என் மலர்
புதுச்சேரி
- பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து கவர்னர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்ஜெட்டில் அறிவித்த படி எந்திரமயமாக்கல், கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு வழங்கிவரும் பராமரிப்பு செலவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி நுண்ணிழை, கட்டுவலை விசைப்படகுகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அரசின் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வழி முறைகள் வகுத்து அரசாணை வெளியிடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்
மணவெளி தொகுதியில் இடையார்பாளையம் பகுதியில் உள்ள குடுவையாறு கரையை ரூ.25.90 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.
மேலும் மணவெளி பகுதியில் உள்ள செட்டிகுளம் மற்றும் அதன் வாய்க்காலை ரூ. 7.16 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி வாய்க்காலை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் முக்கிய பிரமுகர்களான தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், இடையார்பாளையம் பகுதி முக்கிய பிரமுகர்கள் அர்ஜுனன், நாகராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் பழனி, என்ற தன்ராஜ், சீனிவாசன், ராஜாராமன், மணவெளி பகுதி முக்கிய பிரமுகர்கள் கலைவாணன், முருகன், பன்னீர், சசிகுமார், எஸ்.வி .எஸ். குமரன், ராமச்சந்திரன், சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
- அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு கண்ணன் நகர் பகுதியில் பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட பிரிவின் மூலம் பழைய வாய்க்காலை மாற்றி புதிய கான்கிரீட் வாய்க்காலாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
அப்போது பள்ளிக்கூட பகுதி என்பதால் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரி களை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
- திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
- அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள சொரப்பூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், மாக சாந்தி ஹோமம், முதல் யாகசாலை பூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை கலச புறப்பாடு நடைபெற்று, திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின்னர் மூலவர் மற்றும் சுற்றுப்புர பரிகார மூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சொரப்பூர் மற்றும் வடுக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
- கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
- வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக மதகடிப்பட்டில் இருந்து எம்.என். குப்பம் வரை பல்வேறு பகுதிகளில் சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வாகனங்களுக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தற்போது வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலை வழியாகவே சென்று வருகின்றன. இந்த சர்வீஸ் சாலையை ஒட்டி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதகடிப்பட்டு கடைவீதி பகுதியில் இந்த சர்வீஸ் சாலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கடைக்கி வரும் பொதுமக்கள் சர்வீஸ் சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் விழுப்புரத்திலிருந்து புதுவை வரும் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மேலும் மீன் கழிவுகளை சாலையிலேயே கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரங்களில் மீன் கடைகளை வைத்து விற்பனை செய்யும் கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி கடைவீதிக்கு அருகாமையில் உள்ள சந்தை பகுதியில் எந்தவித இடையூறும் இன்றி மீன்கள் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதிக்குட்பட்ட வரதப்பிள்ளை தோட்ட த்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்ப ணிகள் மேற்கொண்டு முகப்பு மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை மூலம் நிதி பெற்று தரகோரி அப்பகுதி பிரமுகர்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிகை விடுத்தனர்.
இது அடுத்து அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
அதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிதி அளிக்க ஒப்பு கொண்டனர். இதன் முதல் கட்டமாக கோவில் திருப்பணிக்கு கென்னடி எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கோவில் பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.
- கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.
- ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் எம்.பி.சி. பிரிவு 2008-ல் தொடங்கப்பட்டது. அப்போது 4 பிராந்திய மீனவர்களும் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதில் 20 சதவீதம் மீனவர் சமுதாய மாணவர்கள் பயன்பெற்றனர். அரசு எம்.பி.சியில் இருந்து இ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கி காரைக்கால் மீனவர்களின் கருத்தை கேட்காமல் அவர்களை இ.பி.சி.யில் சேர்த்தது.
புதுவை, காரைக்கால் மீனவர்களையும் இ.பி.சி.யில் வைத்து அவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு செய்தது தான் காரைக்கால் மீனவருக்கு இழைத்த அநீதியின் அடித்தளம்.
இதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.
எம்.பி.சி.யில் வைத்திருந்தால் காரைக்காலுக்கான 18 சதவீதத்தில் ஒரு சில இடங்களையாவது பெற்றிருப்பர்.
கடந்த 13 ஆண்டாக நிகழ்ந்து வரும் அநீதியை காரைக்கால் அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ கண்டு கொள்ளவில்லை. ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவர்களை இ.பி.சி.யில் இருந்து எம்.பி.சிக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
- உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.
இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.
- முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
- ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து வேலைவாய்பு முகாமை (3-ந் தேதி) கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் நடத்துகிறது.
காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
முகாமில் பிளஸ்-2 தேர்ச்சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 23-24-ம் கல்வியாண்டில் தமிழுடன் கூடிய சி.பி.எஸ்.இ. கல்விமுறை அமல்படுத்த ப்படும் என்ற அரசின் அறிவிப்பை வர வேற்கிறோம். இந்த கல்வி முறையில் அனைத்து பதிவிகள், நியமன விதிகள், ஊதிய விகிதங்கள், பணி நாட்கள் ஆணைகளை விரைவாக வெளியிட வேண்டும்.
மேல்நிலை கல்வியில் புதிய பாடப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். மொழி, விருப்ப பாடங்களை அதிகப்படுத்த வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுகாதார ஊழியர்கள் சம்மேளனம் கோரிக்கை
- அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுகா தாரத்துறை ஊழியர்களுக்கு நோயாளிகள் கவனிப்பு படி , செவிலியர் படி இந்த மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படி பிரிவு-8க்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு மாத ந்தோறும் ரூ.4 ஆயிரத்து 100 ஆகவும், பிரிவு 9-க்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 300 ஆகவும் உய ர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர் படி அனைத்து பிரிவினருக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்துத் 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அரசு சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கந்தன் வெயிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஊழியரும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2500 வரை கிடைக்கும். 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப் பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும். சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
நிலுவைத் தொகையோடு வழங்கும் வகையில் தான் கோப்புகள் அனுப்பப்பட்டது. தற்போது அரசு நிதிநிலை சரியில்லாத காரணத்தால் நிலுவைத் தொகை வழங்க சாத்தி ழ்யக்கூறு இல்லாததால் மாத ஊதியத்தில் மட்டும் உயர்த்தி வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளோம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஊதியத்துடன் இந்த தொகையை உயர்த்தி தந்துள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர்,
சுகாதார நிதி துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். கொரோனா நேரத்தில் ஒய்வின்றி உழைத்த சுகாதார ஊழியர்களுக்கு படிகளின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள அறிக்கையில் கூறியுள்ளனர்