search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகை அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து 10-ந் தேதி அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி திருமங்கலம் பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் கடந்த மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் பெரியாறு பிரதான கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு வைகை அணையில் இருந்து ஆற்றில் 1504 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களுக்கு சிவகங்கை வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு அணையில் இருந்து வைகை ஆற்றில் மொத்தம் 619 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது வைகை அணையில் இருந்து இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை மொத்தம் 3 நாட்களுக்கு மதுரை வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு வைகை ஆற்றில் மொத்தம் 343 மி.கன அடி திறக்கப்படுகிறது. அணையில் இருந்து வைகை ஆற்றில் இன்றும் நாளையும் வினாடிக்கு 1500 கன அடி வீதமும், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 970 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று வைகை அணை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. வரத்து 1291 கன அடி. நேற்று வரை 1334 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4276 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. நேற்று வரை 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6143 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.20 அடி. வரத்து 114 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடி. வரத்து மற்றும் திறப்பு 64 கன அடி.

    வைகை அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    • பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் அர்ச்சகர் கீர்த்தி வாசகன் ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. டி.எஸ்.பி. கீதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் கோவில் செயல்அலுவலர் ஹரிஷ்குமார், அ.தி.மு.க. மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார்.
    • மன உளைச்சலுக்கு ஆளானவர் விஷம் குடித்து மயங்கினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 61). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார்.

    இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்காளை விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்காளை உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
    • இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் சோத்துப்பாறை சாலை, மஞ்சோடை வராக நதி கரையோரம் அமைந்துள்ள லட்சுமிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட அரசு மோட்டார் ரூமில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.

    இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, ஜெேகந்திரன் ஆகியோர் மோட்டார் ரூமில் மின் வயர் திருடியது தெரிய வந்தது. ஜெகேந்திரனை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணை கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் மேலூர், கள்ளந்திரி பாசனத்துக்கும், அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 3169 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 2352 கன அடி நீர் வருகிறது. அணையில் நீர் மட்டம் 65.16 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.35 அடியாக உள்ளது. 1451 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தேக்கடி 2.2, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, ஆண்டிபட்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
    • இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ஒண்டி மலையடிவாரத்தில் சன்னாசியப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சன்னாசியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.இறைவன் கருட பகவான் வடிவில் வந்துள்ளதாக எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை கண்டமனூர், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

    தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதபுரம் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழையால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய த்தில் குமணன்தொழு, கோம்பைத்தொழு, பசுமலைதேரி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் மிளகாய் தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3 மாதம் வரை ஒரு கிலோ மிளகாய் ரூ.40 வரை சந்தைகளில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து காணப்படுவதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.

    இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மிளகாய் வரத்து அதிகரித்தால் விலை குறைவதும் வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிளகாய் விவசாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைப்பதில்லை.

    எனவே மிளகாய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print