என் மலர்
தமிழ்நாடு
- தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
- தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பெருங்களத்தூரில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
- சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர்.
பெருங்களத்தூர்:
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர்.
பெருங்களத்தூரில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம். சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர்.
இதனால் சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன், ராயபுரம் மனோ, திருச்சி மனோகரன், தஞ்சை காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மருத்துவ அணி இணை செயலாளராக மருத்துவர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கிழக்கு, மேற்கு என இருந்ததை ஒருங்கிணைத்து, புதுச்சேரி மாநிலம் என மாற்றியமைத்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.
- சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.
சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சனாதன உத்சவ் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள், சனாதன தர்மத்தின் சான்றுகளாக உள்ளது.
சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது. சனாதனம் தமிழகத்தில் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.
சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
- எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மோடியே பிரதமராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.
கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசிய தலைமை தான் செய்யும். அவர்களின் வழிகாட்டுதல் படியே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு பணிகளும் நடக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு. தனி சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
இப்போதைக்கு தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறது. மாநில தலைவரும் தேசிய தலைமை முடிவு செய்யும் என சொல்லி இருக்கிறார். எனவே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.
மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசிய தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள். எனவே தேசிய தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை
கூட்டணி விஷயங்களை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசிய தலைமை தான் வழிநடத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
- சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:-
எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு பத்திரிக்கையின் வாயிலாக அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல் படிக்காத பாமரரையும் படிக்க வைத்த மிகப்பெரிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்றார்.
கே: அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா?
ப: சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை. தேசிய தலைமை முடிவெடுத்த பின் முடிவு சொல்லப்படும்.
கே: கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனரா?
ப: கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சி சார்பில் முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்.
- தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உத்தரவு.
ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.
- அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி சொன்னார். பின்னர் அவர் கூறியதாவது:-
அன்போடு, பாசத்தோடு, தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார். அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது என்றார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிளவு குறித்த கேள்விக்கு, தமிழர் தந்தை பிறந்தநாளில் நல்லவைகளை பற்றி மட்டும் பேசுவோம் என்றார்.
- அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
- சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சுமார் 20 நிமிட நேர சந்திப்புக்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கே: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடருகிறதா?
ப: தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன்.
கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறதே?
ப: இங்கு எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல், நீரோடை போகிற மாதிரி செல்கிறது.
கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: அவர்கள் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
கே: வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட வாய்ப்புள்ளதா?
ப: அதுபற்றி நாங்கள் இன்னும் பேசவே இல்லை.
கே: தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ் நாட்டின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதா?
ப: மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நமக்கு 8 எம்.பி. குறையலாம். ம.பி., உ.பி. மாநிலங்களில் அதிகமாகக் கூடும்.
அப்படி வரும்போது, இந்தியாவின் மொத்த வரைபடத்தில் நம்முடைய எண்ணிக்கை குறையும்போது, அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.
இந்தியா என்கிற ஒரு அமைப்பு ஒரு நாடு இன்றைக்கு இருக்கக்கூடிய நினைப்பு போய்விடும். அதனுடைய விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் எதிர்விளைவுகள் ஏற்படும். மிகப்பெரிய சோதனையில் போய் முடியும்.
கே: காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்பட எல்லாருமே ஒன்று சேர்ந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?
ப: சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் ரோட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கே: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அங்கு அவமரியாதை செய்கிறார்களே?
ப: நாம் அமைதியாக இருக்கிறோம். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. அதனால் அமைதியாக இருக்கிறோம்.
கே: 'இந்தியா' கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் தொடருதா?
ப: ஆமாம். கூட்டணியில் தொடருகிறோம்.
கே: திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக கூட்டணியில் இருக்கிறார்களா?
ப: எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
கே: திருமாவளவனுக்கு அ.தி.மு.க. தரப்பில் தூது விடுவதாக சொல்கிறார்களே?
ப: அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
- சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஆலந்தூர்:
மிலாது நபியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னையில் வசிக்கும் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தான் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் நாளை(28-ந் தேதி) கட்டணம், ரூ. 32,581 ஆகவும், 29-ந்தேதி ரூ. 28,816 ஆகவும் உள்ளது.
துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103, 29-ந் தேதி ரூ. 18,404 ஆக இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணமான ரூ. 7,620யை தாண்டி நாளை ரூ.15,676, 29-ந்தேதி ரூ.14,230 கட்டணமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்புக்கு ரூ.11234 (வழக்கமான கட்டணம் ரூ.6,698) ஆகும்.
இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. ஆனால் தற்போது இது ரூ.7,437 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது. நாளை ரூ.8,148, 29-ந்தேதி ரூ.9,771 ஆகும்.
மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853, ஆகும். நாளை ரூ.11,173, 29-ந் தேதி ரூ.9,975 ஆக உள்ளது.