search icon
என் மலர்tooltip icon
    • நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
    • ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

    ,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .



    இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு.
    • விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று அறிவிப்பு.

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் போயிங்

    ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும், இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர்.
    • தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா தனித் தன்மை கொண்டது.

    இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

    அன்றைய காலத்தில் கூண்டு வண்டிகளில் கட்டுச் சோற்றினை கட்டித்தொங்க விட்டு கூண்டின் மேல் சமையலுக்குத் தேவையான விறகு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வைத்திருப்பார்கள்.

    அவல், மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அரிசிமாவு போன்றவற்றை பைகளில் வைத்திருப்பார்கள், வண்டியின் மேலும், உள்ளும் அடியிலும் வைக்கோலைக்கட்டி வைத்திருப்பார்கள்.

    அரிக்கேன் விளக்கு வண்டியின் அடியில் தொங்கும் அந்த விளக்கொளியில் குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் முப்பது, நாற்பது வண்டிகள் முற்காலத்தில் உவரி விசாகத்திற்கு வந்து செல்வார்கள்.

    வழியில் கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.

    ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர்.

    விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள்.

    அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.

    வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.

    குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்.

    முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

    உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள்.

    இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங் களும் ஏராளம்.

    செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.

    நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

    கடலில் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.

    தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.

    குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவ தற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர்.

    விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும்.

    பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.

    பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர்.

    தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர்.

    வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

    • 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • 2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.

    மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • மயங்கிய நிலையில் கட்கரியை மற்ற தலைவர்கள் தாங்கியபடி அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவர் மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மல் என்ற இடத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியேனதால் தலைவர்களும், தொண்டர்கள் நிதின் கட்கரிக்கு என்ன ஆனதோ, என கவலை அடைந்தனர்.

    ஆனால், மயக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்ற வீடியோ எக்ஸ் பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

    நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன.
    • இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும்.

    தொழில்முறை கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் போன்ற விதிகள் இருக்கும் நிலையில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த விதியின்படி ஒரு வீரருக்கு மாற்று வீரராக களம் இறங்கும் நபர் பந்து வீசலாம், பேட்டிங் செய்யலாம். முன்னதாக பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். இந்த விதியின்படி சேஸிங் செய்யும்போது ஒரு பந்து வீச்சாளருக்குப் பதிலாக மேலும் ஒரு தரமான பேட்ஸ்மேனை களம் இறக்க முடியும். அதேபோல் பந்து வீசும்போது நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு பதில் தரமான பந்து வீச்சாளர்களை தெர்வு செய்யமுடியும்.

    நேற்றைய போட்டியில் சென்னை அணியில் சிவம் துபே முதலில் களம் இறங்கினார். ஆனால் 2-வது பேட்டிங் செய்யும்போது இவருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக சர்துல் தாகூர் களம் இறங்கினார். எல்எஸ்ஜி அணியில் டி காக் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினார்.

    இம்பேக்கட் பிளேயர் விதிக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பலர் தங்களது எதிர்ப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆடம் வோக்ஸ் இம்பேக்ட் பிளேயர் விதி, ஆல்-ரவுண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆடம் வோக்ஸ் கூறுகையில் "அணியின் ஸ்கோர்கள் உயர்ந்த வண்ணம் உள்ளன. அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன. இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும். ஆனால், ஆல்-ரவுண்டர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. ஆல்-ரவுண்டர் எப்போதுமே அணியை சமநிலைப்படுத்துபவராக இருப்பார். ஒருவேளை இம்பேக்ட் பிளேயரோடு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம்.

    இதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக்கில் பவர் சர்ஜ் (Power Surge) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிப்படி நான்கு ஓவர்தான் பவர்பிளே. அதன்பின் 11-வது ஓவரில் இருந்து இன்னிங்ஸ் முடியும் வரை பேட்டிங் செய்யும் அணி மீதமுள்ள இரண்டு ஓவர்களை எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த விதியால், சேஸிங் செய்யும்போது எந்த அணியும் போட்டியில் இருந்து வெளியேறியதாக நினைக்க தேவையில்லை. ஆனால், இந்த நேரங்களில் அதிகமாக விக்கெட்டுகளை அணிகள் இழந்துள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம்.

    இவ்வாறு ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி உள்ளார். மிஸ்ராவின் தங்கை திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருந்தது. இதையடுத்து தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க சந்திர பிரகாஷ் முடிவு செய்தார். இதனை அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது.

    இதனால் கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து நடத்திய பேச்சுவார்த்தை முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில் சந்திர பிரகாஷை சாபியின் சகோதரர்கள் சுமார் 1 மணிநேரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷின் மனைவி சாபி உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    • பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது.
    • காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    பன்ஸ்வாரா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முதல்கட்டமாக 12 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி 13 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இத்தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. இருந்தபோதிலும் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தேதிக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளரான ராஜ்குமார் ரோட்டை ஆதரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து அரவிந்த் தாமோர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    இதனால் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட அரவிந்த் தாமோருக்கு வாக்களிக்க வேண்டாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
    • இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத் திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவ பெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத் தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படு கிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியா குமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின் போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    ×