search icon
என் மலர்tooltip icon

    வேலூர்

    • தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
    • இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது.

    வேலூர்:

    வேலூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளையும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர். மேலும் பலர் நன்றாக மது குடித்துவிட்டு தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

    தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் இன்று குவிந்த மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அதுபோன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களைகட்டியது.

    • நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

    அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

    இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.

    வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.

    தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.

    நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.

    புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
    • பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

    வேலூர் :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.

    அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.

    அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
    • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

    தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

    பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

    பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

    குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

    சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

    பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

    இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

    இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார்.
    • ’வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி’ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்று பையனையும் கலாட்டா செய்தார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரசாரத்தில் சினிமாவில் வருவது போது போல தன்னுடைய பாணியிலேயே வசனங்கள் பேசி வருகிறார்.

    தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார். இதோ, இவன்தான் நான் பெத்த பையன். சோத்தைத் தின்னுட்டு வீட்டுல கிடந்தான்.

    'வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி'ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்" என்று பையனையும் கலாட்டா செய்தார்.

    நேற்று வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்த அவர் எனது சின்னம் பலாப்பழம் உங்களுக்கு இனி நோ ப்ராப்ளம் என பஞ்ச் வசனம் பேசி ஆதரவு கேட்டார்.

    • 21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
    • தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் நேற்று அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடி வேலூரில் பிரசாரம் செய்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், நரசிம்மன் (கிருஷ்ணகிரி), பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), வக்கீல் பாலு (அரக்கோணம்), கணேஷ் குமார் (ஆரணி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் கோட்டை மைதானத்திற்கு வந்தார். கோட்டை முன்பு அண்ணாசாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர். பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கோலை பரிசாக வழங்கினார்கள்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் உங்களிடம் தமிழில் பேசாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

    வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

    உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.

    இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், கடவுள் முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

    2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.

    இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.

    வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.

    தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.

    மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.
    • வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.

    வேலூர்:

    வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்:-

    அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார்.

    • நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.
    • திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிரித்தாளும் அரசியலை திமுக செய்து வருகிறது.

    * மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வகையில் கருத்துகளை பரப்புகிறது திமுக.

    * முழு நாடும் தமிழின் பெருமையை அறிய வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது.

    * நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்.

    * குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அழைக்கிறேன்.

    * நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.

    * நான் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது திமுக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

    * காங்கிரசும், திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது.

    * தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது திமுக, காங்கிரஸ் கண்ணீர் வடிக்கிறது.

    * தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் இருந்து உயிரோடு மீட்டுக்கொண்டு வந்தேன்.

    * நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

    * திமுக, காங்கிரஸ் சனாதனத்தை அழிப்பதை பற்றி பேசி வருகிறார்கள்.

    * திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள்.

    * திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    * தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதை வேலூர் மக்கள் அறிவார்கள்.

    * ஜெயலலிதா குறித்து எப்படி எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது மக்களுக்குத்தெரியும்.

    * ஏப்.19-ந்தேதி தமிழகத்தின் பெருமையை காக்க, வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    * உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்.

    * அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன்.

    பெரியோர்களே, எனக்கு ஆசி வழங்குவதற்காக, எனக்கு ஆதரவு தருவதற்காக வந்துள்ள இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.

    • வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.
    • உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.

    வேலூரில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கினார்.

    பின்னர் அவர் மேலும் பேசியதாவது:-

    என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்.. தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.

    பொது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தகாண்டில் தமிழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.

    வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது.

    வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருகன் பெருமானை நான் வணங்குகிறேன்.

    வரலாற்று சிறப்பு கொண்ட வேலூர் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்க இருக்கிறது.

    21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.

    2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தி தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன.

    உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.

    விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.

    உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலையம் அமையம் உள்ளது. சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது.

    இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.

    முழு திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாக மாறிவிட்டது. திமுகவின் செயலால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட 3 தகுதிகள் வேண்டும்.

    ஊழல் செய்வதில் திமுக காப்புரிமை பெற்று இருக்கிறது.

    மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கி உள்ளது.

    மணல் கொள்ளை மூலம் ரூ.4,300 கோடி ஊழல். போதைப் பொருள் விற்பனையில் சிறு குழந்தைகள் கூட விட்டு வைக்கவில்லை.

    வரும் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார்.
    • உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    வேலூர்:

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் மோடியை கோஷம் எழுப்பி உற்சாகமாக பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.

    தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார். தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி.

    பொன்னாடை அணிவித்து பிரதமர் மோடியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கவுரவித்தனர்.

    பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

    * வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி.

    * உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    * இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி.

    * அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×