என் மலர்
- முதியவர் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் படிக்கட்டுகளில் ஏறி சென்று 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலில் பயணித்து வருகின்றனர்.
- லிப்ட் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவ தில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் வயதானோர் வரை படிக்கட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி,
ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் தருமபுரியில் ரெயில்வே தடம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தினர்.
தருமபுரி ரெயில்வே தடம் வழியாக டெல்லி, மும்பை, மாராட்டியம், கர்நாடகம் போன்ற வடமாநிலங்களில் இருந்து தென் தமிழகமான திருநெல்ேவலி, கன்னி யாகுமரி வரையும், மேற்கு பகுதியான கோயமுத்தூர், கேரளா வரையும் ரெயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தருமபுரி ரெயில் நிலையமானது வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலமான தமிழகத்தை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக உள்ளது.
காலப்போக்கில் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இதனால் ரெயில்வே நிறுத்தமாக இருந்த தருமபுரியில் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது ரெயில்வே தடம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரெயில்நிலையம் புதுபொலி வுடன் புதுப்பிக்கப்பட்டது.
இந்த ரெயில் நிலையத்தில் 3 பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி ரெயில் நிலையம் வழியாக தற்போது நாள்தோறும் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 6 பாசஞ்சர் ரெயில்களும், வாரந்தோறும் 8 சிறப்பு ரெயில்கள் உள்பட மொத்தம் 26 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பெங்களூருவில் இருந்து தருமபுரி வரை வரும் 2 பாசஞ்சர் ரெயில்கள் மட்டும் நின்று செல்லும், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 4 பாசஞ்சர் ரெயில்கள் 2-வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும்.
மற்ற 3 பிளாட்பா ராத்தில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் சரக்கு ரெயில்கள் நின்று பொருட்களை இறக்கி செல்வதற்காக பயன்படுத்த ப்பட்டு வருகிறது.
அவ்வாறு 2-வது பிளாட்பாரத்தில் நிற்கக்கூடிய ரெயில்களில் பயணிகள் ஏறி செல்வதற்கு வசதியாக ஒரு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தான் வயதான முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் படிக்கட்டுகளில் ஏறி சென்று 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் லிப்ட்டு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் படிக்கட்டுகளில் ஏறி கஷ்டப்படும் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும் என்று பல்வேறு அமைப்பி னர், கோரிக்கை விடுத்தனர்.
இதனையைடுத்து தருமபுரி ெரயில்வே நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் லிப்ட் வசதி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அங்கு லிப்ட் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவ தில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் வயதானோர் வரை படிக்கட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து பயணிகளுக்கும் தெரியும் வகையில் படிக்கட்டு மற்றும் டிக்கெட் கொடுக்கும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மற்றும் ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்
கடத்தூர், ஜூன்.2-
தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக தக்காளி பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு , பாக்ஸ் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விரக்தியில் விவசாயிகள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளரை கைது செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
- பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழை இலை - 2
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
* வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.
* இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
- அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுக்கள் எங்கும் விற்பனை செய்யப்படுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பேரிகை, சூளகிரி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
இதே போல ஓசூர் சிப்காட்டில் குட்கா விற்பனை செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னம்பேட்டையை சேர்ந்த முபாரக் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- வால்வோ C40 மாடலின் விலை, XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே இருக்கும்.
- தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
வால்வோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் C40 ரிசார்ஜ்-ஐ இந்திய சந்தையில் ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏற்கனவே வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலின் டூயல் மோட்டார் கொண்ட ஆல்வீல் டிரைவ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய C40 மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் தற்போது வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 56.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் வால்வோ நிறுவனத்தின் CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
காரின் உள்புறம் 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் மற்றும் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இக்கழிப்பறையைச் சுற்றிலும் அசுத்தமாகி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும்படி உள்ளது.
- கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்கள் ஆகமவிதிப்படி மட்டுமே இருக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவர் முருகேசன் மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தியிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி ஊராட்சி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சாமி கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் தைப் பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
இந்த கோவிலுக்கு அருகில் அழகான தீர்த்தக்குளம் உள்ளது. இந்த நீரைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இந்த குளத்தையொட்டி ஊராட்சி சார்பில் பொதுக் கழிப்பறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ளது.
இதனால் இக்கழிப்பறையைச் சுற்றிலும் அசுத்தமாகி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும்படி உள்ளது. கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்கள் ஆகமவிதிப்படி மட்டுமே இருக்க வேண்டும். மத்திய அரசின் வழிபாட்டு பாதுகாப்பு சட்டப்படி புனிதமான இடத்தை கெடுப்பது குற்றமாகும். கோவில் நிலங்கள் கோவில்களுக்கே சொந்தமானது. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
எனவே ஆகமவிதிக்கு புறம்பாகவும், சட்டத்திற்கு விரோதமாகவும் கோவில் தீர்த்தகுளத்தையொட்டி கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.
கோவை,
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார்,வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
- 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.
எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.