search icon
என் மலர்tooltip icon

    கேரளா

    • கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    • அவர்களின் பயிற்சி மற்றும் மற்ற ஏற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    முகமது அனாஸ், முகமது அஜ்மல் (இருவரும் ரிலே அணியில் உள்ளனர்), அப்துல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), ஹெச்.எஸ் பிரனோய் (பேட்மிண்டன்) ஆகியோருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி வீரர்களின் பயற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த முறையில் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும என நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். பிரனோய் நல்ல ஃபார்மில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    • குடை வாங்க கூட வழியின்றி தவித்தேன்.
    • 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம் ஆகும். வனம் மற்றும் நீர்நிலை பரப்புகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில் எங்கு பார்த்தாலும், கோடை காலத்தை தவிர மற்று காலங்களில் அனைத்து இடங்களிலும் மரங்கள் பச்சை பசேலென்றே காணப்படும்.

    பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்ளிலும் மழை கொட்டும். இதனால் பருவமழை காலங்களில் எப்போது மழை பெய்யும் என்பது தெரியாது எனபதால் வீட்டி லிருந்து வெளியே செல்லக் கூடிய பொது மக்கள் குடையுடனே செல்வார்கள். அனைவரின் வீட்டிலும் ஏராளமான குடைகள் இருக்கும்.

    இப்படிப்பட்ட சூழலில் கடந்த 49 வருடங்களாக ஒரு நபர் குடையே பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கனமழை கொட்டினாலும், கடும் வெயில் வாட்டி வதைத்தாலும் அவர் குடையை பயன்படுத்து வதில்லை. அவர் அவ்வாறு இருப்பதற்கு ருசிகரமான சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

    அந்த நபர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த மேத்யூ. கூலித் தொழிலாளியான இவர் கனமழை கொட்டினாலும் நனைந்தபடி தான் செல்கிறார். கடும் வெயில் அடித்ததாலும் குடையை பயன்படுத்துவதில்லை.

    49 ஆண்டுகளாக குடையை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் தொலைந்து போனபடி இருந்தது உள்ளிட்ட விஷயங்களை கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நான் கூலி வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி எல்சி எழுத்தறிவு வகுப்புகளை சொல்லிக் கொடுப்பவராக இருந்தார். அவர் வீட்டில் இருந்து வேலை விஷயமாக எங்கு சென்றாலும் குடை தேவைப்பட்டது. எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஒரு குடை வாங்கக்கூட வழியின்றி தவித்தேன்.

    இருந்தபோதிலும் எனது மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாங்கிக் கொடுக்கும் குடை எப்படியாவது தொலைந்துவிடும். மீண்டும் வாங்கி கொடுத்தாலும், அந்த குடையும் தொலைந்தபடி இருந்தது. எனது மனைவிக்கு அவரது தந்தை கூட 2 குடைகள் வாங்கி கொடுத்தார். அந்த குடைகளும் திருட்டு போகின.

    ஒரு முறை அரிசி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தில் மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் குடை வாங்கி விட்டதால், ஒருநாள் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உருளைக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டோம்.

    மற்றொரு முறை வங்கியில் அடகு வைத்த மனைவியின் நகையை திருப்புவற்கு ஏற்பாடு செய்த பணத்தில், மீதமிருந்த தொகையில் ஒரு குடை வாங்கினேன். இந்த இரு குடைகளுமே தொலைந்து விட்டன. 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    சாப்பாட்டுக்கு அரிசி வாங்கக்கூட கஷ்டப்பட்ட நேரத்திலும் மனைவிக்காக வாங்கிக்கொடுத்த குடைகள் அனைத்தும் தொலைந்தபடி இருந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக "இனி குடையை பயன்படுத்த மாட்டேன்" என்று சபதம் எடுத்தேன்.

    இந்நிலையில் எனது மனைவி எல்சி எலி காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அதன்பிறகு எனது குழந்தைகளை பராமரிப்பதற்காக கிளாரம்மா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தேன். தற்போது அவருடன் வாழ்ந்து வரும் நிலையில், குடையை பயன்படுத்த மாட்டேன் என்று நான் எடுத்த சபதத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் திருட்டு போன தால ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக எடுத்த சபதத்தை மேத்யூ 49 ஆண்டு களாக கடைபிடித்து வருவது மானந்தவாடி பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருந்ததை தொடர்ந்து பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.

      டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டு மின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் , நிபா வைரஸ் உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்களும் பரவியது.

      தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலம் அதில் உள்ள அமீபாக்கள், குளிப்பவரின் மூக்கு துவாரம் மற்றும் காதுமடல் வழியாக மூளைக்கு சென்று தாக்கு வதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் சிறுவர்களை பாதித்து வருகிறது.

      இந்த தொற்று பாதித்த மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி, கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாத காலத்துக்குள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

      இந்நிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த கோழிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான்.

      அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்தால் உயிர் தப்புவது மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோடு சிறுவன் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தான்.

      இந்தநிலையில் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக் கிறான். கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவ னுக்கு, அமீபிக் மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தீவிர சிகிச் சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டான்.

      அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சமீபத்தில் தளிபரம்பா அருகே உள்ள அருவியில் அந்த சிறுவன் குளித்திருக்கிறான். அப்போது அவனுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

      • ஆட்டோவை மறித்து பிடித்த பெண் போலீஸ் அதிகாரி.
      • சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்தவர் சுஜித். இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஜித், ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

      ஆனால் சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இருந்த போதிலும் வழக்கு விசாரணைக்கு அவர் வரவில்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டனர்.

      போலீஸ் சீருடையில் வந்தால் சுஜித் உஷாராகிவிடுகிறார். இதனால் அவரை பிடிக்க முடியாமலேயே இருந்தது.

      ஆகவே அவரை மாறுவேடத்தில் சென்று பிடிக்க பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா திட்டமிட்டார். அதன்படி அவர் சாதாரண உடையணிந்து சுஜித்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.

      இந்நிலையில் சுஜித் ஆட்டோவில் வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஆட்டோ வந்த சாலையில் பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா காத்திருந்தார்.

      சுஜித் வந்த ஆட்டோவை நிறுத்துமாறு அவர் சைகை காட்டினார். டிரைவரும் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஆட்டோவுக்குள் அதிரடியாக ஏறிய கிருஷ்ணா, அதில் இருந்த சுஜித்தை அதிரடியாக பிடித்தார்.

      மேலும் அவரது 2 கைகளையும் துணியால் கட்டினார். சுஜித்தை தப்பிவிடாமல் அழுத்தி பிடித்துக்கொண்டு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

      டிரைவரும் ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். அங்கு ஆட்டோ வந்ததும், சக போலீசார் வந்து சுஜித்தை பிடித்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

      அதன்பிறகே சுஜித்தை நடுரோட்டில் ஆட்டோவை மறித்து பிடித்த கிருஷ்ணா பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

      பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவரை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், சினிமா பாணியில் தனி ஆளாக சென்று பிடித்து கைகளை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட சுஜித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

      • கேரளவில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது.
      • காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் விலை உயர்ந்த போதை பொருளான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் போலீசாரின் சோதனையில் அடிக்கடி சிக்கி வருகிறது.

      இதனை பயன்படுத்துவம், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் என்றபோதிலும் பலர் விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

      எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மானந்தவாடி அருகே உள்ள பாவாலி சோதனைச் சாவடியில் கலால் புலனாய்வு பிரிவினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவரகள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த கல்ல புலனாய்வு பிரிவினர் காரில் சோதனை செய்தார்கள். அப்போது காரின் ஸ்டியரிங் 'செலோடேப்' ஒட்டப்பட்டு வித்தியாசமாக இருந்தது.

      அதனை பிரித்து பார்த்தபோது அதற்குள் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை காரில் கடத்தி வந்த பெங்களூரு நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

      அவர்கள் போதைப்பொ ருளை பெங்களூருவில் இருந்து கார் ஸ்டியரிங்கில் மறைத்துவைத்து நூதனமுறையில் கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் அதனை கலால் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து கைப்பற்றி விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளின் மதிப்பு பல லட்சம் ஆகும்.

      அவர்கள் பெங்களூ ருவில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொ ருளை கூடுதல் விலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொண்டுவந்தது விசார ணையில் தெரியவந்திருக்கி றது. கைது செய்யப்பட்ட நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

      • 300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது.
      • நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவியது.

      இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியானான். கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

      இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது. குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

      300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

      நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் இருந்து வந்துள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      நிவா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

      இந்த 2 ஊராட்சிகளிலும் நேற்று 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர். இதுவரை 26ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

      • பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.
      • தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்ததால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்தது.

      அங்கு வழக்கமான காய்ச்சல்களான டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

      இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரசுக்கு பலியானான். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

      இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.

      குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என 460 பேர் தொடர்பு பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஆபத்தான பிரிவில் 220 பேர் உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

      தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் 17 பேருக்கான பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

      இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை தொடரவேண்டும் என்றும், நெறிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மந்திரி தெரிவித்திருக்கிறார். 

      இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழு கேளா வந்தது. அவர்கள் தொற்று பாதித்த பகுதியில் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      மேலும் புனே வைராலஜி நிறுவனத்தில் இருந்து ஒரு மொபைல் பரிசோதனை வாகனம் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சேகரிக்க்ப்படும் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

      காய்ச்சல் பரவலை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அனக்காயம் மற்றும் பாண்டிக்காடு ஊராட்சிகளில் 7ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று காய்ச்சல் பாதிப்பு பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.

      அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அது மட்டுமின்றி இந்த 2 ஊராட்சிகளிலும் 18ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். 

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் பலியானான்.
      • கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவியிருக்கும் நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.

      அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உள்பட 406 பேர் சுகாதார துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் 139 சுகாதார பணியாளர்கள் உள்பட 194 பேர் ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

      கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் பரவலையடுத்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

      • திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
      • கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.

      இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.

      அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.

      இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.

      திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.

      திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

      • கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
      • பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.

      கண்ணூர்:

      கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

      கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.

      தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

      • உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
      • சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது.

      திருவனந்தபுரம்:

      காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி, இறந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி அவரது பெயரில் நிறுவப்பட்டுள்ள உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

      அதன்படி முதல் ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், விருதுச் சிற்பமும் கொண்டதாகும். சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

      பொதுமக்களின் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட சேவைகளுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

      • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
      • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

      இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

      இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும்  மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

      இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார். 

      ×