என் மலர்
திண்டுக்கல்
- கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார்.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்ல உள்ளார்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான நடவடிக்கையில் தீவிர பணியாற்றி வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் மாநாடு நடத்தி அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன்று என்று சூளுரைத்தார். அடுத்தகட்டமாக சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் டி.டி.வி. தினகரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. இதனிடையே ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அடையாறில் டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் மகன் திருமணம் வருகிற 7-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்று அவரது ஆதரவாளர் தெரிவித்தார்.
வைத்திலிங்கத்தின் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிப்பாக வருவார் என்பதால் திருமண விழாவிலேயே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் சென்னை செல்ல உள்ளார். அங்கிருந்து 7-ந் தேதி தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
திருமண விழாவைத் தொடர்ந்து சசிகலாவுடன் இணைந்து கட்சி பணியில் ஈடுபடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
- வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
- முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறு தல், முதியோர் உதவி த்தொகை, குடும்பக்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அதிகாரி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணனிடம் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அறிவிப்பு செய்வதை கண்டித்தும், சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெறும் வரை வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
இதனை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார். அப்போது நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு அதிகாரி கள் உடன் இருந்தனர்.
- மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
- இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.
பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
- இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது.
அப்போது திருமணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மணமேடை முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது.
அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.
- மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஞானசேகரனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தபோதும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன விரக்தியில் இருந்த ஞானசேகரன் விஷம் குடித்து மயங்கினார்.
அவரது உறவினர்கள் அவரை மீட்டு கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பீர்பாட்டிலை உடைத்து வயிறு, கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். மேலும், தலையிலும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
- இந்த டாஸ்மாக் மது கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே அம்பாத்துறை ரோட்டில் புதுகோடாங்கிபட்டியில் டாஸ்மாக் மது கடை உள்ளது. இந்த கடை பின்புறம் திறந்தவெளியில் 4 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மது போதையில் தகராறு ஏற்பட்டது.
இதில் செம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன், திருப்பூரைச் சேர்ந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து, அவர்களது நண்பர் திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த குமரவேல் (40) என்பவரை பீர்பாட்டிலை உடைத்து வயிறு, கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். மேலும், தலையிலும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலை பீர் பாட்டில் குத்திய அவரது நண்பர்கள் செம்பட்டி ஹரிகரன், திருப்பூரைச் சேர்ந்த சதீஷ், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர். மது போதை தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் இந்த டாஸ்மாக் மது கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த மே 1-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமியிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே இந்த மது கடை முன்பு குடிபோதையில் சென்றவர் பள்ளி மாணவன் மீது மோதிய விபத்தில் மாணவன் பலியானான். குடிமகன்களால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 3 ஆண்டுகளாக அனுமதி யின்றி ஏலக்காய் பதப்படு த்தும் தொழிற்சாலை செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்ததொழிற் சாலையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- 1994-ன்படி அரசு அனுமதி பெறப்படும் வரை ஏலக்காய் தொழிற்சாலை மூடப்படும் என்று நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அதிகாரிகள் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை ஆர்.ஆர்.நகரில் தனியாருக்கு சொந்த மான ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த கிராம மக்கள், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரிய சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடு த்தனர்.
இதையடுத்து அமைச்சர், இது தொடர்பாக நடவடி க்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 3 ஆண்டுகளாக அனுமதி யின்றி ஏலக்காய் பதப்படு த்தும் தொழிற்சாலை செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்ததொழிற் சாலையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் ஆத்தூர் தாசில்தார் வடிவேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணா மூர்த்தி, ஏழுமலை, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி அரசு அனுமதி பெறப்படும் வரை ஏலக்காய் தொழிற்சாலை மூடப்படும் என்று நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அதிகாரிகள் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.
- விழாவையொட்டி கடந்த மாதம் 26ந் தேதி கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது.
- அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், இரவு சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
நத்தம்:
நத்தம் கர்ணம் தெரு செல்வ விநா யகர், மதுர காளி யம்மன், பாலமுருகன் கோவில் திருவிழா வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கடந்த மாதம் 26ந் தேதி கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டு தளுடன் திருவிழா தொடங்கியது.
தொ டர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. அதனையடுத்து கடந்த மாதம் 30ந் தேதி மாலை முனியாண்டி சாமிக்கு பழம் வைத்தல், இரவு அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் பாவித்து மேளதாளம் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் பால்குடம், அக்கினி சட்டி, அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், இரவு சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- அப்பகுதி வியாபாரிகளிடம் குட்கா, புகையிலை விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் கடையில் சோதனை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
- அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது தான் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
நத்தம்:
நத்தம் அருகே செந்துறை பகுதியில் உள்ள கடைகளில் மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவை சேர்ந்த சரவணன் (வயது36) என்பவர் தான் மது விலக்கு போலீஸ் என கூறி ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்பகுதி வியாபாரிகளிடம் குட்கா, புகையிலை விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் கடையில் சோதனை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு பணம் தர வேண்டும் என கேட்டு ள்ளார். அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது தான் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து சரவணனை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் போலி போலீஸ் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். சரவணன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
- வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.