என் மலர்

    ஈரோடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சிலர் கேமிரா, செல்போனில் சாய்பாபா சிலையை போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒரு குடிசைக்குள் சாய்பாபா சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் அந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. கருவறையில் 8 அடி உயரத்தில் பளிங்கு கல்லால் ஆன ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் சிலர் கேமிரா, செல்போனில் சாய்பாபா சிலையை போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது செல்போன், வீடியோவில் கருவறையில் இருந்த 8 அடி உயர ஷீரடி சாய்பாபா சிலை மறைந்து இருந்தது. ஆனால் சாய்பாபா கழுத்தில் இருந்த மாலை மட்டும் தனியாக பதிவாகி இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் போட்டோ, வீடியோ எடுத்த போது சாய்பாபா சிலை பதிவாகி இருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது.
    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.64 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 513 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.64 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.80 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்து அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர்.
    • நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் என்பவர் பணியாற்றினார்.

    நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரம் மற்றும் நகராட்சியின் உறுப்பினர்கள் நகராட்சி பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கொசு மருந்து இல்லாததை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நகராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார். மேலும் இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கொசு மருந்துகள் ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி வைத்தனர். இதுகுறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓய்வுபெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் இந்த முறைகேட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர்.
    • வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர்.

    மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்ட னர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வீரப்ப ன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடு பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்ப னை க்காக வைக்கப்பட்டி ருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லாயியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்பு டைய அவருடைய உறவி னர்களையும் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.
    • மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ .உ.சி . காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி , தாளவாடி, ஆந்திரா, எடப்பாடி, மேட்டுப்பா ளையம், பெங்களூர், தாரா புரம் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது.

    இங்கு வழக்கமாக 75 முதல் 90 டன் வரை காய்கறிகள் வரத்தாகி வரும். ஆனால் பரவலாக மழை பெய்தது காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது.

    இதனால் இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தது.

    அதே சமயம் தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து இதன் எதிரொலியாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    இன்று வ. உ.சி. மார்க்கெட்டில் விற்க ப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்காய் - 80 - 90, பீர்க்கங்காய்-60, புடல ங்காய்-50, தக்காளி - 35 - 40, பெரிய வெங்காயம் - 30, சின்ன வெங்காயம் - 80, பீன்ஸ்-80, கேரட் - 65, பாவக்காய் - 60,

    முட்டைக்கோஸ் - 20, காலிபிளவர் - 30, குடமிளகாய் -60, முருங்கை க்காய் - 80, பீட்ரூட் - 55, வெண்டைக்காய் - 70, முள்ளங்கி - 40, சுரைக்காய் - 15, சவ்சவ் - 20, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 100. இஞ்சி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மார்க்கெட்டிற்கு பெங்களூர், மகாராஷ்ட்ரா, ஊட்டி கொடைக்கானல், ஆந்திரா, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து பழங்கள் வரத்தாகி வருகிறது.

    இங்கு நாளொன்றுக்கு 30 டன் வரை பழங்கள் வரத்தாகி வந்தன. தற்போது வரத்து குறைவால் இன்று 10 டன் பழங்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

    இதேப்போல் தொடர் முகூர்த்தம் காரணமாகவும், வரத்து குறைவு காரணமா கவும் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று விற்கப்பட்ட பழங்களின் விலை கிலோவில் வருமாறு:-

    கொய்யா-50, செந்தூரம் மாம்பழம் - 50, ஜில் பசந்த் மாம்பழம் - 70, ருமேனியா மாம்பழம் -70, கோப்பூர் அல்வா மாம்பழம்-60, இமாம் பசந்த் மாம்பழம் - 50, மாதுளை பழம் - 120, ஆப்பிள் - 200, ஆஸ்திரேலியா ஆரஞ்சு - 120, சாத்துக்குடி-80, பன்னீர் திராட்சை - 120, சின்ன நாவல் பழம் - 240, பெரிய நாவல் பழம் - 360. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பர்கூர் மலைப்பகுதியில் மழை விடிய விடிய கொட்டியது.
    • இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் வெயி லின் தாக்கம்படிப்ப டியாக குறைய தொடங்கிய வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் சதம் அடித்து வரும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் இந்த மழையினால் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.

    வனப்பகுதிகளுக்குள் விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள், வனப்பகுதி களுக்குள்ளேயே தாகத்தை தீர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 27 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருந்தது.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் எதிரே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    இதன்பேரில் கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரியவந்தது.

    ஆனால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதியவர் ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது புளியம்பட்டி-மேட்டுப்பாளையம் ரோடு ஜே.ஜே.நகர் அருகே மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 18 பாக்கெட்டுகள் மற்றும் விமல் பான் மசாலா 9 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • இந்த கொலையில் தொடர்பு டைய மேலும் 3 பேர் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(29). இவர் நேற்று முன்தினம் கனிராவு த்தர்குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.

    அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜின்னா(30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டி ருந்தனர்.

    சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து சந்தோஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின் ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலைய ங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் குற்றவாளி களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், முருகன், தெய்வராணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்ப ட்டுள்ளது.

    இதற்கிடையே சந்தோ ஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோ ர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவி ட்டார்.

    இந்நிலையில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களி டம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும்.

    மேலும் இந்த கொலையில் தொடர்பு டைய மேலும் 3 பேர் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram