என் மலர்
நீலகிரி
- அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி உலா வருகிறது. அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் பகுதிக்கு ஒரு சிறுத்தை வந்து அங்கு திரிந்த பூனையை வேட்டையாடி சென்றது. தொடர்ந்து பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு கேட்டில் பவுண்ட், மவுண்ட் பிளசன்ட் ஆகிய பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி கவ்வி சென்றது.
இந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரமாக சிறுத்தைகள் நடமாடடம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிகமாக காணபடுவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தினம் (பார்மசி) விழிப்புணர்வு பேரணி, முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடந்தது. கல்லூரி துணைமுதல்வர் அருண், முதன்மைஅலுவலர் பசவண்ணதேவரு முன்னிலை வகித்தனர். இந்தியன் பார்மசூட்டிகல் அசோசியேசன் நீலகிரி கிளைதலைவர் வடிவேல், செயலாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி ரோஜா பூங்கா, கமர்சியல்சாலை, ஏ.டி.சி வழியாக சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
- ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருவங்காடு,
குன்னூர் வண்ணாரபே ட்டையை சேர்ந்தவர் ராஜன்(61). இவர் கடந்த 5 வருடங்களாக தனது மனைவியை பிரிந்து மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவியை பிரிந்ததால் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலைகாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.
எனவே விவசாயிகள் கேரட்டை முன்கூட்டியே அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று, பின்னர் மூட்டைகளில் நிரப்பி, காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அங்கு உள்ள காய்கறி மண்டிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரட் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ரூ.13 முதல் ரூ.20வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.18 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கேரட் கொள்முதல்விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.
- எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
- பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கம்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
மாவட்ட பேரூராட்சிகளின் உதவிஇயக்குனர் இப்ராகிம்ஷா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த தூய்மைஇந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை எப்படி எந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்பது குறித்து பேசினார்.
இந்த பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் எந்திர உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்
முன்னதாக பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 300 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
எனவே தூய்மை பணியின்போது உயிரிழப்புக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நவீன எந்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் விஷவாயுக்களால் ஏற்படும் அபாயம், பணிச்சூழலில் ஆபத்து உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது, பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர்.
- பா.ஜனதாவின் கொள்கை திட்டங்கள் அடங்கிய பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் செயற்குழு கூட்டம், மாவட்ட அமைப்பாளர் மேனகா தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினரும் நீலகிரி மாவட்ட மகளிர் அணி பார்வையாளருமான ஈஸ்வரி பத்மநாபன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கல்பனா தேவி வரவேற்றார். தொடர்ந்து கட்சியின் பிரச்சாரம் மற்றும் கலை கலாசார பிரிவு சார்பில்
பின்னர் நடந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, நீலகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் அண்ணாமலைக்கு மகளிர் அணி சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று உற்சாக வரவேற்பு அளிப்பது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் மாலினி ஈஸ்வரன், பொதுச் செயலாளர் டாக்டர் அனிதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தர பாண்டியன், கல்பனாமகாலிங்கம், மஞ்சுளா சிவகணேசன், செயலாளர் பத்மஜா பாலச்சந்திரன், சந்திரா சகாயராஜ், பொருளாளர் தயாமணி சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விஜயகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.
- தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
- கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி பந்தலூர் அருகே காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழிமறிப்பு காட்டு யானை பந்தலூர் அருகே சேரம்பாடி, சேரங்கோடு, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகள், வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் படச்சேரி பகுதிக்குள் யானை புகுந்தது. பின்னர் குடியிருப்பில் முகாமிட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மின் கம்பம் மீது மரத்தை சாய்த்து போட்டது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது.
மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு சேரங்கோடு அருகே பந்தலூர்-சேரம்பாடி சாலையில் உள்ள காப்பி காடு பகுதியில் காட்டு யானை சாலையில் முகாமிட்டு, வாகனங்களை வழிமறித்தது.
னத்துறையினரை துரத்தியது தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது ஆக்ரோஷம் அடைந்த யானை வனத்துறையினரை சிறிது தூரம் துரத்தி தாக்க முயன்றது.
இதனால் வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி பந்தலூர் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 56). இவர் கூடலூர் அருகே தேவர்சோலை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் பிதிர்காடு வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு தேவாலயத்தை ஒட்டியுள்ள மின்மாற்றியின் மீது ஏறி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு விஜயகுமார் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள், அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் அதிரடி சோதனை
- 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தது. எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து, கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் கோத்தகிரி உணவுபாதுகாப்பு அதிகாரி சிவராஜ், மீன்வள சார்ஆய்வாளர் ஆனந்த், மீன்வள மேற்பார்வையாளர் ஜீவானந்தம், உதவியாளர் பரமன் அடங்கிய குழுவினர், அங்கு உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் சுமார் 44 கிலோ கெட்டுப் போன அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், மீன் வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது தரமா னவையா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். மீன்களை பலநாட்களாக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்திவைத்து விற் பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
கோத்தகிரி பகுதியில் சுற்றுலாபயணிகள் அதிக மாக குவிந்து வருகின்றனர். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில உணவு விடுதிகளிலும் பழைய பொருட்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்று தகவல்
- அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று கேள்வி
குன்னூர்,
குன்னூர் வி.பி.தெரு, கலைஞர் திடலில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. குன்னூர் நகர தி.மு.க செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர் கான் வரவேற்றார். நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா. முபாரக் முன்னிலை வகித்தார்.
பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்பது வரலாறு. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 75 ஆண்டுகளாக பவள விழா காணும் வகையில், தி.மு.க கட்சி ஒரே சின்னத்தில் இன்று வரை உதயசூரியன் சின்னத்தில் மட்டும் போட்டியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட முன்பு ரெட்டைகாளை பசுக்கன்று, கை ராட்டையில் போட்டியிட்டது. தற்போது கை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல அ.தி.மு.க.வும் பல சின்னங்கள் மாறி உள்ளது.
இரட்டைப்புறா, சேவல் மற்றும் ஜெயலலிதா இறந்தவுடன் குக்கர் மற்றும் பல்வேறு பிரிவாக அந்த கட்சியின் சின்னங்கள் மாறி உள்ளன. ஆனால் 75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்துடன் போட்டியிடும் நாட்டின் ஒரே கட்சி தி.மு.க மட்டும் தான். அன்று முதல் இன்று வரை ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறோம். அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. ஆகையால் எந்தக் கட்சிக்கும் இல்லாத ஒரு நிலைப்பாடு தி.மு.க.வுக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, மாநில விளையாட்டு மேம்பாட்டுதுறை துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலை வருமான வாசிம்ராஜா. குன்னூர் நகரமன்ற தலை வர் ஷீலா கேத்தரின், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.