என் மலர்

    கிருஷ்ணகிரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த மிட்டஅள்ளி பாரத கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு சசிகலா, சரண்யா, செவ்வந்தி ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் (26) என்ற மகனும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

    கடைசியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று மாலை பச்சையப்பனும், பாப்பாத்தியும் அவர்களது பேரன் தட்சன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் மணிகண்டனும், அவரது தங்கை சரண்யாவும் சென்றனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பச்சையப்பன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பச்சையப்பன், பாப்பாத்தி, தட்சன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே 3 பேரும் விபத்தில் காயமடைந்ததை கண்டு மணிகண்டனும், சரண்யாவும் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பனும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள சென்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிவேதா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் நிவேதா இறந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் வசந்தகுமார் (வயது33). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சூளகிரி அருகே காமன்தொட்டி மேம்பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம், கொண்டலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது53). இவர் நெடுங்கல்-காவேரிப்பட்டணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலையான்கொட்டாய் என்கிற இடத்தின் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக இருச்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியம்மாள் உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி,

    பொது வினியோக திட்ட துணை பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளர், கிருஷ்ணகி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பனை சங்க மேலாண்மை இயக்குனர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தமிழரசு மற்றும் 17 கூட்டுறவு சார் பதிவாளர்கள், 5 முதுநிலை ஆய்வாளர்களை கொண்ட பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த குழு கிருஷ்ணகிரி, பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தவறு இழைத்த ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன.
    • சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவில் 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி வருகிற ஜூன் 8-ந் தேதி வரை நடக்க உள்ளன.

    இதையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம் மற்றும் பல்வேறு வாகனங்களில் நரசிம்மர் நகர் வலம் வருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தன.

    இதில், சீர்வரிசைகளுடன், சிறப்பு யாகம் நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றி நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றன. திருக்கல்யாணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய், இரவு கருட வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று(வியாழக்கிழமை) காலை அபிஷேகம், அலங்காரமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு யானை வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அசோக் என்பவர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அசோக் என்பவர், ஏற்கனவே தங்கள் மகளை கடத்தி சென்றார்.

    அவரிடமிருந்து சிறுமியை மீட்டு வந்தோம். இந்த நிலையில் மீண்டும் சில நாட்களிலேயே கடைக்கு சென்ற தங்கள் மகளை அசோக் என்பவர் கடத்தி சென்றுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளான். அசோக், மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அழகேசன், முத்து, ராஜேஷ், சின்னதிம்மன் ஆகியோர் உதவியுடன் தங்கள் மகளை கடத்தியுள்ளார்.

    தங்கள் மகள் உயிருடன் உள்ளாரா என்று பயமாக உள்ளது. இது குறித்த விவரங்களுடன், மகளை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் போலீசார் பெங்களூரு - ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.

    அதை வைத்திருந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போல ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 320 கிலோ ஹான்ஸ், பான்மசாலா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து குட்கா கடத்தியதாக கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும், 320 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓசூர் சிஷ்யா பள்ளி அருகே ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து தரவேண்டும்
    • கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து 2 மாதமாகிறது, குப்பைகளும் சரியாக அகற்றப்படுவதில்லை.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தை தொடங்கிவைத்து பேசிய மேயர் சத்யா, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, விரிவாக பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    துணை மேயர் ஆனந்தய்யா (தி.மு.க):- எனது 7-வது வார்டுக்குப்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேறி அருகிலுள்ள ஏரியில் கலக்கிறது.

    இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். இதேபோல் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்தும், பழுதடைந்த சாலைகளை சீர்செய்யவும் மேயர் மற்றும் ஆணையாளர் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

    சீனிவாஸ் (8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்)

    மாநகராட்சியில், கவுன்சிலர்களுக்கு மரியாதையே இல்லை. அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் மதிப்பதே இல்லை.எனது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தி தருமாறு கடந்த 6 மாதமாக கேட்டு வருகிறேன். யாரும் கண்டு கொள்வதேயில்லை.

    எனது வார்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து 2 மாதமாகிறது, குப்பைகளும் சரியாக அகற்றப்படுவதில்லை.

    இப்படி அடிப்படை வசதிகள் எதையும் பூர்த்தி செய்யாமல் இருந்தால், ஆட்சிக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும்? என்று ஆவேசத்துடன் கொதித்தெழுந்தார்.

    வி.ஜெயப்பிரகாஷ் (அ.தி.மு.க):- எனது 42-வது வார்டு பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதை எப்போது திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் சினேகா," மாநிலம் முழுவதும் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை, முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார் என்று பதிலளித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜெயப்பிரகாஷ், பொதுமக்களின் நலனுக்காக, ஓசூர் சிஷ்யா பள்ளி அருகே ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில், அசோகா, மஞ்சுநாத், புருஷோத்தம ரெட்டி, குபேரன் என்ற சங்கர், சிவராம், முருகம்மாள் மதன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், மற்றும் மாதேஸ்வரன், சென்னீரப்பா, நாகராஜ், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இந்திராணி, பா.ஜ.க. உறுப்பினர் பார்வதி நாகராஜ் ஆகியோரும் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினர். கூட்டத்தில், 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • மதியழகன் கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து பயன்பாட்டிற்காக மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காத்தாடிகுப்பம் கிராமம் மற்றும் எலத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாக அந்த பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று ரூ. 10 லட்சம் மதிப்பில் புதியதாக ட்ரான்ஸ்பார்மர் காத்தாடி குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய அதிகாரி ஏஞ்சலா சகாயமேரி தலைமை வகித்தார். மின்வாரிய அதிகாரிகள் இந்திரா, நாகராஜ், சுப்பிரமணி, செல்வம், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து பயன்பாட்டிற்காக மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, அஸ்லம், பாலேப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ஜெசிந்தா வில்லியம், குட்டி, ஸ்டாண்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print