search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நாடு திரும்பும் இந்திய அணி வீரர்கள்.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் டெல்லி
    X

    நாடு திரும்பும் இந்திய அணி வீரர்கள்.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் டெல்லி

    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

    பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் தங்கினர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி நாளை காலை நாடு திரும்புகிறது. அணியுடன் புறப்படும் சிறப்பு விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்குகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்து விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

    Next Story
    ×