என் மலர்

    கரூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது
    • ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார்.

    வேலாயுதபாளையம்:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரூபா தலை நசுங்கிய நிலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலாயுதம்பாளையம்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு நித்யா தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதை எடுத்து நித்யா(28) அவரது கணவர் கதிர்வேல் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான நித்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;-

    எனது கணவர் இவர் ஈரோடு-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை வைத்துள்ளார்.

    ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார். இதனை எனது கணவரிடம் கூறினேன்.

    பின்னர் நகைக்கு ஆசைப்பட்டு ரூபாவை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த ரூபாவிடம் பவுத்திரம் பாலமலை முருகன் கோவிலுக்கு போகலாம் என நைசாக அழைத்தேன். அவரும் என் பேச்சை தட்டாமல் வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஏற்கனவே தயாராக இருந்த எனது கணவர் வந்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வைத்து நானும் கணவரும் ரூபாவின் கழுத்தை நெரித்து தலையில் கல்லை வைத்து நசுக்கி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தோம்.போலீசை திசை திருப்புவதற்காக அவரது களைந்து அரை நிர்வாணமாக்கி விட்டு தப்பிச் சென்றோம். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் சங்கத்தின் தொடக்க விழா

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்கத்தின் தொடக்க விழா சர்.சி.வி.ராமன் அரங்கத்தில் நடைபெற்றது.

    துறைத் தலைவர் மோகன்பிரசாத் வரவேற்றார். கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரி செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், சிறப்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக, சென்னை எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட். லிமிடெட் திட்டம் மற்றும் திட்டமிடல் தலைவர் இளங்கோ கலந்து கொண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்க விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் எலக்ட்ரிக் வாகனம் 2025 மற்றும் அதன் பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.சங்க ஆலோசகர் வினோத்குமார், 2023-24 கல்வியாண்டின் சங்க அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தற்காலிக செயல்பாடுகளை அறிவித்தார். முடிவில் சங்க செயலாளரும் , இறுதியாண்டு பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவருமான பாலமுருகன் நன்றி கூறினார் .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தளவாபாளையம் பகுதியில் திடீர் மின்தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
    • நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம், தோட்டக்குறிச்சி புகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக தளவாபாளையம் பீடரில் உள்ள வடிவேலம்பாளையம் அருகில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள மின்சார இன்ஸ்டலேட் ஒன்று பழுதானது . இதனால் திடீரென தளவாபாளையம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின்சார வயரை சீரமைப்பதில் பணிகள் தாமதப்பட்டது . அதேபோல் மின்சார இன்வேட்டர் பழுதானையும் உடனடியாக சரி செய்ய தொடர்ந்து இரவு நேரமாகியும் பின் சப்ளை இல்லாததால் மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள், பேக்கரி கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும்,வியாபார நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். அதேபோல் பொதுமக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர் . இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மின்வாரிய பணியாளர்கள் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயர்களையும் இன் வேட்டர்களையும் சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். இந்நிலையில் மின்சார வாரிய பணியாளர்கள் இரவில் வேலை செய்து கொண்டு இருந்தபோது அந்தப் பகுதிக்கு 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வேகமாக வந்துள்ளது. அதை பார்த்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தவுட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    • உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை சிகிச்சையில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இவர் யார் ? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை

     வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (61). விவசாயி . இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைத்திடுமாறி சரவணன் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சரவணனை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கோவை ரத்தினபுரி அருணா அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ38.49 லட்சத்துக்கு விற்பனை

    வேலாயுதம்பாளையம், 

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 53.98 1/2 குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.39-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 18ஆயிரத்து 26-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 511.23 குவிண்டால் எடை கொண்ட 1079-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.71-க்கும், சராசரி விலையாக ரூ.77.19-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.70.19-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து31ஆயிரத்து 11-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38லட்சத்து49 ஆயிரத்து 37-க்கு விற்பனையானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
    • இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை

     வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான, நொய்யல், மரவாபாளையம், புங்கோடை ,சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப் பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    தற்போது புகளூர் பகுதியில் ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய் தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என்ற பல்தொவேறு காரணங்களால் வெற்றிலை விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதேபோல் கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விற்பனை குறைந்துள்ளதால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை பாதுகாக்க இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை. பலமுறை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கிடங்கு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இனாம் நிலங்கள்திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,  

    புகளூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை முருகன் கோவில் மற்றும் புகழூர் வட்டாரத்தில் உள்ள கோவில் நிலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் நிலம் உள்ளது. இந்த இனாம் நிலங்கள், அறநிலையத்துறை க்கு சொந்தமான நிலம் என்று, அதனை திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இனாம் நிலங்கள்,மானிய நிலங்கள் , குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    40 முதல் 50 வருடங்களுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு மறுப்பதிவு செய்தும் கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு,சாலை வசதிகள் அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருவதாகவும், ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல் கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாக, இந்து அறநிலையத்துறையை கண்டித்து புகளூர் தாகிசல்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மானிய நிலங்கள் அனைத்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புகளூர் தாசில்தார் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புகளூர் வட்டாரத்தைச் சேர்ந்த இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் வீடு, மனை உரிமையாளர்கள் ,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்டனர். தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றதால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர்
    • 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் க.பரமத்தி செல்லும் பிரிவு சாலை அருகே அரசு அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக ஒருவர் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீஸருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து மது விற்பனையில் ஈடுபட்ட நொய்யல் குறுக்கு சாலையைச் சேர்ந்த முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பெரியரெங்கம் பாளையம் பகுதியில் உள்ள முள்காட்டுக்குள் மது விற்பனை செய்த பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி(48 )என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்
    • பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் ஆய்வுத்துறை தலைவர், வணிகவியல் (முன்னாள் பதிவாளர்), பேராசிரியர் மற்றும் சிஎம்பி தலைவர்சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கல்லூரியின் செயலாளர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்எஸ்.குப்புசாமி, கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், கல்லூரியின் டீன் (அட்மிஷன்) கே.சுந்தராஜு ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    மேலாண்மை துறைத்தலைவர்கே.ராஜேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும்போது தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றியும், தொழிலைத் தொடங்க விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோயம்புத்தூர் வனபிரஸ்தாவைச் சேர்ந்த மாணவர் குழுவினர தலைமைத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin