search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 ஆண்டுகளுக்கு முன்பு திருடிய விநாயகர் சிலையை அதே இடத்தில் வைத்து சென்ற கும்பல்
    X

    3 ஆண்டுகளுக்கு முன்பு திருடிய விநாயகர் சிலையை அதே இடத்தில் வைத்து சென்ற கும்பல்

    • பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர்.
    • வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவிகாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு டவுன் அவலூர் பேட்டை சாலையில் உள்ள குளம் அருகே திறந்த வெளியில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.

    அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். விநாயகர் சிலையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விநாயகர் சிலையை ஏற்கனவே இருந்த இடத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வைத்துச் சென்றனர்.

    மேலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து விநாயகரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×