என் மலர்
திருச்சிராப்பள்ளி
- வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் வளன்நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சகாயமேரி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 14-6-2016 அன்று மாலை 3.45 மணிக்கு 4 பேர்் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.பின்னர் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த சேக் அப்துல்காதர் (34), நேருநகரை சேர்ந்த சபீர் முகமது (43), குத்பிஷாநகரை சேர்ந்த சாதிக்பாட்சா (43), சங்கிலியாண்டபுரம் உசேன் தெருவை சேர்ந்த முனீர்அகமது (37) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜரானார். இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சேக் அப்துல்காதர், சபீர் முகமது, சாதிக்பாட்சா, முனீர்அகமது ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
- 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
- 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
திருச்சி,
தமிழகத்தின் மையப்பகு தியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வளர்ந்துள்ளன. திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 ேகாடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்ப ட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி யில் டைடல் ப ார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவி னர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சி க்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க ப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்ப ணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமை ப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கை யில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்க ட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது.
- துறையூரில் தி.மு.க.பிரமுகரிடம் பட்டப்பகலில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
- வங்கியிலிருந்து எடுத்து வந்த போது மர்ம நபர்கள் கைவரிசை
துறையூர்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). இவர் உப்பிலி யபுரம் தெற்கு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலா ளராக இருந்து வருகிறார். துறையூர் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கி லிருந்து ரூ. 2 லட்சம் பண த்தை எடுத்து, இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு சென்று ள்ளார். நீதிமன்றம் எதிரே உள்ள கடையின் முன்பு இரு சக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து ள்ளார். அப்பொழுது அடை யாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை கள்ள சாவி மூலம் திறந்து, பணத்தை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த சுப்பிர மணியன் திருடன், திருடன் என சத்தம் போட்டு உள் ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தன்னு டைய கூட்டாளியின் இருச க்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
- திருச்சி ராம்ஜிநகரில் இளம்பெண் மாயம்
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராம்ஜிநகர்
திருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவரது கணவர் ராமச்சந்திரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் தீபிகா (26) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தீபிகா கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற தீபிகா வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது அவர் எங்கும் காணவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து சாந்தி ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவெறும்பூர்.
உலக சுற்றுலா தினமான இன்று, திருச்சி சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை கல்லூரி மாணவர்கள் கொண்டு தூய்மை பணியானது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பரவல் இல்லை இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தாலுகா ஆபீசில் உள்ள இ சேவை மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் தொகை வழங்கப்படும் என்றார்.
- இன்று கோலாகலமாக நடைபெற்றது
- குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம்
,
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் கடந்த 17-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக அன்று இரவு 7:15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார் பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்வாக 18-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது. 19-ந் தேதி ஸ்வர்ண சிம்க வாகன சேவையும், 20-ந் தேதி அனுமந்த வாகன சேவையும், 21-ந் தேதி கருட சேவையும், 22-ந் தேதி சேஷ வாகன சேவையும், 23-ந் தேதி கஜ வாகன சேவையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா 24-ந் தேதி நடைபெற்றது. 25-ந் தேதி அஸ்வ வாகன சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று (26-ந் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதை யடுத்து காலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்த ட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தேர் வீதி உலா வந்தது. தேரோட்டத்தில் திருச்சி வடக்கு தி.மு.க. செயலாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், குணசீலம் ஊராட்சி தலைவர் குருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. நாளை (27 -ந் தேதி) இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28-ந் தேதி இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- லாட்டரி விற்ற 5 பேர் கைது
- திருச்சி திருவெறும்பூரில் லாட்டரி விற்ற 5 பேர் கைது
திருவெறும்பூர், திருச்சி மாவட்ட சிறப்பு தனிப்படையினர், திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த, வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 4-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 42), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார்(48), பாத்திமாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன்( 52 ) பாரதிதாசன் நகர் 7வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 46 ) ஆகிய 5 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம்,ஒரு மொபட், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஐந்து பேரும், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில், சிறப்பு தனிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- 100 நாள் வேலையில் நிலுவை சம்பளம் வழங்கவில்லை
- பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி சங்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வார காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் சங்கம்பட்டி - எரகுடி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் மழையின் காரணமாக சேறாக இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சங்கம்பட்டி- எரகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
- உறவினர்கள் சாலை மறியல்
துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அபிராமி (28) என்கிற மனைவியும், ஜஸ்வந்த் (5), சாகித்யா (2) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்த் இரவு வேலை காரணமாக துறையூருக்கு சென்று வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லும் பொழுது, அம்மாபட்டி பிரிவு சாலை அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த வர்கள் ஆனந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆனந்தின் தந்தை துரைசாமி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இறந்த ஆனந்தின் உறவினர்கள் சம்பவ நேரத்தில் அங்கு இருந்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த நபர்கள் தான் ஆனந்தை கொலை செய்ததாகவும்,போலீசார் உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி துறையூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முசிறி போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- பெயிண்டர் தற்கொலை
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பெயிண்டர் தற்கொலை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் . இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (29) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்படிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.