என் மலர்

    விருதுநகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
    • இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.

    வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவ ராயனேந்தல் கிராம பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய அரசு புறம்போக்கு இடங்களை சுற்றி அடை யாள கற்களை நட்டு வைத்தனர். ேமலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை விரைவில் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பினர் போட்டிருந்த முள்வேலி களும் எரிக்கப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரையொருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கடுமையாக மோதிக் கொண்டனர்.

    இந்த மோதலில் பிரபா கரன் (வயது 56), இஸ்ரவேல் (45), பாக்கியராஜ் (44), சந்தன மாதா (40), சாம் தேவ குமார் (24), ஜான் செல்லையா (33) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர் பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலால் மணவராய னேந்தல் பகுதி யில் பெரும் பதட்டம் நீடித்து வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • இதில் ரூ.27 லட்சத்து 76 ஆயிரம் 54 கிராம் தங்கம் இருந்தது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவில் சக்தி ஸ்தலங்க ளில் பிரசித்தி பெற்ற கோவி லாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப் பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

    அதன்படி இம்மாதமும் நேற்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் கோசாலை உண்டி யல் 1, அன்னதான உண்டியல் 1 என மொத்தம் 13 உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டன.

    திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர் மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமை யில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட் டன.

    ரூ.27 லட்சம் காணிக்கை

    கோவில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண் ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக நிரந்தர உண்டியல் மூலம் ரூ.25 லட்சத்து 81 ஆயிரத்து 969-ம் கோசோலை உண்டியல் மூலம் ரூ.41 ஆயிரத்து 810-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 614 என மொத்தம் ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்து 393 ரொக்கமும், 54 கிராம் தங்கமும், 255 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.

    மேலும் காணிக்கை எண்ணும் பணியில் ராஜபா ளையம் சரக ஆய்வாளர், மகளிர் சுய உதவிக் குழுவினர், பக்தர் சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மாவட்டத்தில் பெண், வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வீரார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னிதாய்(45). இவர் வீட்டுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோட்டூர் மலைப்பட்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(33). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்கு றைவு ஏற்பட் டது. மருத்து வம் பார்த்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி தங்கபாண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் உள்ள இஸ்மாயில்கான் கோரி வகையறாவுக்கு பாத்தியத்திற்கு உட்பட்ட டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் அகில இந்திய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் 2 நாட்கள் நடந்தது.

    இந்த முகாமிற்கு காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாவட்ட பொது செயலாளரும், கோரி மருத்துவ நல மையத்தின் மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    காங்கிரஸ் நகர தலைவர் சங்கர் கணேஷ், அகில இந்திய சட்டா உரிமை கழகம் இமாம்ஷா, எச்.பி. கேஸ் அழகுராஜா, அப்துல் பஷீர் ரகுமான், நகர் மன்ற உறுப்பினர் ரபிக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் கலந்து கொண்டார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு மூட்டு மற்றும் கழுத்து, இடுப்பு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சையது இஸ்மாயில் சித்திக் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சிறுநீரக நோயால் பலர் சிகிச்சை பெறுவதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 44 ஊராட்சிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நரிக்குடி, என்.முக்குளம், புல்வாய்க் காரை, மானூர், வீரசோழன், கொட்டகாட்சியேந்தல், மறையூர் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக் கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பெரும் வகையில் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் கொட்டகாட்சி யேந்தல் மற்றும் மறையூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி இருந்தும் தற்போது வரை அதனை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளம், சாலை இலுப்பைகுளம் ஊராட் சிக்கு உட்பட்ட சொட்டமுறி என இன்னும் இது போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குழாயில் வரும் குடிநீரை குடிப்பதற்கு பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடிக்க குடிநீரின்றி வேறு வழியில்லாமல் பல வருடமாக அதனை குடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகளால் கடும் பாதிப்படைந்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் திட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் மின் இணைப்பே கொடுக் கப்படாமல் உள்ளது.

    எனவே பெரும்பாலான குடிநீர் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு செயல்பாடின்றி கிடப்பதால் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள குடிநீர் நிலையங்க ளின் உபகரணங்கள் வீணாகி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் சுகாதாரமான குடிநீருக்காக பல வருடங்களாக ஏங்கி தவித்து வருவதாக அப்பகுதி களிலுள்ள சமூக ஆர்வலர் கள் கடும் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் பல கிராமங்களில் குழாய்களில் வரும் குடிநீரை குடித்து வருவதால் பொது மக்களுக்கு கல்லடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மருத்து வமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருவதா கவும் தெரிய வருகிறது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ஆகவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்லடைப்பு மற்றும் சிறுநீ ரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் கிராமங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உடனடியாக அங்கு 5 ரூபாய் நாணய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தருவதோடு, அதன் செயல் பாடுகளை அதிகாரிகள் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்று நீரை இறைக்க பயன்படும் துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டி யில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

    கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு வகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவை யான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோவில் அருகில் வெட்டப்பட்டுள் ளவை திருமஞ்சனக் கிணறு கள் என்றும், வழிப்பாதை களில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.

    இந்நிலையில் ராமநாதபு ரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட் டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோவில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெ டுத்து படித்து ஆய்வு செய்த னர். இதுபற்றி ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    பாட்டக்குளம் சல்லிப் பட்டி ஸ்ரீபாலாண்டி அய்ய னார் கோவில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் "ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோற னான விசைய கங்கர் செய்தது உ" என எழுதப்பட் டுள்ளது. இக்கோவில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத் துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியா ளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டி ருக்கலாம்.

    இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்த ரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது. மேலும் விருதுந கரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லி புத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகசேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.

    கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவி யுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • இந்த விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெங்கட்ராமன் முன்னிைல வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் தென்காசி டாக்டர் சங்கரகுமார் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு இலவச சேலைகளும், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். விழாவில் மாணவர் காங்கிரஸ் மாநில அமைப்பாளர் சீமான் ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற இளைஞரணி தலைவர் மனோஜ் குமார், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராமர், மாவட்ட மாவட்ட துணைத்தலைவர் பாண்டி செல்வம், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பூங்கொடி, ராஜபாளையம் வட்டார துணைத்தலைவர் சின்னத்தம்பி , பகவதி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர்களின் யூனியன் வட்டார தலைவி கற்பக கனி, துணைத்தலைவி ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo