search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    Pathirana
    X

    மெகா ஏலம்: சி.எஸ்.கே. அணியில் இடம்பிடிப்பது குறித்து பதிரனா சொல்வது என்ன?

    • முதல் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய பதிரனா 19 விக்கெட் எடுத்தார்.
    • சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு என்றார் பதிரனா.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா இடம்பெற்றுள்ளார்.

    பதிரனா 2022-ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரில் சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் டோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

    நான் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இருப்பேனா என தெரியாது. ஆனால் 2025 ஐ.பி.எல். தொடரை சி.எஸ்.கே. அணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

    Next Story
    ×