என் மலர்
நாமக்கல்
- பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் அருக ருகே இயங்கி வருகிறது. மேலும் தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
- இதனால் பழைய பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் அருக ருகே இயங்கி வருகிறது. மேலும் தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர் அருகில் உள்ள பொத்தனூர், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள், பொது மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அகற்றப்பட்டு பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழைய பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. எனவே இதில் ஏதாவது 2 கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில், பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் 4 டாஸ்மார்க் கடைகள் இருப்பது தேவையற்றது. இதை 2 ஆக குறைக்க வேண்டும். உள்ளூர் அரசி யல்வா திகள் ஆதிக்கத்தால் 4 டாஸ்மாக் கடைகள் வந்தது, பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது என்றனர்.
- பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
- பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் வெள்ளைச்சாமி (வயது 58). கூலி தொழிலாளியான இவர், பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் வெள்ளைச்சாமி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்கா மல் சென்ற வாகன ஓட்டு னர் குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
- 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
இதனை அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல், தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானிய விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்ற வராக இருக்கக் கூடாது. மேலும் சிறு, குறு விவ சாயிகள், பெண் விவசாயி கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளி 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் இம்மாதம் 13-ந் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
- கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கடன்கள் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.
தனி நபர் கடனாக திட்டம் 1-ன் கீழ் கடன் பெற விரும்பும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கு வேண்டும். திட்டம் 2-ன் கீழ் கடன் பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ரூ. 30 லட்சம் அதிகபட்சமாக கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 6 முதல் 8 சவீதம் வரை விதிக்கப்படும்.
சுய உதவிக்குழு கடன் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கல்விக்கடன் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 3 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கைவினைஞர்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.
விருப்பமுள்ள சிறுபான்மை சமூகத்தினர், அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவேண்டும். கடன் மனுக்களுடன், தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்த கடன் உதவியை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம்.
- திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி யைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ண னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
நான், எனது மனைவி செல்வி மற்றும் 2 மகள்கள், 1 மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன்.
தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது 2 மகள் களும் மீட்கப்படவில்லை.
அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம். எனவே எங்களின் 2 மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு,
- 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.
தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சங்ககிரி ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். 4 மற்றும் 5-ந் தேதிகளில், சங்ககிரி ரவுண்டானாவில் இருந்து வேலூர் மற்றும் ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ரோடு, மலை சுத்தி ரோடு, வாலரைகேட் வழியாக செல்ல வேண்டும். வாலரை கேட்டிலிருந்து நாமக்கல், சேலம், சங்ககிரி செல்லும் வானங்கள் மலைசுத்திரோடு வழியாக செல்ல வேண்டும்.
தேர் திருவிழாவின் போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பழமை வாய்ந்த திருத்தேரின் நன்மையைக் கருதி, பக்தர்கள் தேரின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியவில்லை.
எனவே பக்தர்கள் அனைத்து பூஜைகளையும், திருத்தேரின் முன்பாக செய்து, சாமி தரிசனம் செய்து அருள்பெருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோ ஷத்தினை முன்னிட்டும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியினை முன்னிட்டும் ஏகாம்பரநாதருக்கு தாரா பாத்திரம் (சல்லடையின்) மூலம் தொடந்து நீர் சொரியும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்க ளில் உள்ள சிவபெரு மானுக்கு வளர்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கலில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
அதன்படி 500 காசுகளாக இருந்த முட்டை விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை, படிப்படியாக அதிகரித்து இன்று 505 காசுகளாக இருப்பதால் ஒரே மாதத்தில் முட்டை விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பது முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கறிக்கோழி விலை 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் நீடிக்கும் என பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.