search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை?- போலீசார் விசாரணை
    X

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை?- போலீசார் விசாரணை

    • வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர்.
    • வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 70). ஓய்வு பெற்ற மருந்தாளுனர். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவர்களுக்கு சுகந்த் (40) என்ற மகனும், இஷான் (8) என்கிற பேரனும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டினர் வெளியில் ரத்த கரைகள் படிந்திருந்தது.

    வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    இறந்து கிடந்த 3 பேரின் உடலை மீட்பதற்கு நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×