிற்றார் 1- 9.4, களியல் 12.8, குழித்துறை 12.4, புத்தன் அணை 17.2, குளச்சல் 3, பாலமோர் 7.5

    அணை பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிழக்கு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. கன்னியா குமரி, அஞ்சுகிராமம், ஆரல் வாய்மொழி பகுதியிலும் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். நாகர்கோ வில் பகுதியில் உள்ள சாலை களில் மதியம் நேரங் களில் கானல் நீராக காட்சி அளித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • வெள்ளமடம் பகுதியில் இன்று மீண்டும் விபத்து

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் முக்கியமான பகுதியாக ஆரல்வாய்மொழி உள்ளது. இங்குள்ள வெள்ளமடம், குமாரன்புதூர், சகாய நகர் பகுதியில் வளைவுகள் அதிகம் உள்ளன.

    இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆடல்-பாடல் குழுவினர், திருச்செந்தூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது, சகாயநகர் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. சாலையின் எதிர்புறம் பாய்ந்த வேன் அரசு பஸ் மீது மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, விசுவாசபுரம், சகாய நகர் விலக்கு, குமரன் புதூர், வெள்ள மடம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே சிமெண்ட் கல் கொண்டு தடுப்புகள் (சென்டர் மீடியன்) அமைத்தனர். இதனால் விபத்துக்கள் குறையும் என கருதப்பட்டது. ஆனால் பாதுகாப்பு என வைக்கப்பட்ட தடுப்பு விபத்துக்கு மேலும் காரணமாக அமைந்து விட்டது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி வந்த வேன், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் போன்றவை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நடந்த சூழலில் இன்று மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதன் டிரைவர் பலியாகி விட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை ஒரு பால்வண்டி புறப்பட்டது. அதனை மேலநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் நம்பிபாலன் (வயது27), ஓட்டி வந்தார்.கிளீனராக யேசுராஜ் இருந்தார். இந்த வேன் வெள்ள மடம் அருகே உள்ள விசுவாசபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற வேன், தடுப்பு சுவர் கல்லில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனை பார்த்த பலரும் அங்கு ஓடிவந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் வேனை அவர்களால் மீட்க முடியவில்லை. வேனின் அடியில் சிக்கிக் கொண்ட டிரைவர் மற்றும் கிளீனர் கூச்சலிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆரல்வாய் மொழி போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து சுமார் 1½ மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த வேனை நிமிர்த்தினர். ஆனால் அதற்குள் டிரைவர் நம்பிபாலன் பரிதாபமாக இறந்து விட்டார். கிளீனர் யேசுராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    பலியான நம்பிபாலனுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய தலைமை காவலர் ராபின் வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் தொடர் விபத்துக்களுக்கு காரணமாகி வருவது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர்.

    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இன்று (1-ந்தேதி) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.

    விசைப்படகுகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர். கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் இன்று காலை மீன் பிடிக்க சென்றன. கரை திரும்பிய கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள், வேளா மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

    தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர்.
    • வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக திருவிழா நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தது.

    அதன்பிறகு 9 மணிக்கு திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரை பக்தர்கள் கீழரதவீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்து தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் கொண்டு வந்து பகல் 12.30 மணிக்கு நிலையை வந்தடையும். வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

    தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானக்காரம், மற்றும் குளிர்பானங்கள் தானமாக வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், காஞ்சிதர்மமும் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கி நடை பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram