search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஷாம்புவில் எண்ணெய் கலந்து தடவுவது உண்மையில் நல்லதா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஷாம்புவில் எண்ணெய் கலந்து தடவுவது உண்மையில் நல்லதா?

    • தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
    • உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

    அதேபோல, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவுவது அதிக நன்மை பயக்கும் என நம்பிக்கை உள்ளது. இதனால் கூந்தல் வலுவடைந்து, பளபளப்பை அதிகரிப்பதுடன், கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது. இன்னும் சிலர், கூந்தல் பராமரிப்புக்காக ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து முடிக்கு பயன்படுத்துவார்கள்.

    ஹேர் ஆயிலை ஷாம்பூவுடன் கலந்து தடவுவதால் உண்மையில் ஏதாவது பலன் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

    ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலப்பது புதிதல்ல. இந்த செயல்முறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் இது முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்த நிபுணர்களிடம் பேசினோம். ஷாம்புவில் கேரியர் ஆயில் அல்லது ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து தடவலாம் என்கிறார்கள். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

    தலை முடி உதிர்வதை நிறுத்துவதோடு, முடியை வலுவாக்கும். ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கலாம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    இருப்பினும், நீங்கள் எந்த வகையான ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

    இதுதவிர, நிரப்பப்பட்ட ஷாம்பு பாட்டிலில் ஹேர் ஆயிலைக் கலந்து குளிப்பதற்கு சிறிது நேரம் முன் தடவுவது நல்லது. இது உங்களுக்கு சேரவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.

    நன்மைகள்:

    பல முறை, சரியான அளவு எண்ணெய் மற்றும் ஷாம்பூவை கலந்து தடவுவது உச்சந்தலையில் இருந்து அரிப்புகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, ரோஸ்மேரி எண்ணெயை ஷாம்பூவில் தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இருப்பினும், உங்கள் உச்சந்தலையில் அரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். தூசி, மாசு போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டால், இந்த ஷாம்பூவில் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து உபயோகிப்பது நன்மை பயக்கும்.

    தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். இவற்றில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாட்டின் காரணமாக, முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்தும் முடிவடைகிறது. அதேசமயம் ஷாம்பு கலந்த எண்ணெயை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால், முடிக்கு ஊட்டமளிக்கிறது.

    Next Story
    ×