என் மலர்
ராணிப்பேட்டை
- அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் தனது நெஞ்சினில் 2 பேரும் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விஷால் (வயது 19), பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சில வருடங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 28-ந்தேதி இரவு மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த விஷாலின் உயிர் நண்பனான அஜித் என்கிற குண்டு (வயது 20) சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். தூக்கில் தொங்கிய நண்பனை கீழே இறக்கி கதறி அழுதார். மேலும் அஜித், விஷாலை ஆஸ்பத்திரிக்கு பதறி அடித்துக் கொண்டு தூக்கிச் சென்றார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கயிற்றை கையில் வைத்துக் கொண்டு, வாலிபர் அஜித் என்ன செய்வதறியாமல் அங்கும், இங்கும் பித்து பிடித்தது போல் சுற்றித்திரிந்தார். மேலும் விஷால் உடலை புதைத்த சுடுகாட்டிற்கு, அஜித் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
கடந்த 30-ந்தேதி இரவு அஜித், மதுபாட்டில், சுவீட், பழம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விஷால் உடல் புதைத்த இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
மதுவை விஷால் புதைத்த இடத்தில் ஊற்றி, சுவீட் மற்றும் பழங்களை படையலிட்டு அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாராம்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர், அஜித்துக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், அஜித்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே அஜித் உடலையும் புதைத்தனர்.
அஜித் இறப்பதற்கு முன்பு அதிகாலை 2.50 மணிக்கு, விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை செல்போன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, நானும் வருகிறேன் என பதிவிட்டிருந்தார்.
மேலும் அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் தனது நெஞ்சினில் 2 பேரும் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேர் பலி
- போலீசார் விசாரணை
வாலாஜா:
சென்னை அடையாறு பகு தியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரச வத்தில் பிறந்தவர்கள்.
தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.
மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண் டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதிலாரிக்கு அடியில் புகுந் தது.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபா டுகளுக்குள் சிக்கி கார் டிரை வர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தர ணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் விட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலைகளை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக வாலாஜா அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துண்டு பிரசாரம் வினியோகம்
- தியானத்தை கடைபிடிக்க வேண்டும்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடை மூன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
புகையிலை பழக்கத்தை கைவிட தியானத்தின் மூலம் நம்முடைய மனோபலத்தை அதிகரித்து நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்களிலிருந்து நிரந்தரமாக ஈடுபட்டு அமைதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை வாழ தியானத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
ரெயில் பயணிகள் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை கொடுத்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 11-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகு தியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசாப் பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
அரக்கோணம் தாலுகா மூதூர் கிராமம் ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் உலகநாதன் (வயது 21).
இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இவர் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தனது காதலியுடன் வந்தார். அங்கு பெரியமலை யோக நரச்சிம்மர் மலையில் உள்ள 600-வது படிக்கட்டு அருகில் உலக நாதனுக்கும்.
அவரது காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது காதலியின் துப் பட்டாவால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டபாளையம்போலீ சார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. உலகநாதனுடன் வந்த அவரது காதலி என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பெண்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் வீடு திரும்புவதற்காக நேற்று மாலை பூட்டுத்தாக்கில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் வந்தனர்.
மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் அந்த வாகனம் ஆட்டோ டிரைவர் மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை. கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் யார், ஆட்டோ டிரைவர் யார் என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மனுக்கு பொங்கல் வைத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன்
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரினம்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பேரூராட்சி, கொண்டாபுரம் பகுதி, கண் ணாங்குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உடல் நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ரமேஷ்(23) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி வந்துள்ளது. வலி தாங்க முடியாமல் ரமேஷ் வீட்டில் உள்ள பேனில் வேட்டியை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.
- ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 138 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்பெல்லாம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும்போது அதிகமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிட வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது.
ஏனென்றால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் கடந்த 2 வருடங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.
மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகின்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.
கடந்த ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் 205 மனுக்கள் வரப்பெற்றது.
இதில் 138 மனுக்கள் விசாரனையின் அடிப்படையில் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்ப ப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமை மாறி தற்பொழுது மக்களைத் தேடிவந்து குறைகளை கேட்டறிந்து நலத்திட்டங்களை அரசுத வழங்கி வருகிறது.
மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத், உதவி கலெக்டர் வினோத்குமார், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, தாசில்தார்கள் நடராஜன், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி. இவர் வாலாஜா அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துள்ளார். வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 25-ந் தேதி நெமிலி அருகே உள்ள கோவிலில் வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சோளிங்கர் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த ஊர் நல அலுவலர் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி திருமணம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.