search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது.
    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, தென்காசி நகரம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. சிறிது நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.

    இன்று காலையில் மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் புலி அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் இன்று காலை சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காலை முதலே அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×