என் மலர்

    திருவாரூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கான இலவச விடுதி, சத்தான உணவு, சிறப்பு கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.
    • இலவச காக்ளியர் அறுவை சிகிச்சைக்கு எற்பாடு செய்து பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய 14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி கூத்தாநல்லூரில் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் சேரும் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கான இலவச விடுதி, சத்தான உணவு, சிறப்பு கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி மணலியில் விடுதியின்றி தினசரி வந்து செல்லும் வகையில்14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தொடக்க கால பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

    திருவாரூர் நகராட்சியில் முதலியார் தெரு, பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காது கேளாத, வாய்பேச இயலாத, இளம் சிறார்களுக்கு 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

    இந்த மையம் மூலம் காது கேளாத வாய்பேச இயலாத குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச காக்ளியர் அறுவை சிகிச்சைக்கு எற்பாடு செய்து பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செவித்திறன் குறைவுடையோருக்கான மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது.

    கலெக்டர் அலுவலகம் எனவே மேற்கானும் ஆரம்ப கால மையங்கள் அல்லது சிறப்பு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பு பெற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல் பாஸ்போர்ட் சைஸ்போட்டோ 2, ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்து கொண்டனர்.

    திருவாரூர்:

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பூந்தோட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயகர்வேலன் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமாராணி, மருத்துவ துணைஇயக்குனரின் உதவியாளர் கணேசன், சித்தா டாக்டர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
    • ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நலச்சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், பொருளாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜன், சாகுல் ஹமீது, முருகானந்தம், முகமது அலி ஜின்னா, முகமது மைதீன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் தில்லைவி ளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், பகல் நேரத்தில் செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரசுக்கு காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை, தில்லைவி ளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக இருமுனைகளில் இணைப்பு ரெயில் விட வேண்டும்.

    தில்லைவிளாகம் ரெயில் நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். சாலை வரை தார்சாலை வேலையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    ரெயில் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
    • யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை,

    தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துகிறது.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ளவர்கள் குரங்கை விரட்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றித்திரியும் குரங்களை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கை மான் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 /டிபிஎஸ் 5 மற்றும் இதர ரகங்களும் குடவாசல், வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 - 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும்.

    மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

    மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

    தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

    விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும். 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

    10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.

    ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.

    ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.

    மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.

    இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.

    இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.

    மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.

    இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்தி றனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, நடமாடும் மதி அங்காடியை (எக்ஸ்பிரஸ்) இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஆர்வமும், முன்அனு பவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் தொடர்புடைய சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றி தழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பாடகச்சேரியை அடுத்த சொரக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு காவலர் அறிவழகன், சிறப்பு தனிப்படை காவலர்கள் புகழேந்தி, முஜ்பூர் ரஹ்மான், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மது பாட்டில்க ளை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo