என் மலர்
அமெரிக்கா
- விபத்தில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது, மற்றொன்று சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிவிபத்தால் அதிர்ந்தன.
- வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.
பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் அழிந்துபோனது, மற்றொன்று சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிவிபத்தால் அதிர்ந்தன.
இந்த வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தற்போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.
- அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது.
- உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர் என்றும் அப்போது ரெயில் விபத்தில் சிக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆவணமற்ற புலம் பெயர்ந்தோர் ரெயிலில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
- குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரில் விக்டர் மற்றும் அந்த பயணி கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இதன் தீர்ப்பு வெளியானது. இதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
- ரைபகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கலின்ஸ்கயாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
- லினெட் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைபகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கலின்ஸ்கயாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், ரஷியாவின் எவ்ஜெனியா ரோடினாவுடன் மோதினார். இந்த போட்டியில் லினெட் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
- கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது.
- பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன.
வாஷிங்டன் :
அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆம்புலன்சுகள் வந்து செல்வதற்கே மணிக்கணக்கில் பயண நேரம் ஆகியது. எனவே பலர் ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.
இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது.
- ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
- பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றினார்.
அமெரிக்காவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் டஸன் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
மற்ற ஆட்டங்களில் பாகுன்டோ பாக்னிஸ் (அர்ஜென்டினா), பிரன்டன் நகாஷிமா (அமெரிக்கா), எமிலியோ நவா (அமெரிக்கா), குய்டா பெல்லா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா)-எம்மா ரடுகானு (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள்.
2 மணி 33 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முசோவா (செக்குடியரசு), ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
- எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
- தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும்.
விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 43 வயதான மிண்டி கலிங் இயற்பெயர் வேரா மிண்டி சொக்கலிங்கம்.
- மேலும் 11 பேருக்கு ஜோ பைடன் இந்த உயரிய விருதை வழங்கினார்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு 'தேசிய மனித நேய விருது' என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்களை இந்த விருது கவுரவிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 'தேசிய மனித நேய விருது' வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை மிண்டி கலிங்குக்கு இந்த உயரிய விருதை வழங்கி ஜனாதிபதி ஜோ பைடன் கவுரவித்தார்.
வேரா மிண்டி சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட 43 வயதான மிண்டி கலிங், நடிகை, நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார்.
மிண்டி கலிங்கை தவிர்த்து மேலும் 11 பேருக்கு ஜோ பைடன் இந்த உயரிய விருதை வழங்கினார். விருது வழங்கும் விழாவில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.
- இதில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
நியூயார்க்:
உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் நீடிக்கிறது. அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது. தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- புயல் காரணமாக கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவை புயல் தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கி உள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். சாலைகளில் பலஅடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி உள்ளன. கடலோர பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிக்கின்றனர்.