search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில்  பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை
    X

    தருமபுரி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.  

    தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை

    • போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
    • முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனு கொடுக்க வந்தவர்கள் மற்றும் அவருடன் வந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×