search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மழை பெய்யாமல் இருக்க விஜய் கட்சி மாநாடு திடலில் அகல் விளக்கேற்றி வழிபட்ட பெயிண்டர்
    X

    மழை பெய்யாமல் இருக்க விஜய் கட்சி மாநாடு திடலில் அகல் விளக்கேற்றி வழிபட்ட பெயிண்டர்

    • மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதியக்கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்த உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் நிறுத்து இடம் போதாது கூடுதல் இடம் தேவை.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு இருக்க கூடாது. நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி ஏற்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் இடம் தேடினர். அப்போது விக்கிரவாண்டி அடுத்த கீழகொந்தை பைபாஸ் கிழக்கு பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவரும் தற்போது சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவருமான பொதுவால் என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி அடுத்த ஏழாய் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது36) பெயிண்டர். தமிழக வெற்றிக் கழக தொண்டராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது மகன்கள் அரவிந்த், அஸ்வின் மற்றும் அவரது தம்பி மகன் கவின் ஆகியோருடன் வி.சாலை மாநாடு திடலுக்கு வந்தார். அங்கு அகல் விளக்கேற்றி வழிப்பட்டார். இது குறித்து பாண்டியன் கூறும்போது, த.வெ.க. மாநாடு மழையால் பாதிக்கக்கூடாது. மாநாடு நடைபெறும் வரை மழை இருக்ககூடாது என வேண்டி வழிப்பட்டேன் என்றார்.

    Next Story
    ×