என் மலர்

    திருவள்ளூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன.
    • ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் மிகுந்து இருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் ஏராளமான வாகனங்கள் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டு இருந்தன. அப்போது சரக்கு வேன் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.

    இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றதால் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக சென்றன. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.

    ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை தாண்டி வந்தாலும் பெங்களூரு நெடுஞ்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக கிருஷ்ணா நீரை பயன்படுத்தி வந்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

    மேலும் தற்போது ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதை குறைத்துள்ளத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். 1.195 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
    • ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது.
    • 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த மாபுஸ்கான் பேட்டையில் கோழி தீவனம் தயார் செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்காக கோழி கழிவுகள்,மீன், இறால் கழிவுகள் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம்கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் இதனை பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள ஞாயிறு, மாபுஸ்கான் பேட்டை, பசுவன் பாளையம், வழுதிகைமேடு, பூதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் தீவனம் தயாரிக்க 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை மாபுஸ்கான் பேட்டை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

    ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

    குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொன்னேரி அருகே உள்ள ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் விதிமுறையயை மீறி சுமார் 20 அடி ஆழம் மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வெளியிடங்களுக்கு முறைகேடாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

    ஏரியில் மணல் அள்ளப்படுவதால் சுற்றி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட மான சூழ் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏரியில் மணல் அள்ளுவது தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    பொன்னேரி:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு வேன்களில் கொண்டு வரப்படும் ஆவின் பால் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டு அங்கிருந்து வியாபாரிகளுக்கு வினியோகிப்பது வழக்கம்.

    இதில் பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இன்றுகாலை 9 மணி வரை ஆவின் பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் நீண்டநேரம் காத்திருந்தனர். ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து ஆவின் ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் பால் பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டு செல்லப்படும் டப்புகள் அதிகமாக உடைந்து காணப்படுகிறது. இதனால் குறைவாக டப்புகள் உள்ளன. அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று வரும் அந்த டப்புகளை மீண்டும் பயன்படுத்தி எடுத்து செல்வதால் ஆவின்பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. புதிய டப்புகள் வருகிற திங்கட்கிழமை வருகிறது. அதுவரை இந்த காலதாமதம் இருக்கும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது.
    • தலைமறைவான மவுலியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் இக்கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது. இங்கு விபச்சாரம் அதிக அளவு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை, கொரட்டூரை சேர்ந்த பிரியதர்ஷினி(வயது23) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குகன்(வயது24) என்பவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள கார்த்திக் லாட்ஜுக்கு இளம் பெண்ணை அழைத்து வந்து தங்க வைத்தார்.

    பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் கார்த்திக்(வயது35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அநாகரீகமாக பேசி திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மவுலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் என்பவர் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்றும், முடி வியாபாரி என்றும், தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.