என் மலர்

    ராமநாதபுரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாளை (3-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு வைத்து கட்சித் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்திடவும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியம், நகர, பேரூர் கழகம், கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், மாணவ- மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    "என்றென்றும் கலைஞர்" என்ற தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டங்களும் வெகு நடத்தப்பட வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29-ந் தேதி விக்னேசவர பூஜை, தன பூஜை உடன் தொடங்கி கணபதி ஹோமம் வாஸ்து சாந்திகள் நடைபெற்று, நேற்று முன்தினம் அதிகாலை பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை கடம் புறப்பாடாகி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கும்பாபிஷேகம், மகிஷாபிஷேகம் ஆகியவை நடந்தன.

    இதில் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா, புகையிலை பொருட்கள், கடல் அட்டை போன்றவை கடத்தலின்போது அதிக அளவில் சிக்கி உள்ளன. ஆனால் அண்மை காரணமாக தங்க கட்டிகளை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு தங்க கட்டிகளை கடத்தி வருபவர்கள் கடலில் அதிகாரிகள் ரோந்துவரும்போது பார்சலை அவர்களுக்கு தெரியாமல் கடலில் வீசி விடுகிறார்கள். கடத்தல்காரர்கள் வீசும் பார்சலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.

    எனவே தைரியமாக கடலில் அதனை வீசும் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் சென்ற பின் ஆழ்கடலில் குதித்து ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் எடுத்து செல்கிறார்கள். ஆனால் இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 4 மாதங்களில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி கடத்தல்காரர்கள் 100 கிலோவுக்கும் மேல் தங்க கட்டிகளை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
    • நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும்.

    இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.

    கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர்.

    கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட முயற்சிக்கு பிறகு நேற்று மதியம் கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சல் கண்டெடுக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்ட பார்சல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    அப்போது அதில் 11.60 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் மட்டும் மொத்தம் 32.80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ20.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தன.

    இதற்கிடையில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை 2 படகுகளில் கடத்தி வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 35), சாதிக் அலி (32), முகமது அசார் (30), அப்துல் அமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் (46) என தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மதுரையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு இன்று அழைத்து வந்தனர். அங்கு தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    வளைகுடா நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பண பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தன. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடு பிடியால் ஹவாலா பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் கடத்தல்காரர்கள் அரபுநாடுகளில் இருந்து ஹவாலா பணம் மூலம் தங்க கட்டிகளை வாங்கி இலங்கைக்கு கொண்டு வருகின்றனர். அந்த நாட்டில் கெடுபிடிகள் குறைவு காரணமாக கடத்தல்காரர்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு வருவது எளிதாக உள்ளது.

    அங்கிருந்து படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி கொண்டு வந்து இங்குள்ள சிலரிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதாக தெரிகிறது. அது தொடர்பாக கைதான வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர்.
    • நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது.

    நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் தற்போது கடல் காற்று அதிகமாக வீசி வருவதால் சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை தேடி வந்தனர். இவர்களோடு நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் இன்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப் பட்டது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    கொடியேற்றம் நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயி ரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி(செவ்வா ய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் 24-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடுரோட்டில் தீப்பற்றி கார் எரிந்தது.
    • மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). இவர் தனது காரில் பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்றார். அங்கு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சுரேஷ் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் காரின் பெரும் பகுதி எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஆனைசேரி கிராமத்தை சேர்ந்த செந்தூர்முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.

    காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முஸ்லிம் நிர்வாக சபையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
    • முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிழக்கு பகுதி முஸ்லிம் நிர்வாக சபையின் நிர்வாகி கள் பதவிக்காலம் முடிவ டைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டு பதவி ஏற்பு விழா நேற்று மாலை மதரஸா கட்டிடத்தில் நடந்தது.

    முன்னதாக பனைக்குளம் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.இதில் முஸ் லிம் நிர்வாக சபை முன்னாள் நிர்வாகிகள், வாலிப முஸ்லீம் சங்க

    தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிசாஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான ஜெய்னுல் அஸ்ஸலாம், செயலாளர் ரோஸ்சுல்தான், பனைக் குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் முகைதீன், செயலாளர் தாகிர் உசேன், ஜமாத்-சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பனைக்குளம் முஸ்லிம் நிர்வாகசபையின் தலைவராக பாரமபரியமிக்க சீ.கு.என்ற குடும்பத்தை சேர்ந்த ஹம்சத் அலி 7-வது முறையாக ஜமாத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். உதவி தலைவராக ஏ.முகைதீன் அலி, செயலாளராக ஏ.கரீம் கனி, உதவி செயலாளராக நூருல் மன்னான், பொரு ளாளராக எம்.பி.எம்.சாகுல் ஹமீது உள்பட உறுப்பி னர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் முன்னிலையில் பதவி ஏற்ற னர். பின்னர் முஸ்லிம் பரிபாலன சபை தலை வர் ஜெய்னுல் அஸ்லலாம் பேசுகையில், புதிய நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்க ளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கிராமத்தின் வளர்ச்சிக்கும், ஒற் றுமைக்கும் உறுதுணையாக இருந்து நமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக வாலிப முஸ்லிம் சங்கதலை வர் சீனி அன்வர்அலி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print