search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதி தொப்பம்பட்டி பிரிவு, கோத்தாரி நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 38). இவர், கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார். அவற்றை எடுத்துச் சென்றபோது அந்த மாணவிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர்.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவை:

    ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாளை நாடு முழுவதும் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் பாபர் மசூதி தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகரில் 1,200 போலீசார் புறநகரில் 800 போலீசார் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காந்திபுரம் நகர பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அன்னூர், வால்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

    பஸ்களிலும் ஏறி அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர். மக்கள் வைத்திருந்த பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோல் மக்கள் அதிக நடமாட்டம் இருக்க கூடிய மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் ரெயில்வே தண்டவாளங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    கோவை பீளமேடு அருகே உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை உக்கடம் பகுதியில் போராட்டமும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
    • இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    கோவை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.

    இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.

    இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற முயன்ற உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களில் சிலரை போலீசார் காவலில் எடுத்து கோவை அழைத்து வந்து அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ்(23), போத்தனூர் பொன்விழா நகரை சேர்ந்த தாஹா நசீர்(27) ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது இத்ரிஸ், தாஹா நசீர் ஆகிய 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

    அவர்கள் தற்போது கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம் ஜி.எம். நகரில் உள்ள முகமது இத்ரிஸ் வீடு மற்றும் போத்தனூர் பொன்விழா நகரில் உள்ள தாஹா நசீரின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்கள் ஒன்றாக கூடி பேசிய இடங்கள், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய இடங்கள், யார், யாரெல்லாம் அதில் இருந்தனர் என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.
    • கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமையும்.


    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டியது போல 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.

    இந்தியா கூட்டணி, பா.ஜ.கவை அப்புறப்படுத்த ஒருங்கிணைத்துள்ளது. தி.மு.க அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் பல்கலைக்கழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் இந்திரா நகரில் ஜாதி வெறியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல.
    • நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம்.

    துபாயில் தொடங்கிய ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில், "நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது. மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றத்தையும், மண் புத்துயிர் பெறுவதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதிலும் நம்பிக்கைத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்" என்று கூறினார்.

    இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.
    • எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகளை வீழ்த்துவதற்காக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இந்த முறை அ.தி.மு.க.வால் பெற முடியாது.

    சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, தற்போது சிறுபான்மை மக்களின் காவலன் என அ.தி.மு.க. ஏமாற்ற பார்க்கின்றது.

    அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.

    கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதேபோன்று வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த 2 தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். மதுரை, கோவை பாராளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம்.

    எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும்.

    உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி தொடங்கி அண்ணாமலை வரை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை.

    அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா, பா.ஜ.க.வா என பகிரங்கமாக விவாதிக்க தயார்.

    தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது.

    சிறுகுறு தொழில்முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம். தி.மு.க. கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.
    • பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்றது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுபற்றி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. ரத்தக்கறையுடன் ஒரு சுத்தியலும் கிடந்தது. மேலும் ஒரு போர்வை, துண்டு ஆகியவையும் இருந்தது.

    ரத்தக்கறையுடன் சுத்தியல் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் யாருக்கு சொந்தமானது என விசாரித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது என தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி தீபா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்று இருக்கிறார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தான் தீபா வந்த கார் கோவையில் அனாதையாக நின்றது தெரியவந்தது. தீபாவுடன், ஆசிரியர் ஒருவரும் வந்ததாக கூறப்படுகிறது. தீபா பணியாற்றிய அதே பள்ளியில் தான் அவரும் பணியாற்றி இருக்கிறார். தீபா மாயமான அன்று அவரும் மாயமாகி உள்ளார். இதனால் தீபாவையும், அந்த ஆசிரியரையும் போலீசார் தேடி வந்துள்ளனர்.

    தற்போது தீபா வந்த காரில் ரத்தக்கறை படிந்துள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தீபாவுக்கும், அவருடன் வந்த ஆசிரியருக்கும் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் தாக்கிக் கொண்டதில் காரில் ரத்தக்கறை ஏற்பட்டதா அல்லது எதனால் ரத்தக்கறை ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மாயமான ஆசிரியை தீபாவின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரையும், ஆசிரியரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருவதால் கோவை மாநகர போலீசாருக்கு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.
    • எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளி வந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது.

    கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.

    வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58 சதவீத இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.


    ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாகவும் பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி 20 யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது.

    யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்சனை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும்.

    5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சி.பி.எம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை.

    அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மசோதக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருகின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print