search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.

    தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.

    மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து அவர் கடந்த 22-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நாளை (29-ந் தேதி) மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பிஎம்பி சல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டப் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.

    அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பன்றியை வெட்டி இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
    • சம்பவம் குறித்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,50,000-யை வசூலித்தனர்.

    ஏரியூர்:

    பென்னாகரம் அருகே பதனவாடி காப்புக்காடு நெருப்பூர் சிறுதங்கள்மேடு பகுதியில் கன்னிவலை வைத்து காட்டுப்பன்றியை பிடித்து கொன்று இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக விற்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பதனவாடி காப்புக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

    இங்கு நெருப்பூர் சிறுதங்கள் மேடு பகுதியில் மர்மநபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை கன்னி வலை வைத்து வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தகவலையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சக்திவேல், வனக் காப்பாளர் சங்கர், கணேஷ், செல்வகுமார் உள்ளிட்ட வனகுழுவினர் பதனவாடி காப்புக்காடு நெருப்பூர் சிறுதங்கள் மேடு வனபகுதியில் தீவிர ரோந்து பணியில் மேற்கொண்டனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாது மகன் மணிமுத்து (வயது 33), ஆத்து மேட்டூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பண்ணன் (32), சத்யாநகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் அபிராமன் (37), பண்ணவாடியான் காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வன்னியன் (50) ஆகிய 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.

    அப்போது 4 பேரும் சேர்ந்து கன்னி வலை வைத்து காட்டு பன்றியை பிடித்து, அந்த பன்றியை வெட்டி இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,50,000-யை வசூலித்தனர்.

    வனப்பகுதியிலோ அல்லது வெளியே வரும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைக்கு அனுப்பப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.
    • போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    தருமபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சவுமியா அன்புமணி கடந்த 25-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.

    இதையடுத்து விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி டவுன் போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஒரு வாகனத்தினை பறக்கும் படையினர் தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனை சாவடியில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 கிலோ தங்கம் மற்றும் 250 கிலோ வெள்ளி ஆபரணங்களாக செய்யப்பட்டு உரிய ஆவணங்களுடன் பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது.

    உரிய ஆதாரங்கள் இருந்த போதிலும் அந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தமிழகத்திற்கு உண்டான அனுமதி இல்லாததால் வாகனத்தை ஆய்வுக்காக தொப்பூரில் இருந்து பறக்கும் படையினர் தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். காலை 10 மணிக்கு நிறுத்திய வாகனம் ஒரு மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் உடனே வரவில்லை.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சற்று காலதாமதத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் உள்ளிருக்கும் பொருட்களை அதன் உரிமையாளர் மட்டுமே திறக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

    உடனே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சொந்தமான உரிமையாளருக்காக தகவல் கொடுக்கப்பட்டு அவருக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மற்ற அரசு ஊழியர்களும் காத்துக் கிடந்தனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
    • காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிராக்டர் பேரணி தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது.

    அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    டிராக்டர்கள் அணி வகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் நர்மதா, காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் நிலையான கண்காணிப்பு குழு பறக்கும் படையினர் இன்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

    உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அந்த நபர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சின்னையா என்பதும், அவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெள்ளை பன்றிகளை ஏற்றி வந்து சேலத்தில் விற்பனை செய்து விட்டு ஆவணங்கள் இன்றி ரூ.4.50 லட்சத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.

    உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்பதால் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர். இதற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை தருமபுரியில் ரூ.17 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார்.
    • வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அடுத்த லலாகொட்டாய் பகுதியை சார்ந்த தங்கராஜ். இவரது மகள் காயத்ரி. இவர் தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து மருத்துவர் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, ரூ.50,000 செலவாகும் என தெரிவித்துள்ளார். அப்பொழுது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் காயத்ரியை பரிசோதித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

    தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் காயத்ரியின் உடல்நிலை மோசமான நிலையில் சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற உடலுறுப்புகள் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் சிகிச்சைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொழுது சுயநினைவின்றி இருந்து வருகிறார். இந்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவ இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், மருத்துவரின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
    • மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகம் குறைந்துள்ளது.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 4-வது நாளாக 200 கன அடியாக நீடித்து வருகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.

    தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி பறைகளாக காட்சியளிப்பதுடன் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

    • நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
    • தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ×