search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.

    இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

    குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

    இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    • கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    நாமக்கல்:

    சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில்,

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக குற்றம்சாட்டி அவரது தாயார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

    • ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது45). விவசாயி. இவரது மகன் மகன் லோகேஷ் (17). அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷ் (42). இவரமு மகன் சுதர்சன் (14).

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுதர்சன், லோகேஷ் ஆகிய இருவரும் ஆம்னி வேனை ஓட்டி பழகுவதற்காக வீட்டில் இருந்து எடுத்தனர். ஆம்னி வேனை சிறுவன் சுதர்சன் ஓட்டினார். இருவரும் பரமத்தி சென்றுவிட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கபிலர்மலை பாகம்பாளையம் பிரிவு ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் லோகேஷ், சுதர்சன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். காரை ஓட்டி வந்த கபிலர்மலை அருகே கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் அறிந்த நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் பரமத்தி போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுதர்சன் ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இது குறித்து மோட்டார் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் காரை ஓட்டி சென்று விபத்து நிகழ்ந்ததற்காக சுதர்சனின் தந்தை ரமேஷ் என்பவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டியில் தேர்தலை சந்தித்தனர். இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தே.மு.தி.க.வுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1 என 7 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

    இதில் அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து இருந்தார். இவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. வினர் ஒன்றிணைய அழைப்பு விடுத்திருந்தார்.

    இவரது அழைப்பை நிராகரித்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.-க்கு அழைப்பு விடுக்க தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை என்று தெரிவித்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடைந்தது எதிரொலியாக, கட்சி ஒன்றுபட வேண்டும் என்று கூறி அதிமுக தொண்டர் மொட்டையடித்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இதுகுறித்து பேசிய அதிமுக தொண்டர், "அதிமுக கட்சி ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அன்போடு எடப்பாடி பழனிசாமி, தங்கமணி அண்ணன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது. 27-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.40 ஆனது. 28-ந் தேதி மேலும் 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது. 29-ந் தேதி முட்டை விலை சரிவில் இருந்து மீண்டு 5 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது. நேற்று 30-ந்தேதி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு 1 முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை-600, பர்வாலா-425, பெங்களூரு-570, டெல்லி-450, ஐதராபாத்-495, மும்பை-570, மைசூர்-570, விஜயவாடா-490, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-525.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.140 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    • அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி,

    வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). கட்டிட மேஸ்திரி.

    நேற்று முன்தினம் முத்துக்குமாரை குரும்பல மகாதேவி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமார் குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கிருபா(26) குளியலறைக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்த கிருபா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

    அப்போது அவரது கணவர் சுவர் ஒரத்தில் குப்புற விழுந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்னேரி பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தபோது டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்துள்ளது.

    அதை பார்த்தவர்கள் இது குறித்து டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த துரைசாமி இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடைக்குள் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • கல்லூரி தாளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளைத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் காலை முதலே வருமான வரி சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
    • தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33), இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உள்ளார். தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (60), தாய் சுமதி ஆகியோர் மட்டும் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, பொன்முடி, சுப்பிரமணியம், எ.வ.வேலு, மூர்த்தி, மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சபரீசன், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி மின் மயானத்தில் ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே டி.வி.ரவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் ரவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் 10.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் இங்கிருந்து காரில் மு.க.ஸ்டாலின் வெண்ணந்தூர் சென்றார். அங்கு தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் 12.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் சேலம், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இருவரும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மேலும், இந்த விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா உயிரிழந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    • சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
    • பேரன் பகவதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் 'சிக்கன் ரைஸ்' உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவர் சாப்பிட்ட உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி இருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி (விஷம்) கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தொழிலாளி சண்முகம் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தொழிலாளி சண்முகம் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பேரன் பகவதி ஒப்புக்கொண்டார்.

    காதல் விவகாரத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லியை கலந்து கொடுத்தாக பகவதி ஒப்புக்கொண்டார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் நதியாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழப்பு.
    • உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை.

    நாமக்கல் மாவட்டத்தின் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

    இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது.

    உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×