search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கறுப்பு நிற நாய் மூலம் நோய் தீர்த்த பாபா
    X

    கறுப்பு நிற நாய் மூலம் நோய் தீர்த்த பாபா

    • அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி.
    • என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    பால கணபதி என்ற சாயிபாபா பக்தர் ஒருவருக்கு ஒரு முறை மலேரியா சுரம் வந்து அவதியுற்றார்.

    பல டாக்டர்கள் கவனித்தும், பல மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணம் ஆகவில்லை. பார்த்தார் பல கணபதி.

    சாயிபாபா தான் சரணம் என சீரடிக்கு பயணமானார். சாயிபாபாவை தரிசனம் செய்தார். அவர் திருவடிகளில் வீழ்ந்தார்.

    பாபா கூறினார்: " வீட்டுக்குப் போ உன் மனைவி தயிர் சாதம் செய்து இருப்பாள்.

    அதை லட்சுமி ஆலயத்தின் வாசலில் கறுப்பு நிற நாய்க்கு கொடு! நோய் என்ற பேய் ஓடிவிடும்" என்று கூறினார்.

    கறுப்பு நாய்க்கு தயிர் சாதம் கொடுத்தால் எப்படி நோய் குணமாகும் என்று சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கை பொறுமை இரண்டும் இருகண்கள் என்பதாக நினைத்து, பாலகணபதி தம் இல்லத்திற்கு சென்றார்.

    என் கனவில் பாபா தோன்றி சீக்கிரம் தயிர் சாதம் செய் பசிக்கிறது என்றார் என்று பாலகணபதியிடம் அவருடைய மனைவி தன் கணவனிடம் கூறினாள்.

    ஆகவே தயிர் சாதம் செய்தேன் இந்தாருங்கள் என்று கூறி தயிர் சாதத்தை தந்தாள்.

    அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி. என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    அந்த ஊரிலேயே வசிக்கும் பாலகணபதி இது நாள் வரையில் அந்த நாயை கண்டதே கிடையாது.

    கறுப்பு நிற நாய்க்கு அன்புடன் தயிர் சாதத்தை கொடுத்தார் பாலகணபதி.

    அதுவும் சாதம் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டது. மறுநாள் மலேரியா நோய் பாலகணபதியை விட்டு எங்கோ மலை ஏறிவிட்டது.

    சாயி பாபாவின் மருத்துவமுறை இந்த உலக மருத்துவ முறையைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது அல்லவா?

    Next Story
    ×