என் மலர்
விருதுநகர்
- விஷ பூச்சி கடித்து ஆடு மேய்த்தவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் அக்ரகார தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 29). இவருக்கு கடந்த வாரத்தில் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வசிக்கும் சகோதரி பாண்டீஸ்வரி வீட்டிற்கு சென்றார்.
அவர் சுப்பையாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று சுப்பையா ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் சுப்பையா சகோதரி வீட்டிற்கு வந்தார். அவரை மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அரசு மருத்து வமனைக்கு செல்லுமாறு கூறி உள்ளனர்.
உடனடியாக பாண்டீ ஸ்வரி தம்பி சுப்பையாவை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் தலைமை டாக்டர் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறி உள்ளனர்.
மறுநாள் சென்றபோது அவரை பரிசோதித்த தலைமை டாக்டர் உடலில் விஷம் பரவி இருப்பதாக கூறி பூச்சி எதுவும் கடித்ததா? என சுப்பையா விடம் விசாரித்தார். அப்போது தான் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது பூச்சி கடித்ததாக சுப்பையா கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்த தலைமை டாக்டர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டீஸ் வரி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சுழி
விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரது மனைவி கனகா(வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனநல பாதிப்பில் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்தக்குறிச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சங்கரலிங்கம் (19). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி சங்கரலிங்கத்தின் சகோதரிக்கு திருமணம் நடந்தது. அப்போது சங்கரலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். ஆனால் ராமச்சந்திரன் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த சங்கரலிங்கம் சகோதரிக்கு சீர்கொடுக்க செல்லாமல் இருந்து விட்டார்.
இந்த நிலையில் அருப்புக்கோட்ைட அருகே உள்ள செங்குளம் பகுதியில் சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.
மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- விருதுநகர் கலெக்டர் வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழு வில் 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
விருதுநகர், ராஜ பாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்க ளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்கள், பரி வர்த்தனை செய்ய பரிவர்த் தனை கூடங்கள், ஏல நட வடிக்கை மேற்கொள்ள தேவையான ஏலக் கொட்டகைகள் மற்றும் சிறுதானிய விளை பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பய ன்படுத்திக்கொள்ளலாம்.
2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறி விக்கப்பட்டு, கொண்டா டப்பட்டு வருவதால் விவ சாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து அறுவடை செய்த மக்காச்சோளம்,கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறு தானி யங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளை யும் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகராட்சி கூட்டத்தில் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் ரவிகண்ணன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்வமணி, ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜா மான்சிங், சுரேஷ்:-
நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படா ததால் 20 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் நிலவுகிறது. எனவே குடிநீர் வழக்குவதை முறைப்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன்:-
வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைகளை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகுமார்(தி.மு.க):-
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தனியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
சுகாதார அலுவலர் ராமச்சந்திரன்:-
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வமணி, துணை தலைவர்:-
நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப் படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதார அலுவலர்:-
பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தற்போது குறைந்த அளவு குடிநீர் வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது, ஒப்பந்தப்படி சரிவிகித அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கேட்டுக்கொண் டார்.
- வங்கி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 21). கோவையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள குக்குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படு கிறது.
இதை அறிந்த உறவி னர்கள், அந்த பெண் தங்கை முறை என்று அசோக்கிடம் தெரியப் படுத்தினர். இதையடுத்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை அசோக் நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் அசோக்கின் சகோதரிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அசோக் ஊருக்கு வந்தி ருந்தார். அப்போது ஊர் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது.
பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அசோக் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இளம்பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் அசோக்கை வழி மறித்து இளம்பெ ண்ணுடன் பேசி பழகுவதை நிறுத்தி யதை கண்டித்து ள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்கை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சதீஷ்குமார் தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த அசோக் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.
- குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
- நிர்வாகத்தில் தவறு நடப்பதாகவும் புகார் வந்தது.
விருதுநகர்
விருதுநகர் நாரசபை கூட் டம் தலைவர் மாதவன் தலை மையில் நடைபெற்றது துணைத்த லைவர் தனலட் சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் மதியழ கன், பால்பாண்டி, கலையர சன் உள்ளிட்டோர் வார்டு மக்களின் தேவைகளை கடந்த கூட்டங்களில் தெரிவித்தும் அதுபற்றி எந்த தீர்மானமும் கொண்டு வராத நிலை ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
கவுன்சிலர் முத்துராமன் சொத்து வரி கட்டிய வர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது வரி கட்டா விட்டால் வீட்டை பூட்டி விடுவோம் என்று மிரட்டும் நிலை உள்ளதாக புகார் கூறினார். இதற்கு பதிலளித்த தலைவர் மாதவன் இதுபற்றி தனக்கு தகவல் இல்லை என்றும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கைகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நகராட்சிநிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என்றார். நக ரில் பல்வேறு பகுதி களில் குடி நீருடன் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் ஜெயக்குமார், முத்து லட்சுமி, ராமச்ச ந்திரன் உள்ளி ட்டோர் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் பிருந்தா தனது வார்டு பகுதியில் மக்கள் கூறிய பிரச்சினைகள் பற்றி நகரசபை நிர்வா கத்திடம் தெரிவித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறியதுடன் எனது வார்டு மக்கள் உனக்கு ஓட்டு போட்டு எங்களுக்கு என்ன சேவை செய்தாய் என்று கேள்வி எழுப்பும் நிலை உள்ள தாக வேதனை தெரிவித்தார்.
கவுன்சிலர் மதியழகன் இதேநிலை அனைத்து கவுன் சிலர்களுக்கும் ஏற்பட்டுள்ள தாக கூறினார். நகராட்சி பூங்காவில் மாவட்ட நிர்வா கத்தின் அறிவுறுத்தலில் வைக்கப் பட்ட விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்ட நிலை யில் அது பற்றி விசாரணை நடத்தாமல் மீண்டும் விளம் பர பலகை வைப்பதற்கு டெண்டர் கோரியதற்கு கவுன்சில ர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆட்சேபனை தெரிவித்தனர்.
கவுன்சிலர் ஆறுமுகம் நகர சபை நிர்வாகத்தில் தவறு நடக்கிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாத த்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.
- மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு மாயிருளம்பட்டியை சேர்ந்தர் பொன்ராஜ்(வயது41). இவரது மனைவி பால்பாண்டி யம்மாள். கடந்த 29-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் பொன்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது சகோதரர் மதுசூதனன் பால்பாண்டி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பொன்ராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துைற மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.