search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணமான 20 நாளில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்
    X

    திருமணமான 20 நாளில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்

    • திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
    • பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து சனோஜ்குமார் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்தவர் சனோஜ்குமார் சிங். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று புதுமண தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    ஆனால் திருமணத்திற்கு முன்பே பிரியங்கா குமாரி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இருவரும் வீட்டை விட்டு ஓடுவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இந்த விபரம் சனோஜ்குமாருக்கு தெரிய வந்தது.

    அவர், பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனது மனைவியை அவரது விருப்பப்படி காதலருடன் அனுப்பி வைத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×