search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து தாங்கள் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ.51 லட்சம் தர வேண்டும் என மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கிட் திவாரி கூறியுள்ளார்.

    அதன்படி 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பிச் சென்றபோது விரட்டிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை கைது செய்தனர். 15 மணி நேர விசாரணைக்கு பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை வருகிற 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரி தரப்பில் வக்கீல் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அங்கிட் திவாரி சார்பில் வாதிட்ட விவேக் பாரதி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.

    ஆனால் இதனை எதிர்த்த அரசு தரப்பு வக்கீல் அணுராதா, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அங்கிட் திவாரி கடந்த 2018ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தார்.

    எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் சில உயர் அதிகாரிகளின் உடந்தையுடன் பல்வேறு வழக்குகளில் பெரும் தொகையை பேரம் பேசி கிடைக்கும் பணத்தை 7 அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை பெறுவதற்காக அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    இது தொடர்பாக அவருடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது.
    • ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    லஞ்சம், ஊழலை ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சியில்லை என கூறுகிறார். மத சாயம் பூசி தவறான தகவல்களை தெரிவிப்பதுதான் முதிர்ச்சியா என்பதை அவர் விளக்க வேண்டும்.

    மேலும் தற்போது கவர்னர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பர்ஷித் ஆகியவற்றின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற ரூ.12 ஆயிரம் கோடி வரை பா.ஜனதாவினர் செலவழித்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதற்கு அடிப்படை காரணமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வாகும். தேர்தல் நேரங்களில் மட்டும் டீசல், பெட்ரோல், சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றனர். ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து பேசினார்.

    அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சுரேஷ்பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளார்.

    அவரிடம் ஏற்கனவே ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரி பெற்றுள்ளார். 2-வது தவணையாக திண்டுக்கல்லில் பணம் பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை காரில் துரத்திச்சென்று கைது செய்தனர். அவரிடம் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி வேறு யாரிடமும் இதேபோல் மிரட்டி பணம் பெற்றாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர். மேலும் அங்கிட் திவாரிக்கு நெருக்கமான அதிகாரிகளிடம், அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் சிறையில் இருந்த அவர் இன்று மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
    • மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டாக்டர் சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 29.10.2023-ந்தேதி ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து டாக்டர் சுரேஷ்பாபுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனக்கு தமிழ் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் உரையாடவும் என கூறிவிட்டு மறுநாள் 30.10.2023-ந்தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டார்.

    தன் மீதான வழக்கு முடிந்துவிட்டதாக கூறியபோதும், உங்கள் மீதான புகாரில் உண்மை உள்ளது. எனவே நீங்கள் விசாரணைக்கு வராவிட்டால் சம்மன் அனுப்பி அதனை விசாரிக்க நேரிடும் என மிரட்டினார்.

    அதன்பிறகு பல நாட்களில் வாட்ஸ்ஆப் மூலமும், தொலைபேசி மூலமும் போன் செய்து தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி பணம் தரவேண்டும் என கூறினார்.

    அதற்கு டாக்டர் சுரேஷ்பாபு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியபோது வேறு ஒரு நபரை பேசவைத்து ரூ.51 லட்சம் கொடுத்தால்போதும் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டி உள்ளது. தீபாவளி செலவுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறினார். அதன்படி கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த பணத்தைதான் கையில் வாங்காமல் டிக்கியில் வைத்துவிடுமாறு கூறினார்.

    எனது கார் டிரைவர் அவரது டிக்கியில் பணம் வைத்தபோது அதனை வீடியோ பதிவு செய்து கொண்டேன். ஆனால் மீதி பணத்தை ஒரு வாரத்தில் தர வேண்டும் என கண்டிப்பாக கூறினார். அவ்வாறு தராவிட்டால் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என மிரட்டினார்.

    உங்கள் ஊரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறோம். அது உங்களுக்கு தெரியும் எனவும் கூறினார். இதனையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. தான் காவிரிஆற்று மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு முக்கிய பணிகளுக்காக சென்னைக்கும், டெல்லிக்கும் சென்றுவருவதாகவும் தெரிவித்தார். இதனால் தன்னால் அங்கு வர வாய்ப்பில்லை என கூறிவிட்டார்.

    மேலும் உங்களுக்கு ஹவாலா பணம் பரிமாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா என கேட்டார். அவர்களை பற்றி எல்லாம் தனக்கு தெரியாது என டாக்டர் சுரேஷ்பாபு கூறியுள்ளார். தான் ஊருக்கு வந்து பணத்தை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் மட்டும் அனுப்பி வந்தார். டிசம்பர் 1-ந்தேதி காலையில் வாங்கி கொள்வதாக கூறியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கொண்டனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரிந்துவரும் ஹர்த்திக் என்பவரும் திவாரிக்கு ஆதரவாக தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கிட் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார்
    • கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியில் இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கு முடிவடைந்த நிலையில் அதே வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி(32) என்பவர் டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டார். சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை தாங்கள் கையில் எடுக்க இருப்பதாகவும், இதனை கைவிடவேண்டும் எனில் ரூ.5 கோடி லஞ்சமாக தரவேண்டும் என கேட்டுள்ளார்.

    அவர் சற்று தயங்கவே ரூ.3 கோடி தருமாறு கேட்டுள்ளார். அதற்கும் டாக்டர் சுரேஷ்பாபு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து ரூ.50 லட்சம் பேசி முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு 2-ம் தவணையாக ரூ.31 லட்சம் கொடுக்க முயன்றபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டார்.

    நேற்று காலை அங்கிட் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து இரவு வரை விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இரவு 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மிகுந்த சோகத்துடன் அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் யாருடனும் பேசாமல் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் அவர் கதறி அழுததால் சிறைக்காவலர்கள் அவருக்கு வேறு எதுவும் உதவி வேண்டுமா? என கேட்டனர். ஆனால் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. விடிய விடிய தூங்காமல் தனது அறையிலேயே அழுதபடி இருந்தார்.

    அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர். ஆர்.கே.திவாரியின் மகனான அவர் அமலாக்கத்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். வடமாநிலங்களில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல் அரசு டாக்டரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

    டாக்டர் மதுரைக்கு சென்றபோது அவரது காரில் ஏறிக்கொண்ட அங்கிட் திவாரி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கேட்டுள்ளார். அதன்பின்னர் ரூ.50 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார். இதைத்தொடர்ந்து முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை நத்தத்தில் வைத்து வாங்கி கொண்டார். பேசியபடி மீதி பணத்தையும் தரவேண்டும் எனவும், தனது மேல் அதிகாரிகளுக்கு பங்கு தரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டினார்.

    தனக்கு வந்த மிரட்டல் குறித்து டாக்டர் சுரேஷ்பாபு நவம்பர் 30-ந்தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர். பணத்தை அங்கிட்திவாரி வாங்கும்போது தான் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக கையால் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறுவது வழக்கம். அதன்படிதான் டாக்டர் சுரேஷ்பாபுவிடமும் பணத்தை கையில் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

    இவர் பல்வேறு இடங்களில் சோதனைக்கு செல்லும்போது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம், நகைகளை பார்த்து நாமும் இதேபோல் ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைத்துள்ளார். அதேபோல் குற்றவழக்கில் இருந்து தப்பிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களது செல்போனுக்கு சில மாதங்கள் கழித்து போன் செய்து அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்துள்ளார். தான் வாங்கிய பணத்தில் உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் சோதனை முடிவுக்கு பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
    • வரும் 15-ம் தேதி வரை அங்கிட் திவாரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் நேற்று காலை வந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி.

    இதனால் அச்சப்பட்ட டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.

    புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிட் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அங்கிட் திவாரி. அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சப் பணம் ரூ.20 லட்சம் மொத்தமாக கைப்பற்றப்பட்டது தெரிய வந்தது.


    அங்கிட் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கிட் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என பல மணிநேரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    மதுரையில் உள்ள அங்கிட் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது சி.ஆர்.பி.எப். போலீசார் இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

    மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில், தொடர்ந்து, வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
    • அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.


    காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.

    மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு இட ங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதில் டாக்டர் ஒருவரிடம் பெற்ற பணம் இந்த ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேசம் மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    • நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் வீரலப்பட்டியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நந்தினி ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து வீரலப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பிரதீப்குமார் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு பல முறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளரான அசோக்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    இதன் காரணமாகத்தான் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என பிரதீப் குமார் சந்தேகமடைந்தார். இந்நிலையில் கள்ளிமந்தயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதை பார்த்ததும் பிரதீப்குமார் கோபமடைந்தார். தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
    • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print