search icon
என் மலர்tooltip icon

    ஆஸ்திரியா

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஆஸ்திரியா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜோடி உடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-5, 10-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் காலிறுதியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெய்லர் ஸ்விப்ட் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
    • டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட். இவரது பாடல்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.

    அந்த வகையில், டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவரது இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்களது வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

    தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றனர்.

    • ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.
    • இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது.

    பிரதமர் மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.

    அப்போது, "பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது" என்று மோடி பேசியுள்ளார்.

    ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். 

    • ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வியன்னா:

    ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம்.

    பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

    பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்கமுடியாது. அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய கார்ல் நெஹ்மர், உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியா ஒரு செல்வாக்கு பெற்ற நாடு. ரஷியா-உக்ரைன் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    • இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
    • கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வியன்னா:

    2 நாள் ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

    அதேவேளை, இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா வந்தது மகிழ்ச்சியளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்ல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடியை வியன்னாவுக்கு வரவேற்கிறேன். உங்களை ஆஸ்திரியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரியாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள். உங்கள் இந்த வருகையின்போது அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் பிரதமர் மோடியும், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளைய விவாதத்தை எதிர்பார்க்கிறேன். உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும் என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

    கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
    • கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

    தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது அரிய பொருளை கண்டுபிடித்தனர். இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

    பத்து கட்டளைகளைப் பெற்ற மோசஸூடன் இந்த தந்தப்பெட்டி இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புனிதமான ஆரம்பகால கிறிஸ்தவ பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நினைவுச்சின்னம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மிக நுட்பமாக, அதிக வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த பெட்டியானது இர்சென் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதியான பர்க்பிச்சலின் உச்சியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்திற்குள் ஒரு பலிபீடத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.

    கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஜெரால்ட் கிராபெர் என்பவர் கூறுகையில், உலகளவில் இதுபோன்ற சுமார் 40 தந்தப் பெட்டிகள் எங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை, கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியின் போது இவற்றில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

    • மியூனிச் சுங்க துறை அர்னால்டிற்கு அபராதம் விதித்தது
    • ஆஸ்திரியாவின் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட்டில் ஏலம் நடைபெற்றது

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger). கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்தவர் அர்னால்ட்.

    ஆஸ்திரியாவில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

    பயணத்தின் போது, தென் கிழக்கு ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகர விமான நிலையத்தில் அவரது உடைமைகளில், உடைமை பட்டியலில் குறிப்பிடாத விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம், சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

    ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர்.

    அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து, ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் (Stanglwirt Resort) எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் ஏலம் நடைபெற்றது.

    அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போனது.

    அங்கு நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய அர்னால்ட், "உலகளவில் மாசுபாடு குறித்து நடைபெறும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். நாம் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் வந்து விட்டோம். தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காண பலர் முன் வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாசுபாட்டிற்கு எதிரான் என் போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் என் நன்றி" என தெரிவித்தார்.

    இந்த ஏல நிகழ்ச்சியில் மொத்தம் 1.31 மில்லியன் யூரோ வசூலானது குறிப்பிடத்தக்கது.

    • பெட்ரோல் நிலையத்தில் டிரைவர் வேனை நிறுத்திய போது, டிரைவரை தாக்கி இனிப்புகளுடன் வேனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில், நியூ சவுத்வேல்சில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் டோனட்ஸ் அடங்கிய கிரீம் வகை இனிப்புகள் ஒரு வேனில் ஏற்றப்பட்டு டெலிவரிக்காக கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது பெட்ரோல் நிலையத்தில் டிரைவர் வேனை நிறுத்திய போது, டிரைவரை தாக்கி இனிப்புகளுடன் வேனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வேனை திருடியது ஒரு பெண் என தெரிய வந்துள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்
    • ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார்

    ஆஸ்திரியாவில் கிட்ஜ்புகேல் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஹுயேஸ்லர்- ஜெர்மனியின் ஆல்மையர் மோதினர். இதில் ஆல்மையர் 2-1 என வெற்றி பெற்றார்.

    முதல் செட்டை 7(7)-6(5) என ஹுயேஸ்லர் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் இழந்தார். இதனால் ஆல்மையர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓ'கானெல்-ஐ செர்பிய வீரர் எல். ஜெரே 2-0 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார். செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்.

    • ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது.
    • சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    வியன்னா:

    ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலியானவர்களில் ஒருவரான 75 வயது நோயாளி படுக்கையில் சிகரெட் புகைத்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

    சிட்னி:

    பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

    சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    சுரங்கம் மற்றும் கனிமங்கள் புதைபடிவ எரி பொருள் துறை, பசுமை எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் அதிபர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறும்போது, உலகின் தலைசிறந்த முதலீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

    இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    பிரதமர் மோடி, சிட்னியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை கொண்டாடும் சமுதாய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வர்த்தக மேம்பாடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

    முன்னதாக பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் எளிதில் திருப்தி அடையும் நபர் அல்ல. அதே போல்தான் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசை பார்த்திருக்கிறேன். இரு தரப்பு உறவுகளை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக இந்திய புலம்பெயர் மக்கள் உள்ளனர். அவர்களால் இரு தரப்பு உறவுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    உக்ரைனில் நடந்து வரும் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொண்டுள்ளது. நல்ல நண்பர்களாக இருப்பதன் நன்மை என்னவென்றால் நாம் சுதந்திரமாக விவாதிக்கலாம் மற்றும் ஒரு வருக்கொருவர் பார்வையை பாராட்டலாம். இந்தியாவின் நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொள்கிறது. அது (உக்ரைன் போர்) எங்கள் இரு தரப்பு உறவை பாதிக்காது.

    வளர்ந்து வரும் இரு நாட்டு உறவுகள், திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக்கை உருவாக்க ஆழமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தும்.

    இந்தோ-பசிபிக் பகுதி, காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், தகவல் தொடர்பு பாதுகாப்பு கடற்கொள்ளை போன்ற பல சவால்களை எதிர் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதமர் மோடி நாளை இந்தியா திரும்புகிறார்.

    • மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது.
    • ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.

    ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது. பின்னர் மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.

    பகிரப்பட்டதில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வீடியோவை பார்த்து பய்ந்துவிட்டேன். எனது மேஜை டிராயரை பூட்டி விட்டு போக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×