search icon
என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைக்குப் பின் அசாஞ்சே என்ன செய்கிறார் என்ற தகவல் ஏதும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது
    • சிறையில் இருந்தபோது அசாஞ்சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

    அமெரிக்க ராணுவத்தின் முறைகேடுகளையும் ரகசியங்களையும் தனது விக்கிலீக்ஸ் நிறுவனம் மூலம் அம்பலப்படுத்தியதற்காக  கடந்த  2010 முதல் 14 ஆண்டுகள் தாய்நாட்டையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து சிறைகளில் வாழ்ந்தவர் 53 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே . லண்டன் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தின் முன் ஆஜரான நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே போதுமான சிறைவாசத்தை அசாஞ்சே லண்டனில் அனுபவித்த நிலையில் சுதந்திர மனிதனாக அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து வெளியில் நடந்து வந்தார். அசாஞ்சேவுக்கு உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். அனைத்து சர்ச்சைகளும் முடிந்து தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு அசாஞ்சே உடனடியாக திரும்பிச் சென்றார்.

     

    விடுதலைக்குப் பின் அசாஞ்சே என்ன செய்கிறார் என்ற தகவல் ஏதும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் கடற்கரையில் இருக்கும் வெகேஷன் புகைப்படங்களை பகிர்த்துள்ளார்.

     

     

    முன்னதாக லண்டன் சிறையில் இருந்தபோது அசாஞ்சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் விடுதலையாகி வந்த பிறகு ஒவ்வொரு நாளும் கடலில் நீந்தி ஆனந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிந்ததாக அறிய முயந்தது. அதை நினைவாக்கும் விதமாகவே தனது சுதந்திரத்தை அசாஞ்சே கொண்டாடி வருகிறார். 

    • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார்.
    • இந்த வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் டாசனின் விரல் அகற்றப்படும்

    பாரிஸ்  ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30 வயதான ஹாக்கி வீரர் மாட் டாசன் [Matt Dawson]  தனது விரலை துண்டித்துக்கொள்ள மடுவெடுத்துள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. 117 பேர் கொண்ட அணியை இந்தியாவும்  அறிவித்துள்ளது.

    அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார். கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்சில் ஆஸ்திரேலேயே ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மாட் டாசன். இந்நிலையில்  விளையாட்டின்போது மேட் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டாசன் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் எழுந்தது.

     ஒன்று நீங்கள் உங்கள் விரல் குணமடையும் வரை விளையாடக்கூடாது அல்லது உங்கள் விரலை நீக்கியாக வேண்டும் என்று டாசனின் மருத்துவர் தெரிவிக்கவே, அவர் தனது விரலை அகற்றும் முடிவை எடுத்துள்ளார். 

    இந்த முடிவு குறித்து மாட் டாசன் பேசுகையில், இந்த வாய்ப்பு பாரிஸில் விளையாடுவதற்கானது மட்டுமல்ல, வாழ்கைக்கானது. பலர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவோ இழக்கின்றனர். நான் இழக்கப்போவது வெறும் விரலை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

     

    பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி அர்ஜென்டினா ஹாக்கி அணியை ஆஸ்திரேலிய அணி  எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
    • பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம்.

    வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட குப்பை குவியல்களில் இருந்து பொருட்களை சேகரித்து அவற்றை பணமாக்கி ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

    சிட்னியை சேர்ந்தவர் லியோனார்டோ அர்பானோ. 30 வயதான இவர் சிட்னியின் தெருக்களில் தூக்கி வீசப்பட்ட குப்பைகளை தேடி செல்கிறார். அங்கு உள்ளூர் நிர்வாகம் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை அகற்றும் சேவைகளை பொது மக்களுக்கு வழங்குகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பர்னிச்சர்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை தங்களுக்கு வேண்டாம் என்றால் வெளியே வீசிவிடுகின்றனர். அதுபோன்ற பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.

    இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.56 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம். அவற்றை கையாள்வது அல்லது எடுத்து செல்வது கடினமாக இருக்கும் என்பதால் அவற்றை எடுக்க மாட்டேன் என அர்பானோ கூறுகிறார். இவ்வாறு கிடைக்கும் பணத்தை தனது வீட்டு வாடகை செலுத்த பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

    • மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
    • காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

    காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

    • மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது.
    • மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கழக ஊடகமான ABC பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் இந்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து  Spies, Secrets And Threats - Infiltrating Australia  என்ற தலைப்பில் யூடியூபில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மீது இந்தியா ரகசிய போர் தொடுத்துள்ளது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் களத்தில் நரேந்திர மோடி இருக்கும் காட்சிகளுடன் தொடங்கும் அந்த ஆவணப்படத்தில் மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், இந்து தேசியவாத அமைப்பு என்று சுட்டப்படும் ஆர்எஸ்எஸ், இந்திய பாராளுமன்றத்தை வலதுசாரிகள் வசம் வைத்திருக்க முயல்கிறது அதற்காக நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் பாடமும் பயிற்சியும் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'இந்த ஆவணப்படத்தின் மூலம் இந்தியா ஆஸ்திரேலிய விவகாரங்களில் ஊடுருவ முயல்வது குறித்தும் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்கள் குறித்த விசாரணையை நாங்கள் வெளியிட்டுள்ளோம் 'என்று இந்த படத்தின் நெறியாளர் அவானி தியாஷ் தெரிவித்துள்ளார். படத்தின் உருவாக்கத்தின்போது தான் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    1984 சீக்கிய கலவரங்களுக்குப் பின் மீண்டும் தற்போது பூதாகரமாகியுள்ள காலிஸ்தான் விவகாரம் குறித்தும் கனடா அமெரிக்கா போன்ற வநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறிவைக்கப்படும் நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் உரையாடல் நிகழ்த்தி இந்த விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு குறித்தும் அலசப்பட்டுள்ளது.

    இதுதவிர்த்து, ஆஸ்திரேலியாவில் இந்திய உளவாளிகள் நடமாட்டம் மற்றும் இந்தியாவின் தலையீடு குறித்த பார்வையை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. பிரதமர் மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக  2002 குஜராத் கலவரத்தோடு அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி வெளியான பிபிசி ஆவணப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரும், கால்நடை மருத்துவருமான குளோ என்பவர் சிங்கத்தின் நாக்கில் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் ஒன்றை பொருத்தினார். அப்போது சிங்கத்தின் இதயத்துடிப்பை அந்த கைக்கெடிகாரம் காட்டியது.

    மேலும் கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது. இந்த நிகழ்வை அவர் வீடியோவாக எடுத்து `இதனைவிட சுவாரசியமானது என்னவென்று எனக்கு தெரியவில்லை' என்ற பின்குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

    இவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது.
    • வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கோ, ஆபரேசனின்போது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கோ ரத்த தானம் வழங்குவது இயல்பு. மருத்துவ வளர்ச்சியையும் தாண்டி இந்த ரத்த தானம் ஒரு மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி ரத்ததானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம், ஆயுட்காலம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இதற்காக ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார். இதனால் அவரை 'கொசு மனிதன்' எனவும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்தநிலையில் கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி ரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.

    அவரின் கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.


    • கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கி உள்ளனர்.
    • பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கி உள்ளனர். அப்போது பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். அதன்பிறகு ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் தலா 2 முறை, டிரம்ப், இப்போது ஜோ பைடன் ஒரு முறை என பல அதிபர்கள் வந்து விட்ட நிலையிலும், இந்த பர்கர் மட்டும் எதுவுமே ஆகவில்லை.

    இதுகுறித்து பர்கரை வாங்கிய இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து விட்டோம். அது அளவுக்கு அதிகமாக போய் விட்டது. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி பேசும் போது அந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத்தான் செய்தோம் என்றனர். சுமார் 30 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் அந்த பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. கெட்டுப்போன வாசம் கூட அதில் இருந்து வரவில்லை என கூறினர்.

    இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
    • அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு உணவு திருவிழா நடந்தது. அங்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சமையல் கலைஞரான 67 வயது பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

    இதையடுத்து "எங்கள் அன்பிற்குரிய தலைமை செப் சிட்னி மக்களுக்கு உணவு தயாரித்தார், ஆனால் யாரும் வரவில்லை" என்று உணவக குழு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது. அந்த வீடியோ 4.71 கோடி பேரின் பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் சமையல் கலைஞர் பாதம் வியாஸ் உலகப் புகழ் பெற்றார். அவரது உணவுகளைப் பற்றிய விவாதமும், இந்திய உணவு தயாரிப்பு பற்றிய கருத்துகளும் அதிகம் பகிரப்பட்டன.


    • விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
    • விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    நியூசவுத்வேல்ஸ்:

    ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர். முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

    இந்த நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த முதியவர் கூறியதாவது:-

    எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் பறக்கிறோம். லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எங்களால் கீழே இறங்க முடியாது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா? என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார்.

    எங்கள் விமானம் விமான நிலையத்தை 2 மணி நேரமாக சுற்றி வந்தது. காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரை யிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது. அதனால் தரையிறங்கும் போது தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே விமானி எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றார். அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான்.
    • சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×