search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை
    X

    சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை

    • இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.
    • நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவில் பூசாரி சுப்பிரமணி (67). இவர் கடந்த 2017 -ம் ஆண்டு ஜுலை மாதம் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எ.பள்ளிப்பட்டி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட் நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா வாதாடினார்.

    Next Story
    ×