search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மயிலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்
    X

    மயிலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்

    • மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்காததால் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக திண்டிவனத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்து பஸ் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ்சில் சிக்கி தவித்தனர்.

    Next Story
    ×