search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஏற்கனவே மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

    அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை,

    ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பாரம்பரிய குணமான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறும். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்பு களால் சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கந்தர்வ கோட்டை காந்தி சிலை| பேருந்து நிலையம் மற்றும் புதுகை சாலையில் கட்சி கொடி ஏற்றியும்,வெடி வெ டித்தும் , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரம சிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, தி.மு.க. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தவசு மணி, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பழைய கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மெய்குடி பட்டி முருகேசன் ,

    ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பாரதி பிரியா அய்யாதுரை, திருப்பதி, இளைஞர் அணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது.
    • இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆ னைக்கொம்பன் தாக்கு தலைக் கட்டுப்படுத்திடவும் அதிக மகசூல் அடைந்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது. இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்ல து இளஞ்சிவப்பு நிறமாக வோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்ப தனால் இது ஆனைக் கொம்பன் என்று அ ழைக்கப்படுகிறது.

    தாய்ப்பூச்சியானது நீள மான உருளை வடிவிலான ப ளப்பளப்பான முட்டை களை இலையின் அடிப்ப குதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயி ரில் நெற்கதிர்கள் உருவா காமல் விவசாயிகளுக்கு ம கசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

    எனவே, வயல்களை க ளைகள் இல்லாமல் தூய்மையாக வைத்தி ருப்பதனாலும், புற ஊதா விளக்குபொறிகளை வைத்து கவர்ந்தும் அழிக்க லாம். தழைச்சத்து உரங்களை பரிந்து ரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்கு தலில் இருந்து பாது காக்கப்படும். மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள் ) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும்.

    இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்து களான கார்போசல்பான் 25 சதவீதம் பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தினை அணு கிட கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்.
    • புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரை யன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தென்னதிரையன் குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்க பட்டது. குளங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு, பழமரக்கன்று கள் நடப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குளத்தில் சேகரமாகும் நீர் வீணாகா மல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் பழமரக்கன்றுகள் நடுவதன் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள குரங்குகள் அனைத்தும் இந்த பழமரக்கன்றுகள் வளர்ந்தவுடன், இதில் உள்ள பழங்களை சாப்பிடு வதற்காக இங்கு வந்து வாழ துவங்கும். மேலும் இது குரங்குகளுக்கு வாழ்வ ழிக்கும் திட்டமாகவும் இருக்கும்.

    புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடர்ந்து மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளிலும் தொடங்கிட அரசு அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் குளங்கள், வாய்க்கால்கள், ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) இளங்கோ தாயுமானவன், வட்டாட்சியர் கவியரசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு, தலைமை யாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் அரசுப்பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் 3 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அன்றாடம் பள்ளியில் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யக்கூடிய பணிகளை மறக்காமல் பதி வேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் தேவைப்படும் விலையில்லா பேருந்து பயண அட்டை சார்ந்த தகவல்களை உடனடியாக போக்குவரத்துக்கிளைக்கு அளித்திட வேண்டும். 6- ம் வகுப்பு முதல் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த விபரங்களை மீண்டும் சரிபார்த்து சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய் யவேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்தி றனை உரிய காலத்திற்குள் 100 சதவீதம் அடைய பாடுபட வேண்டும். பள்ளி நலனில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கி ணைத்து பள்ளியின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் 10,12 - ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் ஒவ்வொன்றையும், தனித் தனியாக பாடவாரியாக பகுப்பாய்வு செய்து 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆலோசனைகள் வழங்கி னார். இந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளைய ராஜா மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன,
    • தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன, தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சொக்கப்பான் கொளுத்தப்பட்டன, நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று கலந்து கொண்டனர். இதேபோல் குமரமலை மலைமேல் பாலதண்டாயுதபாணி கோவிலிலும் தீபதிருவிழா நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 34 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 40 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print