என் மலர்
விழுப்புரம்
- அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
- பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்,
- இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரியவந்தது.
விழுப்புரம்:
பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மரக்காணம் ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இதில் திண்டிவனம் ஓமந்தூர் காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி (வயது 41) என்பது தெரியவந்தது. இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு
- தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்
- போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
விழுப்புரம்:
வாட்ஸ் அப் குரூப்பில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன். வக்கீல். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செஞ்சியை சேர்ந்த வக்கீல்கள் செஞ்சி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தனர்.
மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதில் வக்கீல்கள் கிருஷ்ணன், சக்தி ராஜன், புண்ணியகோட்டி, எவான்ஸ், மணிகண்டன், பிரவீன், சக்திவேல்,பாலசுப்ரமணியன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.
- தியாகராஜன் (35) என்பவரை வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்..
விழுப்புரம்,:
விழுப்புரம் அருகே அகரத்து மேடு கிராமத்தில் பில்லூர்-பஞ்சமாதேவி செல்லும் சாலை ஓரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இது தொடர்பான தகவலின் பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இறந்து கிடந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கூறுமாறு வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் போலீசார் பரவவிட்டனர். மேலும், இறந்து கிடந்தவரின் கையில் தியாகு (எ) தியாகராஜன் என்று பச்சைக் குத்தப்பட்டிருந்ததை வைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர் போலீசார் தீவிர விசாரணையில், கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தவர் குறிஞ்சிப்பாடி நடராஜன் மகன் சங்கர் (வயது 35) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வளவனூர் போலீசார் குறிஞ்சிப்பாடி போலீசாரை தொடர்பு கொண்டனர். அதில் இறந்து கிடந்த சங்கர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தின் ரவுடி லிஸ்டில் உள்ளது தெரிந்தது.
இதையடுத்து தியாகு என்பவர் யார் என்று போலீசார் விசாரித்த போது, அவரும் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் என்பதும் வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் தியாகு இருப்பது வளவனூர் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த 2 பேரும் நண்பர்கள். இந்த 2 பேரும் விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் ராமநாதபுரத்தில் உள்ள தியாகுவின் அக்கா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்பதையும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தியாகு (எ) தியாகராஜன் (35) என்பவரை வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கடந்த சங்கரை, தியாகு கொலை செய்து சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
- கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்,
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அகரத்து மேடு கிராமத்தில் பில்லூர்-பஞ்சமாதேவி செல்லும் சாலை ஓரம் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்க ப்பட்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் எந்த ஒரு துளி ரத்தமும் இல்லை. எனவே மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி கொலை செய்து சாலை ஓரத்தில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் இடது மார்பில் தியாகு என்றும், இடது கையில் திவ்யா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அருகில் உள்ள கிராமங்களில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர்.
- மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கோலியனூர் கடைவீதியில் பா.ம.க. சார்பில் மாநில வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குரு பிறந்தநாளையொட்டி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர். இன்று காலை அங்கு சென்ற பா.ம.க.வினர் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். சிறிதுநேரத்தில் அந்த பகுதியில் பாட்டாளி இளைஞர் சங்கத்தினர், வன்னியர்சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினர் ஏராள மானோர் திரண்டனர்.
அவர்கள் மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு திரண்ட பா.ம.க.வினரிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி த்தனர். இதனை த்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்,
- திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவரது சொந்த ஊர் கடலூர் ஆகும். இவர் இன்று காலை பணிக்காக விழுப்புரம் நோக்கி வந்தார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.
- அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார்,.
- ப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்
விழுப்புரம்:
திண்டிவனம் நேரு வீதியில் அரசுக்கு சொந்த மான ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டிஎம். மையத்துக்கு நேற்று மாலை கொள்ளார் காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார். இந்நிலையில் அருளுக்கு ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமி அருள் ஏடிஎம் கார்டை மறைத்து வைத்துவிட்டு அதற்கு மாறாக அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்து பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் பின்னர் ஏ.டி.எம். கார்டை திருடி சென்ற டிப் டாப் ஆசாமி வேறொரு ஏடிஎம் சென்று பணத்தை நூதகமாக திருடி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அருள் செல்போனிற்கு உங்கள் வங்கியில் இருந்து ரூ.30000 பணம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை பார்த்த அதிர்ச்சடைந்த அருள் இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கூலித்தொழிலாளியிடம் இருந்து நூதனமாக திருடி சென்ற டிப் டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
- பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கம்பந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் பங்காரு அவரது மகன் லட்சுமி நாராயணன்(வயது27). இவருக்கும் மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,வருகிற 10 -ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சமூக நல ஆலோசகர் ஸ்ரீதேவி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா , வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் பெண்ணின் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கி, சிறுமியை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
- ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார்.
புதுச்சேரி:
திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்தை சேர்ந்த வர் காத்தவராயன் மகன் ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் தினந்தோறும் பேரணியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூல மாக வேலைக்கு சென்று விட்டு திரும்பி பேரணி கிரா மத்துக்கு செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழுதா வூரில் நடைபெற்ற தனது நண்பர் விசேஷத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் மூலமாக பேரணி நோக்கி சென்று கொண்டி ருந்தார்,
விக்கிரவாண்டி போலீஸ் கோட்டர்ஸ் அருகே செல்லும் பொழுது முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சென்றவர் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஜெயபாலுக்கு சாந்தி என்ற மனைவியும் சக்தி என்ற மகளும் உள்ளனர்.
- பணத்தை கொடுத்தவர்கள் பேட்டை முருகன் வீட்டிற்கு சென்றனர்.
- அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பேட்டை முருகன் (வயது 46). இவரது உறவினர் உதயசூரியன் (56). அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராக உள்ளார். இவர் பேட்டை முருகன் மூலம் கிடைக்கும் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். மேலும், பேட்டை முருகனின் பினாமியாக உதயசூரியன் உள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் சத்துணவு பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக அவரது உறவினர்கள் ஒரு சிலரிடம் உதயசூரியன் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆட்சி மாறிவிட்டதால் பணி கிடைக்காது என்பதால் பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி அளிக்குமாறு உதயசூரியனிடம் கேட்டனர். அதற்கு உதயசூரியன் வேலைக்காக வாங்கிய பணத்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகனிடம் கொடுத்து விட்டேன். அவர் திருப்பி அளித்தால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் பணத்தை கொடுத்தவர்கள் பேட்டை முருகன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த பேட்டை முருகன் காரை வழி மறித்து பணத்தை கேட்டனர். அப்போது தன்னிடம் பணம் ஏதும் உதயசூரியன் தரவில்லை. மேலும், உங்களிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதே எனக்கு தெரியாது என்று பேட்டை முருகன் கூறினார். இருந்த போதும் பணத்தை கொடுத்தவர்கள் இதனை ஏற்காமல் பணத்தை திருப்பித்தர பேட்டை முருகனிடம் வலியுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பேட்டை முருகன், மணிகண்டன், கலையரசன், பிரபாகரன், கார்த்திக், ராஜி ஆகியோர் நேற்று இரவு 8.45 மணியளவில். அ.தி.மு.க. கிளை செயலாளர் உதயசூரியன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த உதயசூரியன், அவரது மகன் சதீஷ்குமார், சரத்குமார், ஆகாஷ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.